நாலடியார் 5-ஆம் அதிகாரம் - தூய்தன்மை
பொருளடக்கம்
சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியார்[தொகு]
உரை: களத்தூர் வேதகிரி முதலியார்[தொகு]
அறத்துப்பால்: துறவறவியல்[தொகு]
ஐந்தாம் அதிகாரம் தூய்தன்மை
- {அஃதாவது, சுத்தமல்லாத தன்மையைச் சொல்லுதலாம்}
பாடல்: 41 (மாக்கேழ்)[தொகு]
மாக்கேழ் மடநல்லா யென்றரற்றுஞ் சான்றவர்| மா கேழ் மட நல்லாய் என்று அரற்றும் சான்றவர்
நோக்கார்கொ னொய்யதோர் புக்கில்லை - யாக்கைக்கோ| நோக்கார் கொல் நொய்யது ஓர் புக்கில்லை - யாக்கைக்கு ஓர்
ரீச்சிற கன்னதோர் தோலறினும் வேண்டுமே | ஈ சிறகு அன்னது ஓர் தோல் அறினும் வேண்டுமே
காக்கை கடிவதோர் கோல். (01)| காக்கை கடிவது ஓர் கோல்.
- பதவுரை
யாக்கைக்கு= உடலிற்கு, ஓர்= ஒரு, ஈ= ஈயினது, சிறகு= சிறகை, அன்னது= ஒப்பாகியது, ஓர்= ஒரு, தோல்= தோலானது, அறினும்=அறுந்தாலும், காக்கை= காகத்தை, கடிவது= துரத்துவதற்கு, ஓர்= ஒரு, கோல்= தடி, வேண்டுமே= வேண்டுமல்லவா? (ஆதலால்), மா= மாமரத்தின், கேழ்= தளிர்நிறத்தையும், மடம்= இளமையையுமுடைய, நல்லாய் என்று= பெண்ணேயென்று, அரற்றும்= அறிவீனர் பிதற்றும், நொய்யது= அற்பமாகியதாய் விளங்கும், ஓர்= ஒரு, புக்கில்லை= உடலை, சான்றவர்= பெரியோர்கள், நோக்கார்= பார்க்க மாட்டார்கள்.
- கருத்துரை
அறிவுடையோர்கள் இழிவாகிய உடலைப் பாரார்கள்.
- விசேடவுரை
சான்றவர்-எழுவாய்; நோக்கார்- பயனிலை; புக்கில்லை- செயப்படுபொருள். கொல்- அசை. 'நோக்கார்கொல்' என்றது, 'இழிவென்று காணாரோ' எனினும் அமையும்.
பாடல்: 42 (தோற்போர்வை)[தொகு]
- தோற்போர்வை மேலுந் துளைபலவாய்ப் பொய்ம்மறைக்கு ()
- மீப்போர்வை மாட்சித் துடம்பானான் - மீப்போர்வை ()
- பொய்ம்மறையாக் காமம் புகலாது மற்றதனைப் ()
- பைம்மறியாப் பார்க்கப் படும். (02)
பாடல்: 43 (தக்கோலந்)[தொகு]
- தக்கோலந் தின்று தலைநிறையப் பூச்சூடிப் ()
- பொய்க்கோலஞ் செய்ய வொழியுமே - யெக்காலு ()
- முண்டி வினையு ளுறைக்கு மெனப்பெரியோர் ()
- கண்டுகை விட்ட மயல். (03)
பாடல்: 44 (தெண்ணீர்க்குவளை)[தொகு]
- தெண்ணீர்க் குவளை பொருகயல் வேலென்று ()
- கண்ணில்புன் மாக்கள் கவற்ற - விடுவேனோ? ()
- வுண்ணீர் களைந்தக்கா னுங்குசூன் றிட்டன்ன ()
- கண்ணீர்மை கண்டொழுகு வேன். (04)
பாடல்: 45 (முல்லை)[தொகு]
முல்லை முகைமுறுவன் முத்தென் றிவைபிதற்றுங் ()
கல்லாப் புன்மாக்கள் கவற்ற-விடுவனோ? ()
வெல்லோருங் காணப் புறங்காட் டுதிர்த்தூக்க ()
பல்லென்பு கண்டொழுகு வேன். (05)
பாடல் 16 (குடருங்)[தொகு]
குடருங் கொழுவுங் குருதியு மென்புத் ()
தொடரு நரம்பொடு தோலு-மிடையிடையே ()
வைத்த தடியும் வழும்புமா மற்றிவற்று ()
ளெத்திறத்தா றீர்ங்கோதை யாள்? (06)
பாடல் 47 (ஊறியுவர்த்)[தொகு]
ஊறி யுவர்த்தக்க வொன்பது வாய்ப்புலனுங் ()
கோதிக் குழம்பலைக்குங் கும்பத்தைப்-பேதை ()
பெருந்தோளி பெய்வளா யென்னுமீப் போர்த்த ()
கருந்தோளாற் கண்விளக்கப் பட்டு. (07)
பாடல் 48 (பண்டமறியார்)[தொகு]
பண்ட மறியார் படுசாந்துங் கோதையுங் ()
கொண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல்-மண்டிப் ()
பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்து ()
முடைச்சாகா டச்சிற் றுழி. (08)
பாடல் 49 (கழிந்தா)[தொகு]
கழிந்தா ரிடுதலை கண்டார்நெஞ் சுட்கக் ()
குழிந்தாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி-யொழிந்தாரைப் ()
போற்றி நெறிநின்மி னிற்றிதன் பண்பென்று ()
சாற்றுங்கொல் சாலத் சிரித்து. (09)
பாடல் 50 (உயிர்போயார்)[தொகு]
உயிர்போயார் வெண்டலை யுட்கச் சிரித்துச் ()
செயிர்தீர்க்குஞ் செம்மாப் பவரைச்-செயிறீர்ந்தார் ()
கண்டிற் றிதன்வண்ண மெற்தனாற் றம்மையோர் ()
பண்டத்துள் வைப்ப திலர். (10)
பார்க்க[தொகு]
- நாலடியார் 1-ஆம் அதிகாரம் -செல்வ நிலையாமை
- நாலடியார் 2-ஆம் அதிகாரம் -இளமை நிலையாமை
- நாலடியார் 3-ஆம் அதிகாரம் - யாக்கை நிலையாமை
- நாலடியார் 4-ஆம் அதிகாரம் - அறன் வலியுறுத்தல்
- நாலடியார் 6-ஆம் அதிகாரம் - துறவு
- [[]]:[[]]
- [[]]
- [[]]
- [[]]
- [[]] :[[]] :[[]]