கலைக்களஞ்சியம்/அனகப்பல்லி

விக்கிமூலம் இலிருந்து

அனகப்பல்லி விசாகப்பட்டினத்திலிருந்து மேற்கே 21வது மைலில் உள்ள அனகப்பல்லித் தாலுகாத் தலைமைப் பட்டணம். நகராட்சி உடையது. சாரதா நதி அருகில் உள்ளது. ஆரோக்கியத் தலமாகக் கருதப்படுவது. இந்நகரிலுள்ள நூகலம்மா கோவிலில் தெலுங்குப் புத்தாண்டுப் பிறப்பன்று எருமைப் பலி நடைபெறும். பித்தளை, இரும்புப் பாத்திரங்களுக்கும், துணிக்கும், சர்க்கரைக்கும் பேர்போனது. மக்: 40,102 (1951).