நாலடியார் 20-ஆம் அதிகாரம்-தாளாண்மை

விக்கிமூலம் இலிருந்து

சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியார்[தொகு]

உரை: களத்தூர் வேதகிரி முதலியார்[தொகு]

II.பொருட்பால்: 1.அரசியல்[தொகு]

[அஃதாவது, பொருளினுடைய பகுப்பாம்]


இருபதாம் அதிகாரம் தாளாண்மை

[அஃதாவது, முயற்சி செய்தலாம்]


பாடல்: 191 (கோளாற்றக்)[தொகு]

கோளாற்றக் கொள்ளாக் குளத்தின்கீழ்ப் பைங்கூழ்போற் ||

கேளீவ துண்டு கிளைகளோ துஞ்சுப ||

வாளாடு கூத்தியர் கண்போற் றடுமாறுந் ||

தாளாளர்க் குண்டோ தவறு. (01) ||


பதவுரை:

கருத்துரை:

விசேடவுரை:

பாடல்: 192 (ஆடுகோடாகி)[தொகு]

ஆடுகோ டாகி யதரிடை நின்றதூஉங் ||

காழ்கொண்ட கண்ணே களிறணைக்குங் கந்தாகும் ||

வாழ்தலு மன்ன தகைத்தே யொருவன்றான் ||

றாழ்வின்றித் தன்னைச் செயின். (02) ||


பதவுரை:

கருத்துரை:

விசேடவுரை:

பாடல்: 193 (உறுபுலி)[தொகு]

உறுபுலி யூனிரை யின்றி யொருநாட் ||

சிறுதேரை பற்றியுந் தின்னு - மறிவினாற் ||

காற்றொழி லென்று கருதற்க கையினான் ||

மேற்றொழிலு மாங்கே மிகும். (03) ||


பதவுரை:

கருத்துரை:

விசேடவுரை:


பாடல்: 194 (இசையா)[தொகு]

இசையா தெனினு மியற்றியோ ராற்றா ||

லசையாது நிற்பதா மாண்மை - யிசையுங்காற் ||

கண்ட றிரையலைக்குங் கானலந் தண்சேர்ப்ப ||

பெண்டிரும் வாழாரோ மற்று. (04) ||


பதவுரை:

கருத்துரை:

விசேடவுரை:

பாடல்: 195 (நல்லகுல)[தொகு]

நல்ல குலமென்றுந் தீய குலமென்றுஞ் ||

சொல்லள வல்லாற் பொருளில்லைத் - தொல்சிறப்பி ||

னொண்பொரு ளொன்றோ தவங்கல்வி யாள்வினை ||

யென்றிவற்றா னாகுங் குலம். (05) ||


பதவுரை:

கருத்துரை:

விசேடவுரை:

பாடல்: 196 (ஆற்றுந்)[தொகு]

ஆற்றுந் துணையு மறிவினை யுள்ளடக்கி ||

யூக்க முரையா ருணர்வுடையார் - ஊக்க ||

முறுப்பினா லாராயு மொண்மை யுடையார் ||

குறிப்பின்கீழ்ப் பட்ட துலகு. ||


பதவுரை:

கருத்துரை:

விசேடவுரை:

பாடல்: 197 (சிதலை)[தொகு]

சிதலை தினப்பட்ட வால மரத்தை ||

மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக் ||

குதலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்ற ||

புதல்வன் மறைப்பக் கெடும். (07) ||


பதவுரை:

கருத்துரை:

விசேடவுரை:

பாடல்: 198 (ஈனமாயில்)[தொகு]

ஈனமா யில்லிருந் தின்றி விளியினு ||

மானந் தலைவருவ செய்பவோ - யானை ||

வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றா ||

ளரிமா மதுகை யவர். (08) ||


பதவுரை:

கருத்துரை:

விசேடவுரை:

பாடல்: 199 (தீங்கரும்பீ)[தொகு]

தீங்கரும் பீன்ற திரள்கா லுளையலரி ||

தேங்கமழ் நாற்ற மிழந்தாஅங் - கோங்கு ||

முயர்குடி யுட்பிறப்பி னென்னாம் பெயர்பொறிக்கும் ||

பேராண்மை யில்லாக் கடை. (09) ||


பதவுரை:

கருத்துரை:

விசேடவுரை:

பாடல்: 200 (பெருமுத்)[தொகு]

பெருமுத் தரையர் பெரிதுவந் தீயுங் ||

கருனைச்சோ றார்வர் கயவர் - கருனையைப் ||

பேரு மறியார் நனிவிரும்பு தாளாண்மை ||

நீரு மமிழ்தாய் விடும். (10) ||


பதவுரை:

கருத்துரை:

விசேடவுரை:



இருபதாம் அதிகாரம் தாளாண்மை முற்றிற்று



நாலடியார் அரசியல் முற்றிற்று





பார்க்க[தொகு]

நாலடியார்- வேதகிரி முதலியாரவர்கள் உரை

II.பொருட்பால்: 1.அரசியல்

நாலடியார் 14-ஆம் அதிகாரம்-கல்வி
நாலடியார் 15-ஆம் அதிகாரம்-குடிப்பிறப்பு
நாலடியார் 16-ஆம் அதிகாரம்-மேன்மக்கள்
நாலடியார் 17-ஆம் அதிகாரம்-பெரியாரைப் பிழையாமை
நாலடியார் 18-ஆம் அதிகாரம்-நல்லினஞ் சேர்தல்
நாலடியார் 19-ஆம் அதிகாரம்-பெருமை
நாலடியார் 20-ஆம் அதிகாரம்-தாளாண்மை

II.பொருட்பால்: 2.நட்பியல்

21.சுற்றந்தழால்
22.நட்பாராய்தல்
23.நட்பிற் பிழைபொறுத்தல்
24.கூடா நட்பு

II.பொருட்பால்: 3.இன்பவியல்

[[]] [[]] [[]]
[[]] [[]] [[]]
[[]] [[]] [[]]
[[]] [[]] [[]]