கலைக்களஞ்சியம்/அரசகேசரி

விக்கிமூலம் இலிருந்து

அரசகேசரி கி. பி. 16-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்தவர்; அரச மரபினர்; யாழ்ப்பாணத்து நல்லூரினர் ; ஆழ்வார் திருநகரி அட்டாவதானி இராமாநுச கவிராயரிடம் கல்வி பயின்றவர் ; வடநூல் இரகு வமிசத்தைத் தமிழில் செய்யுட்களாக இயற்றியவர்.