காற்றில் வந்த கவிதை/மீனாட்சி துணை

விக்கிமூலம் இலிருந்து
மீனாட்சி துணை

குழந்தையிடத்திலே தாய்க்கு எத்தனை அன்பிருக்கிறது! அந்தத் தாயின் அன்பை அளவிட முடியுமா? 'பெற்ற மனம் பித்து: பிள்ளை மனம் கல்லு' என்பார்கள். ஆனல் எல்லாப் பிள்ளைகளும் கல்மனம் படைத்தவர்களாக இருப்ப தில்லை. தாயின் அன்பை அறிந்து அதிலே கட்டுண்டு வாழ்க்கை நடத்தியவர்கள் பலபேர் உண்டு

எல்லாவற்றையும் துறந்த ஞானிகள்கூட தாயின் அன்பால் கவரப்பட்டிருக்கிருர்கள். பட்டினத்தடிகளின் துறவு ஆச்சரியமானது. அவரும் தாயின் அன்பிலே வசப்பட்டு நின்றதை நாம் அறிந்திருக்கிறோம்.

அந்தத் தாய் தன் குழந்தையைப்பற்றி ஆயிரம் ஆயிரம் கனவுகள் காண்கிறாள். அதன் இன்பத்திலும், சுகத்திலும், நன்மையிலும் தாய்க்கு அளவு கடந்த ஆர்வம்.

ஒரு தாய் தன் குழந்தையைத் தொட்டிலில் வைத்துத் தாலாட்டுகிருள். தாலாட்டுப் பாட்டும் பாடுகிறாள். அவளுடைய பாட்டிலே அவளுடைய ஆசைகளெல்லாம் வெளி யாகின்றன. குழந்தைக்கு ராமன், லக்ஷ்மணன், சீதை ஆகி யோரின் உதவி இருக்க வேண்டுமாம். மீனாட்சி அம்மனின் துணை வேண்டுமாம். அப்படித் தாய் ஆசைப்படுகிருள். அவள் தன் குழந்தையின் மேலுள்ள அன்பால் என்னவெல்லாமோ சொல்லுகிறாள். அவளுக்கு அந்தக் குழந்தைதான் எல்லோரையும் விடப் பெரிய தெய்வம். பாட்டைப் பார்க்கலாம்:

ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ

ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரரோ

ராமர் பசுவடைக்க-என் கண்ணே உனக்கு

லட்சுமணர் பால் கறக்க

சீதையம்மாள் எழுந்துவந்து-என் கண்ணே உனக்கு

சீக்கிரமாய்ப் பால்காய்ச்சி

பால்காய்ச்சிப் பால்வார்த்து-என் கண்ணே உனக்கு

பசுந்தொட்டில் வைத்தாட்ட

தொட்டிலுக்கும் கீழாக-என் கண்ணே உனக்கு

துணையிருப்பாள் மீனாட்சி

இப்படி வளர்க்கின்ற குழந்தை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்கிறது. பையன் தாயின் மடியைவிட்டுத் தானகவே வீதியிலும் கழனிகளிலும் ஒடி யாடித் திரியும் பருவத்தை அடைந்துவிடுகிறான்.

அப்படி அவன் வளர்ச்சியுற்றதில் தாய்க்கு அளவில்லாத மகிழ்ச்சிதான். இருந்தாலும் ஒடியாடித் திரிகின்ற பருவத் திலே ஏதாவது தீங்கு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று தாயுள்ளம் கவலைப்படுகிறது. 'இளங்கன்று பயமறியாது’ என்பது போலப் பையன் துடுக்குத் தனமாக எங்கும் போக முயல்வான். சில சமயங்களிலே பாம்பிருக்கும்; அல்லது வேறு ஆபத்து இருக்கும். அப்படிப்பட்ட இடங்களுக்குப் போக வேண்டாமென்று தாய் அன்போடு எச்சரிக்கை செய் கிறாள். அதைக் கூறும் நாடோடிப் பாடலிலே தாயின் அன்புள்ளம் இனிமையான இசையிலே வெளியாவதைக் காணலாம்.

மலையோரம்-மகனே
      போகாதேடா
மலை நாகம்-மகனே
      தீண்டிடுமே
செடியோரம்-மகனே
      போகாதேடா
செடி நாகம்-மகனே
      தீண்டிடுமே
கல்லோரம்-மகனே
      போகாதேடா
கல் நாகம்-மகனே
      தீண்டிடுமே
புத்தோரம்-மகனே
      போகாதேடா
புத்து நாகம்-மகனே
      தீண்டிடுமே