கவிதை

விக்கிமூலம் இலிருந்து

கவிதை[தொகு]

ஆசிரியர்: கவிமணி[தொகு]

பார்க்க: உள்ளத்துள்ளது
1. வண்டி அற்புதப் பொருளாம் - வண்டி
மாடும் அற்புதப் பொருளாம்;
வண்டி பூட்டும் கயிறும் என்றன்
மனத்துக் கற்புதப் பொருளாம்!

கவிமணியின் படைப்புகள்

1. மலரும் மாலையும் (1938)
2. ஆசிய ஜோதி (1941)
3. உமர்கய்யாம் பாடல்கள் (1945)
4. நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம் (1918)
5. தே.வி.யின் கீர்த்தனங்கள் (1953)
6. கவிமணியின் உரைமணிகள்
7. ஆராய்ச்சிக் கட்டுரைகள் (’கேரளா சொசைட்டிப் பேப்பர்சு’- இல் வெளியானவை, பிற இதழ்களில் வெளியானவை.

2. வண்டல் கிண்டி உழுவோன் - கையில்
வரிவில் ஏந்தி நின்ற
பண்டை விஜயன் போல - இந்தப்
பாரில் அற்புதப் பொருளாம்!
3. பறக்கும் குருவி யோடென் - உள்ளம்
பறந்து பறந்து திரியும்;
கறக்கும் பசுவைச் சுற்றி - அதன்
கன்று போலத் துள்ளும்.
4. ஈயும் எனக்குத் தோழன் - ஊரும்
எறும்பும் எனக்கு நேசன்;
நாயும் எனக்குத் தோழன் - குள்ள
நரியும் எனக்கு நண்பன்!
5. கல்லின் கதைகள் எல்லாம் - இரு
காது குளிரக் கேட்பேன்;
புல்லின் பேச்சும் அறிவேன்! - அதைப்
புராண மாக விரிப்பேன்.
6. அலகில் சோதி யான - ஈசன்
அருளி னாலே அமையும்;
உலகில் எந்தப் பொருளும் - கவிக்கு
உரிய பொருளாம், ஐயா!

7. உள்ளத்துள்ளது கவிதை - இன்பம்

உருவெ டுப்பது கவிதை;
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்து ரைப்பது கவிதை!

பார்க்க:[தொகு]

கவிமணியின் கவிமலர்கள்
பக்தி மஞ்சரி
கவிதை
அழகம்மை ஆசிரியவிருத்தம்
கம்பன்
பாரதி
மனோன்மணீயம் சுந்தரனார்
ஆறுமுக நாவலர்
திருவள்ளுவர்
மருமக்கள்வழி மான்மியம் - கவிமணி
"https://ta.wikisource.org/w/index.php?title=கவிதை&oldid=1399057" இலிருந்து மீள்விக்கப்பட்டது