அஞ்சலி

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.


அஞ்சலி





லா. ச. ராமாமிருதம்




வானதி முதற் பதிப்பு : ஆகஸ்ட் 1994



திருநாவுக்கரசு தயாரிப்பு



விலை : ரூ. 32-00






நேரு அச்சகம், 43, அம்மையப்பன் தெரு, சென்னை-600,014


பஞ்சபூதக் கதைகள்

இக் கதையையும், இந்த அடுக்கில் நான் எழுதவிருக்கும் மற்றக் கதைகளையும் என் இளைய சகேரதரிக்குப் பக்தியுடன் சமர்ப்பித்துக்கொள்கிறேன். இருந்தவரையில், அவள் இக்கதையின் பின்னணியில் பாயும் காவிரியேபோல் கன்னியாகவும், தாய்மை நிரம்பியவளாயும், களங்கமற்றவளாயும், எல்லாம் தெரிந்தவளாயும், பாரியாகவும் இயங்கிவிட்டு பிறகு அஸ்திபூர்வமாக சமுத்திரத்தில் கலந்து நித்யையாகிவிட்டாள்.

எங்கும் நிறைந்த பேருயிரில் இப்பொழுது அவள் உறைவதால் என் சமர்ப்பணத்தை அவள் ஏற்றுக் கொள்கிறாள் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஏனெனில், இக்கதையைப் படிப்பவர் என் சத்துருக்களோ, மித்துருக்களோ, எவராயிருப்பினும் சரி, அவரை அது எப்படிக் கிளறினும்-ஆழ்ந்த சிந்தனையிலோ, நீண்ட பெருமூச்சிலோ, நெஞ்சின் தழுதழுப்பிலோ, கன்னத்தில் துளித்த ஒரு கண்முத்திலோ, கனம் தழைந்த புன்னகையிலோ- அவள்தான் அப்படித் தோன்றித் தெரிகிறாள்.

லா. ச. ராமாமிருதம்

உயிர்

கரையோரம், என் தோளில் பானையைத் தாங்கிக் கொண்டு நின்றேன். பானையில் விரிசலோ என்னவோ, பாலும் நீரும் கசிந்து, கழுத்திலும் மார்பிலும் வழிந்தது. கால்களை சிற்றலைகள் கழுவின.

“கொஞ்சம் முன்னால் வா-” சாஸ்திரிகள் என்னைப் பிடித்துக் கொண்டார்.

என் பலம் கொண்ட மட்டும் பானையை எட்ட சமுத்திரத்தில் வீசியெறிந்தேன். காத்திருந்த கைபோல் ஒரு அலை எழுந்து பானையை ஏந்தியதை விழி மறைத்த கண்ணிர்த் திரையூடே கண்டேன். அலையின் சுழிப்பில் என் தங்கையின் அஸ்தி அவ்வண்ணம் மறைந்த அந்த கrணமே ‘தரங்கிணி’ கருவூலமாய், அவள் பெயரோடு நெஞ்சில் ஊன்றிப்போனாள்.

அவ்வளவு சிறிய பொறியினின்று, கணத்திலும், த்ருனைத்தில் கதை எப்படி உண்டாகிறது?

இது இன்றைக்கு ஏறக்குறைய இருபத்தி ஏழு வருடங்களாய் எழுத்தில் ஈடுபட்டிருக்கும் எனக்கு இன்னும் புரியாத இன்பத் திகைப்பாய்த்தான் இருக்கிறது.

ஆனால் ஒன்று சொல்வேன், வாழ்வில் நித்தியத்தின் சாயை நம்மேல் படருவது ஒரு சில நிமிடங்கள்தான். அறிந்தோ அறியாமலோ, அந்நிமிடங்களுக்காகத்தான் நாம் உயிர் வாழ்கிறோம், நீக்கிறோம், வைத்திருக் கிறோம் என்றே எனக்குத் தோன்றுகிறது.

என்னெதிரே அகன்ற கடல் விரிவில் ஜலமுகமாய் என் சகோதரியை, ஜன்மத்தின் பிரதிநிதியாய் என் கற்பனையில் கண்டேன்-என்று ஒருவேளை சுலபமாய்க்கூட-இப்போது சொல்லிவிடலாம். ஆனால் அப்போது என்ன தோன்றிற்றோ அது தரங்கிணியெனும் பெயரில் அருவியாகப் பெருகிப் பாய்ந்து அதன் அழுத்தத்தினின்று நான் விடுதலை பெற்றேன்.

நான் ஏறிய கரையில் நின்று என்னின்று பெருகியதைக் கவனிக்கையில் நான் காண்பது இது அத்தனையும் என்ன எங்கள் குடும்பத்திற்கு நேர்ந்துவிட்ட சோகம். அதன் புயல் தணிந்து அப்புயலினின்றே பிரிந்த தென்றலென் சோகத்தின் காவிய சொரூபந்தானே!

ஆனால் இத்தனையும் அதன் அருவத்தில், அத்தனையும் அழிக்கும் துக்கத்தின் விபத்தில்கூட, நெஞ்சில் எப்படிப் பதிவாயிற்று? ஊழிக்கும் பின்னர் இருப்பேன் என இவ்வழி தன் அழியாமையை உணர்த்தும் உயிரின் பெருமைக்கு இதுதான் சான்றோ?

இவ்வுயிரே பஞ்சபூதங்களின் சேர்க்கைதானே? ஜலத்தின் தன்மையாய், உயிரின் தன்மையை ஒரளவேனும் ஆராய முடிந்தால், பிற நான்கின் களங்களிலும், அவை அவைகளின் இயல்பை உயிரில் உருவேற்றிக் கண்டால் என்ன?

இந்தச் சோதனையின் விளைவுகள்தாம் இந்த முயற்சி.

இம்மாதிரி நியமித்துக்கொண்டுவிட்டேனே, இது சாத்தியமா? இந்நியமனங்களை உருவாக்குவது எப்படி என்ற கவலை எனக்கு ஏற்படவில்லை. தரங்கிணிக்கு நேர்ந்ததுபோலவே மற்ற நால்வரும் தோன்றுவார்கள். முன்னே பின்னே அவ்வளவுதானே? எனும் நம்பிக்கை மாத்திரமல்ல, அவர்கள் ஏற்கெனவே தோன்றியிருக்கிறார்கள். சோதனையில் அவர்களை வெளிப்படுத்த வேண்டியதுதான் பாக்கி. சொல்லின் வேளையில் அவர்கள் வெளிப்படுவார்கள் எனும் தீர்மான உணர்வே எனக்கு உண்டு.

பார்க்கப்போனால், ஜன்மங்களே உயிரின் உடை மாற்றம்தானே! உயிரே, உணர்ச்சிகளின், எண்ணங்களின் வேஷப் பொருத்தம்தானே! ஆகையால் அந்தந்த வேஷம் அந்தந்த சமயத்தின் பொருத்தத்திற்கேற்ப வரும். அப்படி வருவதுதான் அதன் வெற்றி. அவ்வெற்றிதான் அதன் இலக்கணமுமாகும்.

காகிதத்தில் பேனா முள்ளால் கீறி, வெள்ளை கறுப்பானதுதான் எழுத்து அல்ல. எழுதினவன்தான் எழுத்தாளன் அல்ல.

எண்ணத்திலும், உணர்ச்சியிலும், உணர்விலும் உள்ள எழுச்சியிலுமே, நம் கையெழுத்தின் முழு சீறலுடன் கதையும், கவியும் நாம் சிருஷ்டித்துக்கொண்டேயிருக்கிறோம். நெஞ்சில் விழுந்த ஒவ்வொரு கீறலுமே ஒவ்வொரு தனித் தனிக் காவியம்தான். சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்றாள் கிழவி. அம்மாதிரியே இதுவும் ஒரு மனப்பழக்கம்தான். இம் மனப்பழக்கம்தான் ரஸானுபவம். இந்த ரஸானுபவத்தை இக்கதைகள் அளிப்பின், அதுவே வாசகர் அவரவர் மூலம், அவைகளின் நிறைவு.

பஞ்சபூதங்கள் தோன்றிய வரிசையில் இக்கதைகள் தோன்றவில்லை. இக்கதைகள் தோன்றிய வரிசையில்தான் இங்கு சேர்ந்திருக்கின்றன. தரங்கணிக் (ஜலம்) கடுத்த இரண்டு மூன்று மாதங்களில் ஜமதக்னி (அக்னி). அதற்குச் சில மாதங்கள் கழித்துப் பூரணி (பூமி). பூரணிக்கு ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்குப் பின் காயத்ரி (காற்று). அதற்கும் எட்டு வருடங்கள் கழிந்தபிறகு ஏகா (ஆகாயம்). ஆக மொத்தம், இவ்வரிசை முற்றுப்பெற பன்னிரண்டு வருடங்கள் பிடித்தன.

“இவர் இதழ்கள் என்று ஒரு வரிசை எழுதினார். இப்பொழுது பஞ்சபூதங்கள் என்று இன்னொரு வரிசையென்கிறார். இம்மாதிரி ஒரு வேலியைப் போட்டுக்கொண் டால்தான் இவருக்கு எழுத வருமோ?” என்று ஒரு நண்பர் (நான் அவரைச் சத்திக்கவில்லை) கேட்டதாக, இத் தொகுப்பு உருவாகிக் கொண்டிருக்கையில் எனக்கு எட்டிற்று.

இந்தக் கேள்விக்கு இரண்டுவிதமாயும் பதில் சொல்லலாம். இரண்டும் பொருந்தும்.

இவ்வரிசை தோன்றக் காரணம் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன். நண்பர் வேலி என்று மனதில் எதை வைத்துக்கொண்டு சொன்னாரோ அறியேன். ஆனால் அந்த ப்ரயோகம் எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கின்றது.

விடுதலை, விடுதலை என்கிறோம். உண்மையில் விடுதலையை அடைய முடியுமோ? பூரண விடுதலை என்பதே உண்மையில் உண்டோ? வேலிக்கும் விடு தலைக்கும் என்ன வித்தியாசம்? வேலி எட்ட நகர நகர நேரும் சிருஷ்டியின் விஸ்தரிப்பைத்தான் விடுதலையென்று கொள்ளலாம். ஆகையால், வேலி, விடுதலை இரண்டுமே மனநிலைகள்தாம். வேலியெனும் மனநிலையின் படிப்படி யான விடுதலையைத்தான் இவ்வுருவகங்களில் ஆராய முயன்றேன். இந்நோக்கம்தான் இக்கதைகளின் ஊக்கம் , உயிருக்கு அஞ்சலி,

லா. ச. ராமாமிருதம்

"https://ta.wikisource.org/w/index.php?title=அஞ்சலி&oldid=1519443" இலிருந்து மீள்விக்கப்பட்டது