கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

கல்கி முதல் அகிலன் வரை

நாவலாசிரியர்கள்





பூவை எஸ். ஆறுமுகம்






தொல்காப்பியர் நூலகம்

107, கனகசபை நகர், சிதம்பரம்

முதற் பதிப்பு, மே-1964
முழு உரிமையும் நூலகத்தார்க்கு உரியது





எங்கள் கிளை அலுவலகம்:
41, பங்காரு நாயக்கன் தெரு,
சென்னை-2.





விலை ரூ.மூன்று


நூலகத்தார் முன்னுரை

ஓர் ஆசிரியன் தான் வாழும் காலத்தில் தோன்றும் இலக்கியங்களைப் பற்றி மிகத் தெளிந்தமுறையில் திறனாய்வு செய்ய முடியுமா? என்பது கேள்வி. கூட்டம், வட்டாரம், கலாசாரம், போன்ற பந்தங்களிலிருந்து விடுபட்டு, விருப்பு-வெறுப்புகளை விஞ்சி நின்று ஓர் எழுத்தாளன் தன்னுடைய காலத்து இலக்கிய பிரம்மாக்களைப் பற்றி எழுதி இதுதான் முடிவான தீர்ப்பு என்று அறுதி இட்டு நிலைநாட்டி விட முடியுமா? என்பது அடுத்த கேள்வி.

இப்படி எத்துணையோ கேள்விகட்கு இடையில் ஒரு நாவலாசிரியர் பிற நாவலாசிரியர்களைப் பற்றி விமரிசனம் செய்வது என்பது பொருத்தமானதே. ஓர் எழுத்தாளன் பிற எழுத்தாளர்களின் தொழில் நுணுக்கங்களை எளிதில் புரிந்துகொள்ள முடியும். இலக்கிய ஆக்கம், திறனாய்வு ஆகிய இரண்டும் கைவரப் பெற்றிருப்பதனால் கட்டுக்கோப்பு, கருத்தின் திண்மை, கதை அமைப்பின் நெகிழ்ச்சி, இறுக்கம் முதலியவற்றைக் கண்டறிந்து செவ்வனே எடுத்துச்சொல்ல முடியும். இந்நூலாசிரியர் பூவை எஸ். ஆறுமுகம் அவர்கள் இப்பணியைச் செவ்வனே செய்ய முயன்றுள்ளார். இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர். அறுநூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். மொத்தம் முப்பத்திரண்டு புத்தகங்களாக அவை வெளி வந்துள்ளன, 

இவருடைய முதல் கதைத் தொகுதியைக் ‘கடல் முத்து’ என்னும் பெயரில் பொன்னி ஆசிரியர் முருகு சுப்பிரமணியன் அவர்கள் 1951ல் வெளியிட்டார்கள். 1961ல் ஆனந்த விகடன் நிறுவனத்தார் இவருடைய ‘மகுடி’ என்னும் ஓரங்க நாடகத்திற்கு முதற்பரிசு கொடுத்துப் பாராட்டினர்.

பல பேட்டிக் கட்டுரைகளும், ஒன்றிரண்டு நாவல்களும் எழுதியுள்ளார்.

தமிழ் இலக்கியத்தின் செழுமையான தாய்மையையும், தமிழ் மொழியின் கட்டுக் கோப்பையும் மதித்து அவற்றை ஒர் எழுத்தாளன் அடைய முயல்வது சிறந்தது. ஆனால் இந்த நாட்டில் இன்றைய சூழ்நிலையில் தமிழைச் செவ்வனே பயின்றிருக்கிறோம் என்று சொல்வதையே இழிவு என்று கருதுகிற அளவுக்கு ஓர் எண்ணத்தைப் பரப்பித், தங்கள் அறியாமையையும் பலகீனத்தையும் மூடி மறைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்யும் போலி மறுமலர்ச்சிக் கும்பலை இந்நூலாசிரியர் பெரிதும் சாடியிருக்கிறார்.

இத்துணிவைப் பெரிதும் பாராட்டுகிறோம்; வரவேற்கிறோம். இவ்வரிசையில் இன்னும் சில நூல்கள் வெளிப்படுத்த வேண்டும் என்பது எங்கள் அவா.

தொல்காப்பியர் நூலகத்தார்


இலக்கியம் செழிப்புற

சில எழுத்தாளர்களின் செருக்குணர்ச்சியும், மிதமிஞ்சிய ஆணவமும் விமர்சனம் என்ற பெயரால் தலைகாட்டிக் கொண்டிருந்தன. இன்றும் அப்படித் தான்! இலக்கியவட்டத்தின் தலைச்சுழி இது என்றோ இலக்கிய உலகை இழுத்துச் செல்லக்கூடிய அயன் எழுத்து இது என்றோ யாரும் மயங்கிவிடக் கூடாதே என்று நான் சிலசமயம் சிறிது கவலைப்பட்டதுண்டு. அதன் விளைவாகவே இலக்கியத் திறனாய்வுத் தொடரை ‘உமா’ இதழில் தொடங்கினேன். இலக்கிய உலகத்தின் தலைவிதியை நிர்ணயிப்பதாகச் சொல்லிக் கொண்டு பெரிய ‘ஜம்பம்’ அடித்துக் கொள்ளும் இந்த வேடிக்கை மனிதர்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது.

இந்த இலக்கியத் திறனாய்வுத் தொடரைப் பலர் ஆதரித்துப் பாராட்டினர். பலர் அலட்சியப் பார்வையால் தங்கள் ஆத்திரங்களைக் கொட்டித் தீர்த்தனர்.

‘பாவை விளக்கு’ பற்றிய திறனாய்வுக் கட்டுரை உமாவில் வெளிவந்தபோது திருவாளர் அகிலன் படப்பிடிப்பு காரணமாக ஆக்ராவில் இருந்தார். என்னுடைய முயற்சியைக் கண்டுகளித்துத் “தமிழில் இத்தொடர் ரொம்பவும் புதுமையானது; அவசியம் தேவை. உங்கள் புதிய பார்வையைப் பாராட்டுகிறேன்” என்று அஞ்சல் அனுப்பினார். 

இந்நிலையிலே பலர் வெளிப்படையாகவும் தொலைபேசி வாயிலாகவும் நேரிடையாகவும், என்னைப் போற்றியது போலவே வேறுபலர் என்னைத் தூற்றவும் தவறவில்லை.

இவ்விருசாராரும் இலக்கிய வளர்ச்சிக்குத் தேவைப்படுபவரே. இலக்கியத் திறனாய்வு நூல்கள் தமிழில் மிக மிகக் குறைவு. இலக்கியத் தீர்ப்பு வழங்குவதற்கு ஒரு தகுதி வேண்டும். இத்தகைய பண்பாடு-பக்குவம் கொண்டுதான் ஆய்வுத் துறையில் அடி எடுத்துவைக்க வேண்டும். ஆனால் இங்கோ தடி எடுத்தவன் எல்லாம் தண்டக்காரனாகி விடுகிறான் !

இந்நூல் வெளிவருவதில் எனக்குப் பலவகையிலும் மனப்பிடிப்பு வல்லமை பெறுகிறது. சாகித்திய அகாடமியினரின் பரிசுபெற்ற இருவரையும் சித்தரிக்கச் செய்துவிட்டேன் அல்லவா!

வாசக நண்பர்களின் தொடர்ந்த அன்பும் ஆதரவும் எனக்கு இருக்கும்போது தலைக்கிறுக்கேறிய எழுத்து வியாபாரிகளைப்பற்றி எனக்கென்ன கவலை!

‘அலை ஓசை’ ‘அறுவடை’ ‘மலை அருவி’ ஆகியவை பற்றிய திறனாய்வுக் கட்டுரைகளைப் புதியனவாக எழுதிச் சேர்த்துள்ளேன்.

தொல்காப்பியர் நூலகத்தாரின் தெளிவும் இலக்கியத் துணிவும் பெரிதும் பாராட்டத்தக்கன. இவ்வரிசையில் மேலும் வர இருக்கும் என்னுடைய நூல்களைத் தொடர்ந்து வெளியிட முன்வந்துள்ளனர். அவர்கட்கு என் உளமார்ந்த நன்றி உரியது.