திருக்குறள் புதைபொருள் 2

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

திருக்குறள் புதைபொருள்

[ இரண்டாம் பாகம் ]

 

முத்தமிழ்க் காவலர், கலைமாமணி,
டாக்டர் கி. ஆ. பெ. விசுவநாதம், டி. லிட்.

 

பாரி நிலையம்
184. பிராட்வே.சென்னை.600108

முதற் பதிப்பு : நவம்பர், 1974.

இரண்டாம் பதிப்பு : ஜனவரி, 1978.

மூன்றாம் பதிப்பு : ஜனவரி, 1983.

நான்காம் பதிப்பு : டிசம்பர் 1988.

 

விலை : ரூ. 5-00

 

※முதற் பாகத்தில் இதுவரை ஏறத்தாழ முப்பதினாயிரம் பிரதிகள் விற்பனையாகி உள்ளன. அதனைப் படித்து மகிழ்ந்த அன்பர்களும் பிறரும், இதனையும் படித்துப் பயன் பெறுதுவது நல்லது.

 

மாருதி பிரஸ்,

173, பீட்டர்ஸ் ரோடு,

சென்னை—600 014.

முன்னுரை

திருக்குறள் தமிழகத்தின் செல்வம். அதுவும் தமிழனின் சொந்தச் சொத்து. அது உலகின் ஒப்பற்ற செல்வங்களில் ஒன்றாக இன்றும் திகழ்த்து வருகிறது.

மனிதன் கேட்கக் கடவுள் சொன்னது பகவத்கீதை. கடவுள் கேட்க மனிதன் சொன்னது திருவாசகம். மனிதன் கேட்க மனிதன் சொன்னது திருக்குறள். அதுவும் வாழ்ந்து காட்டிய ஒரு பெருமகனால், வாழ வழிவகுத்துக் காட்டிய ஒரு வழிகாட்டி. இதனால் திறக்குறளை ஒரு வாழ்வு நூல் எனலாம்.

திறக்குறளை ஆழ்ந்த படிப்பதின் முலமே அதன் அரிய கருத்துக்களை அறிந்து மகிழ முடியும். என்னுடைய பல்வேறு தொழில்துறைத் தொல்லைகளுக்கிடையில் பன்னிரண்டு குறள்களை ஆராய்ந்து இதன் முதற்பாகத்தை வெளியிட்டேன். அதைப் படித்து மகிழ்ந்த அன்பர்களின் இடைவிடாத் தூண்டுகோலின் விளைவே இது.

இந்நூலில் பத்துக் குறள்கள் ஆராயப் பெற்றுள்ளன. தனது அருமையான நேரங்களில் சிலவற்றை ஒதுக்கி, இந்நூலினை முழுவதும் படித்துப் பாராட்டி மதிப்புரை வழங்கிய, சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி, மாண்புமிகு ஜஸ்டிஸ் எஸ். மகராஜன் B. Sc., B.L. அவர்களுக்கு என் வணக்கம் உரியதாகட்டும்.

முதற் பாகத்தினைப் படித்து மதிப்புரை வழங்கிய பேராசிரியர் டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார் அவர்களுக்கும், இந்நூலை வெளியிட இடைவிடாது தூண்டிய அன்பர்களுக்கும், இவற்றை நல்ல முறையில் அச்சிட்டு வழங்கிய பாரி நிலையத்தினருக்கும் என் நன்றி.

திருச்சிராப்பள்ளி,
தங்களன்பிற்குரிய,
கி. ஆ. பெ. விசுவநாதம்
5-11-74

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, மாண்புமிகு,

ஜஸ்டிஸ் எஸ். மகராஜன் B.Sc., B.L. அவர்களின்

மதிப்புரை

அரை நூற்றாண்டு காலமாக வள்ளுவர் நெறியைத் தமிழகமெங்கும் பரப்பி வந்தவர் இந்நூலாசிரியர். ஆசிரியருடைய குறள் விளக்கப் பேச்சுக்களை ஆயிரக்கணக்கான மக்கள் கேட்டுப் பயனடைந்திருக்கிறார்கள்.

கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களுடைய பேச்சுக்களின் கவர்ச்சிக்குக் காரணமாக இருப்பது அவர்களுடைய உருவப் பொலிவு மாத்திரமல்ல. உள்ளத் தெளிவும், ஆர்வத்தோடு பொங்கி எழும் கம்பீரத் தமிழும். அவர்களுடைய பேச்சுக்குக் கவர்ச்சியை யூட்டுகின்றன.

ஒவ்வொரு குறளையும் உண்மையோடும் உணர்ச்சியோடும் ஒட்டி நின்று அனுபவித்து, வாழ்க்கை என்ற உரைகல்லில் குறளை உரைத்துப் பார்த்து, அதன் உட்பொருளை உணர்ந்தவர் கி. ஆ. பெ. வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்பட்ட வளமான அனுபவமும் வள்ளுவர் இதயத்தை புரிந்து கொள்ளுவதற்குத் துணையாக இருந்திருக்கிறது.

மேலும், தாம் வள்ளுவரிடம் கற்ற உண்மைகளை விதம் விதமான உதாரணங்களைக்கொண்டு விளக்கும் வல்லமை பெற்றவர் இவ்வாசிரியர். ஐம்பது ஆண்டுகளாகத் திறக்குறளை விளக்கி விளக்கிப்பெற்ற தெளிவெல்லாம், இந்நூலின் முழுக்க முழுக்க இறங்கியிருக்கிறது.

உதாரணமாக,

        "கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
         மெய்வேல் பறியா நகும்."

என்ற குறளில் வரும் “நகும்” என்ற சொல்லுக்கு ஆசிரியர் தரும் விளக்கவுரை தனிச் சிறப்பு வாய்ந்தது. “அது வெற்றிச் சிரிப்பா? ஏளனச் சிரிப்பா? மனக்குறைச் சிரிப்பா? துன்பச் சிரிப்பா? அல்லது பயங்கரச் சிரிப்பா?” என்று பல கேள்விகள் கேட்டு, கேள்விகளுக்கு ஆசிரியர் கூறும் விடைகள் மிகச் சுவையுடையவை. இப்பேர்ப்பட்ட உத்திகளைக் கையாண்ட காரணத்தால் கி. ஆ. பெ.யின் தமிழ் இயல்பாகவும் உயிர்த்துடிப்போடும் பேசுகிறது.

வள்ளுவருடைய ஆழங்காண முடியாத இதயத்திலிருந்து தோண்டித் தோண்டியெடுத்த உண்மைகளை விளக்கும் இந்நூலுக்கு, “திருக்குறள் புதைபொருள்” என்ற தலைப்பு முற்றிலும் பொருத்தமானது.

ஆழ்ந்த அறிவும், கலைப்பாங்கும், நகைச்சுவையும் விரவிக் கலந்த இந்நூலைப் படித்து, வியப்பும், விம்மிதமும் அடைந்தேன். ஆசிரியர் இன்னும் பல்லாண்டு இப் புதைபொருள் ஆராய்ச்சியை நடத்தி, அதன் பலனைத் தமிழர்களுக்கு நல்குவாராக.

சென்னை

ஜஸ்டிஸ் எஸ். மகராஜன்

2-11-74

முதற்பாகத்தின் மதிப்புரை

அண்ணாமலைப் பல்கலைக்கழக,
தமிழ்ப்பெரும் பேராசிரியர்,
உயர்திரு. டாக்டர் சிதம்பரநாதன் செட்டியார்
M. A., Ph.D அவர்கள்.

திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் திருக்குறளை எழுத்தெண்ணிப் படித்தவர். அதன் நுண்பொருள்களை ஆய்ந்து பிறர்க்கு எடுத்து வழங்கும் நாநலம் படைத்தவர். “எண்பொருளவாகச் செலச் சொல்லித் தான் பிறர் வாய் நுண்பொருள் காண் பதறிவு” என்னும் திருக்குறளுக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் அறிவு நிரம்பியவர்.

அவரால் இயற்றப்பட்ட இந்நூல் புலவர்க்கும் பொதுமக்கட்கும் இனியதோர் விருந்தாகும். திருக்குறட் பாக்களில் வரும் சொற்களை அலசியலசி ஆராய்ச்சி செய்து கடைந்தெடுத்த நுண்பொருள்களை, இனிய, எளிய, செந்தமிழ் நடையில் இந்நூலினுள் அவர் தந்திருப்பதை வரவேற்கின்றேன். “கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்திக் குறுகத்தறித்த குறள்” என்றதன் உண்மையானது இச்சிறிய பெருநூலால் நன்கு விளங்குகிறது.

“ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்ற இடத்தில் வரும் ”உயிரினும்' என்ற சொல்லுக்கும், “பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு” என்ற இடத்து வரும் “பிறர்” என்ற சொல்லுக்கும், “உடுக்கை யிழந்தவன் கைபோல” என்ற இடத்து வரும் “இழந்தவன்” என்ற சொல்லுக்கும்

திரு. விசுவநாதன் தந்திருக்கும் விளக்கங்கள் பாராட்டத்தக்கவை.

‘பதசாரம் எழுதுதலில் பரிமேலழகர் அழகர்’ என்பார்கள். ஆயினும், இந்நூலில் காட்டப்படும் புதைபொருள் விளக்கத்தை உற்று நோக்குவார்க்கு இவ்வாசிரியர் பரிமேலழகரை விஞ்சிவிட்டார் என்பது புலப்படும்.

திருக்குறட் சுரங்கத்துட் புகுந்து, பன்னிரண்டு பாளங்களை எடுத்து வந்து. அவற்றின் சிந்தைக்கினிய அழகினைச் செவ்லிதின் எடுத்துக் காட்டியுள்ள திரு. விசுவநாதனாருக்குத் தமிழுலகு கடப்பாடுடையது. அவர் மென்மேலும் இவைபோன்ற நுண்பொருள்களைத் தோண்டி எடுத்துத் தருதல் வேண்டுமென விழைகின்றேன். பலரும் இதனைப் படித்துப் பயன்பெறுவது நல்லது.

தங்கள்,
அ. சிதம்பரநாதன்.