காற்றில் வந்த கவிதை/தந்தனத்தான்

விக்கிமூலம் இலிருந்து
தந்தனத்தான்


வே லை ஒன்றும் செய்யாமல் குறும்பு மட்டும் செய்து கொண்டு திரிகிறவர்கள் சில பேர் உண்டு. அவர்களுக்கு மரியாதை இராது. ‘உதவாக்கறைகள்’ என்ற பட்டம் வேண்டுமானால் கிடைக்கும்.


சும்மா திரிகிறவனுடைய வாய் சும்மா இராது. ஏதாவது ஒரு தெம்மாங்குப் பாட்டை முணுமுணுக்கும். அவனைப் பற்றித் தந்தனப் பாட்டுக்காரன் என்று கூறுவார்கள். அவனுக்கே தந்தனத்தான் என்ற பேரும் ஏற்பட்டுவிடும்.


'அவனா? அவன் ஒரு தந்தனத்தான்" என்று கூறுவார்கள். அவன் வாழ்க்கையை வீணாக்குகிறவன் என்பது கருத்து.


இந்தத் தந்தனத்தானுடைய ஆடம்பரத்துக்கு மட்டும் ஒரு குறையும் இராது. அவனைப்பற்றி ஒரு நாடோடிப் பாடல் உண்டு:

எல்லாரும் கட்டும் வேட்டி
      ஏளேக்கேத்த சாயவேட்டி
தந்தனத்தான் கட்டும் வேட்டி
      சரியான சரிகை வேட்டி

எல்லோரும் போடும் சட்டை
      ஏளைக்கேத்த நாட்டுச் சட்டை
தந்தனத்தான் போடும் சட்டை
      சரியான பட்டுச் சட்டை

எல்லோரும் கட்டும் பொண்ணு
      ஏளைக்கேத்த கருத்த பொண்ணு
தந்தனத்தான் கட்டும் பொண்ணு
      சரியான செவத்த பொண்ணு

நாகரிகமாய் எல்லா நலன்களுடனும் வாழவேண்டும் என்ற ஆசையிருக்கிறது. ஆனல் ஆசை மட்டும் இருந்தால் போதுமா? அதற்கேற்ற முயற்சியும் வேண்டும். முயற்சி இல்லாத ஆசை வாழ்க்கையில் ஏமாற்றத்தையே அளிக்கும். சமூகத்திற்கு விரோதமான செயல்களிலே உள்ளத்தைத் தூண்டும்.

முயற்சியும் உழைப்பும் இல்லாமலேயே செல்வமும் சுகமும் கிடைக்க வேண்டும் என்கிற ஆசை பலருக்குண்டு. அதனால் அவனுக்கும் துன்பம்; சமூகத்திற்கும் தீங்கு விளைகிறது.

'தேவைகளைக் குறைத்துக்கொள்: பிறருக்காக வாழ்' என்று ஆன்ருேர்கள் உபதேசம் செய்திருக்கிரு.ர்கள். இந்த உபதேசத்தைப் பின்பற்றுகிறபோது சமூகம் இன்பத்தில் ஒங்குகிறது. தனி மனிதனும் தன் வாழ்க்கையில் சாந்தி யடைகிருன்.  இதை மறந்த காலத்திலே பலவித இன்னல்கள் ஏற்படுகின்றன.

தந்தனத்தான் இதற்கு ஒரு நல்ல உதாரணம். அவன் புல்லுருவியாகப் பிறருடைய உழைப்பைப் பயன் படுத்திக் கொண்டு சுகமடைய எத்தனிக்கிறான். அந்த எத்தனம் நிச்சயமாக வெற்றி பெருது. சிறிது காலத்திற்கு இன்பமளிப்பதுபோல் தோன்றினாலும் முடிவில் மாறாத ஏமாற்றத்தையே அளிக்கும்.