கலைக்களஞ்சியம்/ஆவுடையார்கோவில்

விக்கிமூலம் இலிருந்து

ஆவுடையார்கோவில்: தஞ்சை மாவட்டம், அறந்தாங்கியிலிருந்து எட்டாவது கல்லில் உள்ள பேர்பெற்ற சிவத்தலம். மாணிக்கவாசகர் உபதேசம் பெற்ற இடம். கல்வெட்டுக்களிலும் மாணிக்கவாசகர் நூல்களிலும் திருப்பெருந்துறை என்று கூறப்படுகிறது. அங்குள்ள கோயில் மிக அழகானது. அதனுள் மேளம் வாசிப்பதில்லை. கோயிலினுள்ளே சுவாமி, அம்மன், நந்தி சிலைகளாவது கொடி மரமாவது இல்லை. மாணிக்கவாசகர் விக்கிரகந்தான் விழாக் காலங்களில் ஊர்வலமாக வரும். கோயில் மேற்பார்வை திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்தது.