சூடாமணி நிகண்டு/10-19

விக்கிமூலம் இலிருந்து
சூடாமணி நிகண்டு ஆசிரியர்: மண்டல புருடர் (மூலபக்கம்= மதுரை மின்நூல் திட்டம்)
சூடாமணி நிகண்டு என்னும் நூல், கி.பி. 16 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த மண்டல புருடர் என்னும் சமணரால் இயற்றப்பட்டது. இந் நிகண்டு ஆசிரியர் மண்டல புருடர் அவர்கள், வீரமண்டல புருடர் என்றும் அழைக்கப்பட்டார். இந்நூல் விருத்தப்பாவால் ஆன நூல் ஆகும். இதில் 1197 சூத்திரங்களில் 11,000 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. பல்வேறு காலக்கட்டங்களில், இந்நூல் பதிக்கப்பட்டு, பதிப்பாசிரியர்களால் நேர்ந்த பிழைகளுடன் உள்ளன கருதப்படுகிறது.


132 (1)
உப்பு மெல்லியலா ராடல் உவர் கடல் இனிமை நாற்பேர்
செப்பமே நடுநிலைப்பேர் தெருவொடு நெஞ்சுமாகும்
துப் பரக் கூற்றந் தூய்மை துகிர் பகை யனுபவப் பேர்
கப்பண மிரும்பிற்செய்த நெருஞ்சின்முட் கைவேலாமே.

133 (2)
தாபரம் மலைபோல் நிற்றல் சடமொடு தருவு முப்பேர்
நீப முத்தரட்டாதிப் பேர் நிமித்த நீர்க் கடம்பு மாகும்
யூபமே கவந்தம் வேள்விகுறு தம்பம் படைவகுப்பாம்
சாபமே சபித்தல் வில்லாந் தளிமமே யழகு மெத்தை .

134 (3)
சீப்பென்ப கதவிற் றாழும் சீவு கங்கமுமா மென்ப
நாப்ப ணென்பது தேர்த்தட்டு நடுவும் யாழ்வுறுப்பு முப்பேர்
காப்பென்ப காவலோடு கதவும் வெண்ணீருமாகும்
யாபென்ப கவிதை காட்டாம் இறால் தேன்கூ டெருது மீனே.

"https://ta.wikisource.org/w/index.php?title=சூடாமணி_நிகண்டு/10-19&oldid=29072" இலிருந்து மீள்விக்கப்பட்டது