நளவெண்பா/பாயிரம்

விக்கிமூலம் இலிருந்து


ஓம்

புகழேந்திப்புலவர் இயற்றியருளிய[தொகு]

நளவெண்பா மூலமும்[தொகு]

அகல உரையும்[தொகு]


நூற் சிறப்புப்பாயிரம்[தொகு]

ஏற்புடைக் கடவுள் வணக்கம்[தொகு]

விநாயகர்

நேரிசை வெண்பா </poem>}}

1.
ஆதித் தனிக்கோல மானா னடியவற்காச்
சோதித் திருத்தூணிற் றோன்றினான் - வேதத்தின்
முன்னின்றான் வேழம் முதலே யெனவழைப்ப
என்னென்றா னெங்கட் கிறை.

அவையடக்கம்[தொகு]

2.
வெந்தறுகண் வேழத்தை வேரிக் கமலத்தின்
தந்துவினாற் கட்டச் சமைவதொக்கும் - பைந்தொடையில்
தேன்பாடுந் தார் நளன்றன் தெய்வத் திருக்கதையை
யான்பாட லுற்ற இது.

நூல் வரலாறு[தொகு]

யுதிட்டிரர் வனத்தில் இருந்தது[தொகு]

3.
பாண்டவரின் முன்தோன்றல் பார்முழுதுந் தோற்றொருநாள்
ஆண்டகையே தூதுவனாய்ச் சென்றவனி - வேண்ட
மறுத்தா னிருந்தானை மண்ணொடும் போய் மாளப்
பொறுத்தா னிருந்தான் புலர்ந்து.

யுதிட்டிரரை மன்னர் பலர் சென்று கண்டது[தொகு]

4.
நாட்டின்கண் வாழ்வைத் துறந்துபோய் நான்மறையோர்
ஈட்டங்கள் சூழ விருந்தானைக் - காட்டில்
பெருந்தகையைக் கண்டார்கள் பேரெழிற்றோள் வேந்தர்
வருந்தகையா ரெல்லோரும் வந்து.

யுதிட்டிரரிடம் பிரகதசுவர் என்னும் முனிவர் வந்தது[தொகு]

5.
கொற்றவேல் தானைக் குருநாடன் பாலணைந்தான்
எற்றுநீர் ஞாலத் திருள்நீங்க - முற்றும்
வழிமுறையே வந்த மறையெல்லாந் தந்தான்
மொழிமுறையே கோத்த முனி.

6.
மறைமுதல்வ நீயிங்கே வந்தருளப் பெற்றேன்
பிறவிப் பெருந்துயர மெல்லாம் - அறவே
பிழைத்தேன்யா னென்றானப் பேராழி யானை
அழைத்தேவல் கொண்ட அரசு.

7.
மெய்த்திருவந் துற்றாலும் வெய்ந்துயர்வந் துற்றாலும்
ஒத்திருக்கும் உள்ளத் துரவோனே - சித்தம்
வருந்தியவா என்னென்றான் மாமறையா லுள்ளம்
திருந்தியவா மெய்த்தவத்தோன் தேர்ந்து.

8.
அம்பொற் கயிலைக்கே யாகத் தரவணிவார்
தம்பொற் படைக்குத் தமியனா - எம்பியைமுன்
போக்கினே னென்றுரைத்தான் பூதலத்தும் மீதலத்தும்
வாக்கினே ரில்லாத மன்.

9.
காண்டா வனந்தீக் கடவுளுணக் கைக்கணையால்
நீண்ட முகில்தடுத்து நின்றாற்கு - மீண்டமரர்
தாளிரண்டும் நோவத் தனித்தனியே ஓடியநாள்
தோளிரண்டு மன்றோ துணை.

10.
பேரரசு மெங்கள் பெருந்திருவுங் கைவிட்டுச்
சேர்வரிய வெங்கானஞ் சேர்தற்குக் - காரணந்தான்
யாதோவப் பாவென்றா னென்றுந்தன் வெண்குடைக்கீழ்
தீதோவப் பார்காத்த சேய்.

11.
கேடில் விழுச்செல்வங் கேடெய்து சூதாடல்
ஏடவிழ்தார் மன்னர்க் கியல்பேகாண் - வாடிக்
கலங்கலைநீ யென்றுரைத்தான் காமருவு நாடற்
கிலங்கலைநூன் மார்ப னெடுத்து.

12.
கண்ணிழந்து மாயக் கவறாடிக் காவலர்தம்
மண்ணிழந்து போந்து வனம்நண்ணி - விண்ணிழந்த
மின்போலும் நூன்மார்பா மேதினியில் வேறுண்டோ
என்போ லுழந்தா ரிடர்.

முனிவர் நளசரிதம் கூறுதல்[தொகு]

13.
சேமவேன் மன்னற்குச் செப்புவான் செந்தனிக்கோல்
நாமவேற் காளை நளனென்பான் - யாமத்
தொலியாழி வைய மொருங்கிழப்பப் பண்டு
கலியால் விளைந்த கதை.

நளவெண்பா பாயிரம் முற்றியது.
"https://ta.wikisource.org/w/index.php?title=நளவெண்பா/பாயிரம்&oldid=1540588" இலிருந்து மீள்விக்கப்பட்டது