காற்றில் வந்த கவிதை/எங்கள் முத்துமாரி

விக்கிமூலம் இலிருந்து
எங்கள் முத்துமாரி

நாடோடிப் பாடல் எளிமையான சொற்களாலும், பேச்சு வழக்குச் சொற்களாலும் ஆனது. அதன் நடை எளிமையாக இருப்பது போலவே அதன் இசையும் எளிமையாகவே இருக்கும். அதைப் பாடும் மக்களின் உள்ளத்தைப் போலவே அது எளிமையானது.

எளிமையானது என்பதால் அது உள்ளத்தைக் கவராது என்று நினைக்கக்கூடாது. எளிமைக்கே ஒரு தனிக் கவர்ச்சி உண்டு. அதனல்தான் ரவீந்திரநாத தாகூர் போன்ற கவிஞர்கள் நாடோடிப் பாடல்களின் இசையமைப்பைத் தங்களுடைய பாடல்கள் சிலவற்றில் கையாண்டிருக்கிருர்கள்.

தமிழ்க் கவிஞர்களும் இவ்வாறு கையாண்டதுண்டு. ஆநந்தக்களிப்புப் போன்ற பண்டாரப் பா ட் டி ன் மெட்டிலே உயர்ந்த ஞானப் பாடலைத் தாயுமானவர் பாடியிருக்கிருர். சித்தர்களுடைய பாடல்கள் பல எளிய இசை யமைப்பையே கொண்டிருக்கின்றன.

தாந்திமித்திமித் தந்தக் கோனாரே
தீந்திமித்திமித் திந்தக் கோனாரே

என்று தொடங்கும் சித்தர் பாடல் நாடோடி இனத்தைச் சேர்ந்ததாகவே தோன்றும். ஆனால், அதில் பொதிந்திருக்கும் கருத்துக்கள் பலவிடங்களில் நமது அறிவுக்கும் எட்டாத உயர்ந்த தத்துவ உண்மையாக இருக்கும்.

இராமலிங்க சுவாமிகளின் பாடலிலே நாடோடி இசையிலமைந்தவைகளும் உண்டு.

வானத்தின்மீது மயிலாடக் கண்டேன் மயில் குயிலாச்சுதடி-அக்கச்சி மயில் குயிலாச்சுதடி

என்ற அவருடைய பாடல் நமக்கெல்லாம் தெரியும். நமது தேசியக் கவி பாரதியார் நாடோடிப் பாடல்களின் இசையமைப்பிலே பல பாடல்கள் பாடியுள்ளார். 'கண்ணன் மன நிலையைத் தங்கமே தங்கம்' என்று வரும் தங்கப் பாட்டு ஒரு நல்ல உதாரணம். நொண்டிச் சிந்து பாரதியாருடைய கையில் புதிய ஜீவன் பெறுகிறது.

"உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரியம்மா" என்ற பாரதியாரின் முத்துமாரி பாட்டு பலருக்கும் தெரிந்திருக்கும். அந்தப் பாட்டுக்கு இசையமைப்பைப் பாரதியார் ஒரு நாடோடிப் பாடலிலிருந்து எடுத்திருக்கிருர், அந்தப் பாடலும் முத்துமாரியின் மேல் எழுந்ததுதான்.

ஆதியிலே அமைந்தசக்தி-எங்கள் முத்து
      மாரியம்மா, எங்கள் முத்து மாரி
ஆளுருளாம் பூமி யெல்லாம்-சிங்கத்து
      மேலேறி யவள், சிங்கத்து மேலேறி
கன்னபுரம் வந்திருப்பாள்-எங்கள் முத்து
      மாரியம்மா, எங்கள் முத்து மாரி

காடு மலை வந்திருப்பாள்-சிங்கத்து
      மேலேறியவள், சிங்கத்து மேலேறி
என்ன சொல்வோம் உன்மகிமை-எங்கள் முத்து
      மாரியம்மா, எங்கள் முத்து மாரி
எங்களே நீ காக்கவேணும்-சிங்கத்து
      மேலேறி அம்மா, சிங்கத்து மேலேறி
தஞ்ச மென்று வந்தடைந்தோம்-எங்கள் முத்து
      மாரியம்மா, எங்கள் முத்து மாரி
தயவு வச்சுக் காக்கவேணும்-சிங்கத்து
      மேலேறி யம்மா, சிங்கத்து மேலேறி
பார்க்காமலே நீயிருந்தால்-எங்கள் முத்து
      மாரியம்மா, எங்கள் முத்து மாரி
பஞ்சமெல்லாம் தீர்ந்திடுமோ-சிங்கத்து
      மேலேறி யம்மா, சிங்கத்து மேலேறி
மாவிளக்குக் கொண்டு வந்தோம்-எங்கள் முத்து
      மாரியம்மா, எங்கள் முத்து மாரி
மனசு வச்சுக் காக்கவேணும்-சிங்கத்து
      மேலேறி யம்மா, சிங்கத்து மேலேறி.