பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் வளர்த்த தில்லை

113


தில்லையில் உமாபதிசிவனார்

சைவ சமய சந்தான குரவருள் ஒருவராகிய உமாபதிசிவனர் தில்லையைச் சேர்ந்தவரே. அவர் தில்லைவாழ் அந்தணருள் ஒருவராவர். அவருக்குத் தில்லைக்கூத்தன் திருமுகம் எழுதினன். புலைக்குலத்தில் தோன்றிய பெத்தான் சாம்பான் என்னும் பத்தி மிக்க தொண்டனுக்கு முத்திநெறி காட்டுமாறு திருமுகப் பாசுரம் எழுதியனுப்பினான்

‘அடியார்க்(கு) எளியன்சிற் றம்பலவன் கொற்றங்
குடியார்க்(கு) எழுதியகைச் சீட்டு-படியின்மிசைப்
பெத்தான்சாம் பானுக்குப் பேதமறத் திக்கைசெய்து
முத்தி கொடுக்க முறை’

என்பது தில்லைக்கூத்தன் அருளிய திருப்பாட்டு.

உமாபதிசிவர்ை உதவிய நூல்கள்

இத்தகைய உமாபதிசிவனார் சைவசமய சாத்திரங்களாகிய மெய்கண்ட நூல்கள் பதினான்கனுள்ளே எட்டினை இயற்றியவர். சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப்பஃறொடை, உண்மை நெறி விளக்கம், கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, சங்கற்ப கிராகரணம் என்னும் எட்டுமே அவர் இயற்றியவை, இவையன்றித் திருமுறை கண்ட புராணம், சேக்கிழார் புராணம், கோயிற் புராணம், திருத்தொண்டர் புராண சாரம் ஆகியவற்றையும் உமாபதிசிவனாரே பாடி யளித்தார். சேக்கிழார் காலத்தை யடுத்து வாழ்ந்த உமாபதிசிவனார் சேக்கிழார் புராணத்தைப் பாடித் தந்திராவிடின் அவரது வரலாற்றைத் தமிழர் அறிதற்கு வழியில்லாது போய்விடும். இவர்பாடியருளிய கொடிக்கவி பாடிக் கொடியேற்றல் நன்று.

த. வ. ச.-8