கலைக்களஞ்சியம்/ஆரேசீ

விக்கிமூலம் இலிருந்து

ஆரேசீ ஒற்றை விதையிலைக் குடும்பம். சேம்பு, கருணை வசம்பு, ஆகாசத் தாமரை,நாட்டு அதிவிடயம், யானைத் திப்பிலி முதலிய செடிகளும், தோட்டங்களில் இலையின் அழகுக்காக வைத்து வளர்க்கும் போதாஸ், பிலொடெண்ட்ரான், அரிசீமா, ஆந்தூரியம், கலேடியம் முதலிய செடிகளும் அடங்கியது. இக்குடும்பத்தில் 107 சாதிகளும் 1900 இனங்களும் உண்டு. இவை பெரும்பாலும் அயனமண்டலத்திலும், சிறுபான்மை சம தட்பவெப்ப வலயத்திலும் வாழ்பவை. சில மிகச் சிறிய பூண்டுகள். சில பெரிய பூண்டுகள். சில சிறு மரங்கள். சில வேர்களால் பற்றியேறும் பெருங்கொடிகள். சில தொற்றுச்செடிகள். சில சதுப்புச் செடிகள். ஒன்று, ஆகாசத்தாமரை, நீரில் வாழ்வது. பலவற்றில் பால் உண்டு; சில வகைகளில் அது வெண்மையாக இருக்கும். இந்தப் பால் விஷமும் விறுவிறுப்பு முள்ளது. செடிகளின் பல பாகங்களில் அணுக்களுக்குள்ளே கால்சியம் ஆக்சலேட்டுப் படிகங்கள் சாதாரணமாக ஊசி வடிவத்தில் கற்றைக் கற்றையாக இருக்கும். இவையும் மிக்க விறுவிறுப்புள்ளவை. செடியின் உடலியல் செய்கைகளினால் உண்டாகும் கழி வுப்பொருள்கள் படிக வடிவில் அங்கங்கே சேர்த்து வைக்கப்பட்டுச் செடியின் தற்காப்புக்கு உதவுகின்றன. இந்தக் கரகரப்பினால், வாய்க்கால் ஓரமெல்லாம் வளர்ந் திருக்கும் சேம்பை ஆடுகூடத் தொடுவதில்லை.

இந்தச் செடிகளில் தண்டு, கிழங்காகவும் மட்டத்தண்டுக் கிழங்காகவும் தரைக்குள் இருக்கும். அதிலிருந்து ஒட்டுவேர்கள் உண்டாகும். அடித்தண்டிலைகள் வளரும். நிலத்தின்மேலே தண்டுகள் வளரும் போது அவற்றிலிருந்து விழுதுகள் உண்டாகும். இந்த விழுதுகள் பற்றுவேர்கள் என்றும் உறிஞ்சுவேர்கள் என்றும் இரண்டுவகையாக இருக்கும். பற்றுவேர்கள் புவிநாட்டமில்லாதவை. ஒளியினின்றும் மறையும்குணம்

ஆரம் என்னும் சேம்பு வகை

1. செடி, 2. பூக்கொத்து, a. பெண் பூக்கள். b.ஆண் பூக்கள், c. மலட்டுப் பூக்கள், 3. கனிகள்.

மிகுந்துள்ளவை. இக் குணங்களால் இவை, தமக்கு ஆதாரமாக இருக்கும் மரத்தின் மேலே, சுவர்,பாறை முதலியவற்றின் மேலே, கிடைமட்டமாக வளர்ந்து, அவற்றிலுள்ள இடுக்குக்களில் புகுந்து ஆதாரத்தை இறுகப் பற்றிக்கொள்ளும். உறிஞ்சு வேர்கள் புவிநாட்டம் மிகுந்துள்ளவை; ஒளியினால் பாதிக்கப்படுவதில்லை. இவை நேராகக் கீழிறங்கி, நிலத்துவ் புகுந்து, கிளைகள் விட்டு உணவை உறிஞ்சும். இவ்வேர்கள் அயனமண்டல மழைக்காடுகளிலே 100 அடிக்கு மேலும் நீளமாகத் தொங்குவதுண்டு. தொற்றுச்செடிகளில் சிலவற்றின் வேர் நிலத்துள் இறங்காமல் சன்னல் பின்னலாக வளர்ந்து, செடியில் விழுந்து தங்கியுள்ள மரப்பட்டை, இலை முதலியவற்றின்மட்கில் (Humus) இருக்கும் உணவையும் பனி நீரையும் மழை நீரையும் உறிஞ்சும்.சிலவகைகளில் இந்த விழுதுகளின் மேற்புறணியில் உள்ளீடில்லாத அணுக்கள் வெலாமென் எனப்படும் வேர்ப்போர்வையாக வளர்ந்து நீரை உறிஞ்ச உதவும். ஆர்க்கிடுகளிலும் இவ்வித அமைப்புக்கள் உண்டு. (பார்க்க: ஆர்க்கிடு). இலைகள் பலமாதிரியாக இருக்கும். தனி முழு இலைசளும், பிரிவிலைகளும், கூட்டிலை களும் உண்டு. சில செடிகளில் ஒரே இலையுண்டாகும் (கருணை). அதன் காம்பு தண்டுபோலத் தோன்றும். பல செடிகளில் இலைக்காம்பு பருத்து, அதனுள்ளே யிருக்கும் அணுவிடை வெளிகளில் படிந்திருக்கும் கோழையின் உதவியால் மழை நீரைச் சேகரித்து வைத்து நீர்நிலைபோலச் செடிக்கு உதவும்.

பூக்கள்: சாதாரணமாக உருளை வடிவான சதைப்பற்றுள்ள ஒரு பூத்தண்டு ஆண்டுக்கு ஒன்று உண்டாகும். அதில் பல பூக்கள் திருகல் அமைப்பில் தோன்றும். இந்த மஞ்சரியைப் பெரிய இலைபோன்ற ஒரு பூவடிச் சிற்றிலை சூழச் சுற்றிக்கொண்டு காக்கும். இந்த இலைக்கு மடல் என்று பெயர். இதனால் இந்தப் பூக்கொத்து மடல் மஞ்சரி எனப்படும். பூக்களில் இரு பாலினவும் உண்டு; ஒரு பாலினவும் உண்டு. ஒருபாற் பூக்கள் பெரும்பாலும் ஓரகத்தின. அரிசீமா சாதியில் ஆண் செடி வேறு, பெண் செடி வேறு. இதழ் உள்ள பூ வகைகளுண்டு ; இதழில்லாப் பூ வகைகளுமுண்டு. கேசரம் இந்தக் குடும்பத்துக்கு இருக்க வேண்டியது ஆறு. சாதாரணமாகக் குறைவாகவே இருக்கும். ஒரே கேசரம்கூட இருக்கும். அப்படியென்றால் ஒரு கேசரமே ஒரு பூவாக இருக்கும். கேசரங்கள் போலியாகி மயிர்போன் றிருப்பதுண்டு. சூலகத்தில் பெரும்பாலும் ஒரு சூலிலையே இருக்கும். கனி சதைக்கனி. பலவற்றில் விதையின் வெளியுறையே சதைப்பற்றுள்ளதாக இருக்கும்.

பெண்பூக்கள் அல்லது பூக்களிலுள்ள பெண் உறுப்புக்கள் முதலில் முதிரும். பல சாதிகளில் பூ ஒருவகை நாற்றமுள்ளது.புலாலை விரும்பும் ஈக்கள் இந்த மஞ்சரிகளுக்கு வரும்.

இவற்றுள் மகரந்தச்சேர்க்கை நிகழ்வதை விளக்கச் சேம்புபோன்ற செடிகள் நல்ல உதாரணமாம். பூக் கொத்தைச் சூழ்ந்திருக்கும் மடல் அடியில் கிண்ணம் போல முழுவதும் சுற்றிலு மூடியும் இடையில் சிறுத்து அடிப்பாகத்தை ஓர் அறைபோலச் செய்தும், மேலே விரிந்து அகன்று பசுவின் காதுபோலக் குவிந்து இருக்கும். இந்த மடல் கண்ணைக் கவரக்கூடிய வண்ணமுடையதாகவும் இருக்கும். பூத்தண்டின் அடியில் மடலின் அடிப்பாகத்திலுள்ள அறையில் கீழே பெண்பூக்களும், மேலே ஆண் பூக்களும், இவற்றிற் கிடையே மலட்டுப் பூக்களாகிய மயிரும் இருக்கும். மயிர் கீழ்நோக்கியிருக்கும். பூத்தண்டின் மேற்பாகத்திலும் மலட்டுப்பூக்கள் மயிர்போல இருக்கும். இந்த மேற்பாகம் சிலவற்றில் அழகான நிறமுடையதாகவும் இருக்கும். இதிலிருந்து புலால் நாற்றம் அடிக்கும். ஈக்கள் நாற்றத்தை நாடி வந்து அறைக்குள் புகும். குளிர்நாடுகளில் பூக்கொத்தின் அறை வெளியிலுள்ள வாயுவைவிடச் சற்று வெப்பம் மிகுந்திருக்கும். இந்தக் கதகதப்பை விரும்பியும் ஈக்கள் அறைக்குள் செல்லும். பெண்பூக்கள் முதலில் முதிரும். ஆதலால் கீழறைக்குள் போகிற வழியில் முதிராத ஆண்பூக்களே இருக்கும். ஆண் பூ முதிர்ந்த இந்த இனச்செடி வேறொன்றிலிருந்து ந வருமாயின், அதன் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கும் மகரந்தப் பொடியுடன் உள்ளே செல்லும். மயிர்கள் கீழ்நோக்கியிருப்பதால் ஈக்கள் தடையில்லாமல் கீழே சென்று, அங்குள்ள பெண்பூக்களின் மேல் படும்போது அயல் மகரந்தச் சேர்க்கை நிகழும். அது நிகழும்வரை மயிர்கள் ஈயை வெளிவராமல் தடுக்கும். அது நிகழ்ந்த பிறகு மயிரெல்லாம் வாடிவிடும். அதற்குள் மேலிருக்கும் ஆண்பூக்கள் முதிர்ந்து, அவற்றிலுள்ள மகரந்தம், வெளியே வரும் ஈயின் உடலில் ஒட்டிக்கொள்ளும். இதே மாதிரி மகரந்தச்சேர்க்கை அரிஸ்டொலோக்கியா (பார்க்க: ஆடுதீண்டாப்பாளை) குடும்பத்திலும் நிகழ்கிறது.

கனி முதிர்ந்தால் சதைப்பற்றும் நல்ல நிறமும் உள்ளதாக இருக்கும். முதிரும் காலத்திற்குள் மடல் வாடிக் காய்ந்துவிடலாம். கண்ணுக்கு அழகாகத் தெரியும் பழங்களைப் பறவைகள் கொத்தித் தின்று விதை பரவ உதவுகின்றன. தொற்றுச்செடி விதைகள் மரங்களில் விழுந்து, அங்குச் செடிகள் உண்டாகும். இவற்றில் விதைகள் உண்டானாலும், செடிகள் பெரும்பாலும் தரைக் கீழுள்ள மட்டத் தண்டு, கிழங்கு, வேர் முதலியவற்றாலே பல்கும். சில செடிகளில் பூ உண்டாவதே அருமை.

ஆரேசீ அயன மண்டலக் காடுகளில் வளரும் தாவரங்களில் முதன்மையான குடும்பங்களில் ஒன்று. அங்கே பெருங்கொடிகளும், தொற்றுச் செடிகளும், தரையில் வாழும் சிறு செடிகளும், பெருந்தொகையில் பல இனங்களாகவும் பலவேறு இயல்புடையனவாகவும் தழைத்திருக்கின்றன. இக்குடும்பத்துச் செடிகளில் சில மருந்துக்கு உதவும். வசம்பு நல்ல மூலிகை. மற்றும் சில சிறந்த உணவுப்பொருள்களைத் தரும். சேப்பங்கிழங்கு தாரோ என்ற பெயருடன் வெப்ப வலயத்தில் வாழும் பல நாட்டுக் குடிகளுக்கு முக்கிய உணவாகிறது. கருணைக் கிழங்கு 4-8 ராத்தல் எடையுள்ளது. இது சேனைக் கிழங்கு என்றும் வழங்கும். சில வகைகள் 10-12 ராத்தலும் இருக்கும். இவற்றிலுள்ள முக்கிய உணவுப்பொருள் மாப்பண்டம், ஸ்டார்ச்சு. பல செடிகளைத் தோட்டங்களிலும் வீடுகளில் தொட்டி களிலும் நிழலில் வைத்து இலையின் அழகுக்காக வளர்க்கிறார்கள். இக்குடும்பம் ஆராய்டீ எனவும் படும்.

கருணை, சேம்பு, வசம்பு முதலியவற்றைப்பற்றித் தனிக்கட்டுரைகள் உண்டு.

ஆரை சிறிய நீர்ப்பூண்டு. இலைகள் நீரின்மேல் மிதக்கும். இது சதுப்பு நிலத்திலும் வாழ்வது. வாய்க்கால், வரப்பு, வயல் முதலிய இடங்களிலும் முளைத்திருக்கும். இந்தச் செடியை ஒருகால் நாலிலைப் பந்தல் என்று நயம்படச் சொல்வதுண்டு. புளியாரைக் கீரையைப்போலத் தோன்றும். ஆயின் புளியாரை மூன்று சிற்றிலைகளுள்ளது; மஞ்சட் பூப் பூக்கும். இதில் அம்மாதிரியான பூ உண்டாவதில்லை; நான்கு சிற்றிலைகளுண்டு. இது பெரணி வகையைச் சேர்ந்தது. நீர்ப்

ஆரை

1. செடி : a. ஸ்போரொகார்ப்பு.
2. a. ஸ்போரொகார்ப்பு மேலோடு. b. உள்ளேயிருக்கும் கோழையிழை கீரை உறிஞ்சிப் பெருத்து. மேலோட்டைப் பிளந்து கொண்டு வெளியே வந்துள்ளது. c. அக் கோழையிழையில் காணும் சோரஸ் அறைகள்.
3. முதிராத சோரஸ். a. பெண் அணு உண்டாகும் மாக்ரோஸ்போராஞ்சியம். b. ஆண் அணுக்கள் உண்டாகும் மைக்ரோஸ்போராஞ்சியம்.
4. மாக்ரோஸ்போர். a. பெண் அணு உண்டாகும் பாகம்.

5. ஆண் அணு.

பெரணி. இதில் தரையோடு கிடந்து படர்ந்து செல்லும் மெல்லிய பசிய தண்டு உண்டு. அதிலிருந்து கணுக்களிலே மேலே இலைகளும் கீழே வேர்களும் உண்டாகும். இலைக்காம்பு நீண்டு மெல்லியதாக இருக்கும். அதன் முனையில் ஆப்பு வடிவுள்ள இரண்டு ஜதைச் சிற்றிலைகள் நெருங்கி வளர்ந்திருக்கும். இலை வளர்ந்து வரும்போது, பெரணிகளில் காணும் நுனியடிச்சுருளாக (Circinate) அது அமைந்திருக்கும்.

இலைக்காம்புகளின் அடியில் சிறுபயறு போன்ற உறுப்புக்கள் இருக்கும். இவை ஸ்போரொகார்ப்பு எனப்படும் விதைத்தூள் பெட்டிகள். இவற்றினுள்ளே சோரஸ் என்னும் பை போன்ற பாகங்கள் 14-18 இரண்டு வரிசையாக அமைந்திருக்கும். சோரஸ் ஒவ்லொன்றிலும் ஆண், பெண் அணுக்கள் உண்டாகும். ஸ்போரொகார்ப்பு உண்டாகிச் சிலநாள் சும்மா இருக்கும். அது கோடைகாலம் என்று வைத்துக்கொள்வோம். திரும்ப நீர் வரும்போது, அதில் நீர் ஊறி, உள்ளே இருக்கும் பாகம் கோழைபோல உப்பிக் கொள்ளுவதனால் பெட்டி வெடிக்கும். சோரஸ்களிலிருந்து பாலணுக்கள் வளர்ச்சியுறும், ஆணணு இயங்கக்கூடியது. அதற்கு மெல்லிய மயிர்போன்ற இழைகள் உண்டு. அவற்றின் உதவியால் அது அசைந்து சென்று பெண்ணணுவுடன் கலக்கும். கருவுற்ற அணுவிலிருந்து புதிய செடி வளரும். ஆரைக் கீரையைக் கறி சமைப்பார்கள். அது மருந்துமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆரேசீ&oldid=1457372" இலிருந்து மீள்விக்கப்பட்டது