குருகுலப் போராட்டம்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

குருகுலப் போராட்டம்

சமூகநீதியின் தொடக்க வரலாறு

 

நாரா நாச்சியப்பன்

 

அன்னை நாகம்மை பதிப்பகம்

2/141, கந்தசாமிநகர், பாலவாக்கம்,

சென்னை-600 041, தொலைபேசி 4927721

முதற்பதிப்பு : டிசம்பர், 1994

© நாரா நாச்சியப்பன்


 

விலை ரூ. 12.00

 

கவின்கலை அச்சகம்

கந்தசாமிநகர், பாலவாக்கம் சென்னை-600 041.

முன்னுரை

இந்திய நாடெங்கும் இன்று சமூகநீதி வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

இந்தியாவில் நீண்ட நெடு நாட்களாக முன்னேற வொட்டாமல் அழுத்தி வைக்கப்பட்டிருந்த பல்வேறு தாழ்த்தப்பட்ட இனத்தாரும் மற்ற மேலாதிக்க இனத்தாரைப்போல் வாழ்க்கை உரிமைகளை அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக எழுச்சிக் குரல் எழுப்பத் தொடங்கி விட்டார்கள்.

ஆந்திராவிலும், கேரளாவிலும், கர்நாடகத்திலும், குஜராத்திலும், வங்கத்திலும், பீகாரிலும், உத்தரப் பிரதேசத்திலும், மத்தியப் பிரதேசத்திலும் இன்னும் எல்லா மாநிலங்களிலும் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.

இந்த விழிப்புணர்வின் தாயகம் தமிழகமே! இந்த விழிப்புணர்வைத் தொடக்கத்தில் நாட்டில் உண்டாக்கியவர் தந்தை பெரியாரே!

ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அரசியல் மேலாதிக்கமுடையவர்கள், தம்முடைய எல்லா ஆதிக்க சக்திகளையும் துணையாகக் கொண்டு, இந்த விழிப்புணர்வை ஒடுக்கிவிட முயல்வதையும் நாம் காண்கிறோம்.

பெருவாரியான மக்களிடையே பூத்துள்ள இந்த உரிமை உணர்வை ஒடுக்க நினைப்பவர்கள், தகுதி திறமையென்றெல்லாம் பேசி, தகுதியோ திறமை யோ இல்லாதவர்கள் கையில் எவ்வாறு பொறுப்பை ஒப்படைப்பதென்று வாதிப்பார்கள்.

தகுதியும் திறமையும் உள்ள மேலாதிக்க சாதி யாரின் சதியினால்தான் நாடு பின்தங்கியுள்ள தென்பதை நாட்டுமக்கள் உணர்ந்துவிட்டார்கள்.

உலக முழுவதிலும் கருப்பு இனத்தவர்கள் அடிமைகளாக்கப்பட்டு ஆடுமாடுகளோடு சேர்த்து விற்கப்பட்ட காலமும் ஒன்று இருந்தது.

அமெரிக்க நாட்டின் தலைவராக இருந்த ஆபிரகாம்லிங்கள் என்ற அருளாளர், கருப்பு இனத் தவரின் அடிமைத்தனத்தை யொழித்து, அவர்கள் உரிமைக்குப் போரிட்டதும், வெற்றி பெற்றதும் உலக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக் கப்பட்ட செய்தியாகும்.

இன்று அமெரிக்க நாட்டின் பெருமைக்குப் பெரிதும் காரணமாக இருப்பவர்கள், ஒரு காலத்தில் அடிமைகளாக நடத்தப்பட்ட கருப்பர்களே! 

இசை மேதைகளாகவும் விளையாட்டு வீரர்களாகவும், விஞ்ஞானிகளாகவும், பேரறிஞர்களாக வும், உலகப் புகழ் பெற்றவர்கள் இன்று கருப்பு இனத்தவர்களாக இருப்பதைக் காண்கிறோம்.

பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட ஆப்பிரிக்காக் கண்டத்து செனகால் நாட்டுத் தலைவர் செங்கோர், உலகத்தின் தலைசிறந்த கவிஞராகத் திகழ்கிறார்.

அடக்கி ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் வாய்ப்பும் வசதியும் கிடைத்துவிட்டால், அறிஞர்களாகவும் திறமையாளர்களாகவும் மிளிர முடியும் என்பதற்கு இவை நல்ல எடுத்துக் காட்டுகள்.

எத்தனையோ தடைகளையும், துன்பங்களையும் கடந்து வாழ்க்கையில் முன்னேறி, இந்தியாவில் ஈடு இணையற்ற சட்ட மேதையாகத் திகழ்ந்த டாக்டர் அம்பேத்கார் போன்ற தலைவர்கள் நமக்கு நல்ல எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார்கள்.

தகுதியும் திறமையும் அடைய வாய்ப்பும் வசதியும் எல்லாருக்குமே கிடைக்க வேண்டும் என்பதே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற சமூகநீதிக் கோரிக்கையின் அடிப்படையாகும்.

சமூகநீதிக் கோரிக்கையின் தொடக்ககால நிலையை விளக்குவதே - இந்தக் ‘குருகுலப் போராட்டம்’

சமூகநீதியை நிலை நாட்ட பெரியார் தம் வாழ்வையே ஒப்படைத்துவிட்ட உறுதியை நாம் இந்நிகழ்ச்சியின் மூலம் அறிகிறோம்.

இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் வாழும் உரிமை பெற்றவன் என்ற உரிமை யுணர்வைத் தட்டி எழுப்பிய பெரியார் இந்த நாட்டு மக்கள் அனைவரின் நன்றிக்கும் உரியவராவார்.

நாரா நாச்சியப்பன்
நன்றி

நான்கு வேதங்களையும் நுட்பமாக ஆராய்ந்து, சிந்து வெளித் தமிழகத்தின் சீர்மையை விளக்கி எழுதியவரும்

குத்துாசி குருசாமி வாழ்க்கை வரலாற்று ஆசிரியரும்,

அடிநாள் தொட்டு திராவிட இயக்கத் தொடர் புடையவரும் ஆகிய

தோழர் குருவிக்கரம்பை வேலு அவர்கள்

இந்நூல் முழுமையும் படித்துப் பார்த்து,

திருத்த வேண்டிய இடங்களைத் திருத்தி

நூல் செம்மையாக வெளிவர உதவினார்.

நான் எழுதும் ஒவ்வொரு நூலுக்கும் ஆதாரங்களைத் தேடித் தந்தும்,

கருத்துக் கூறியும்

தொடர்ந்து ஊக்கமூட்டியும் வரும்

தோழர் வேலு அவர்களுக்கு

என் மனம் நிறைந்த நன்றி.

"https://ta.wikisource.org/w/index.php?title=குருகுலப்_போராட்டம்&oldid=1519904" இலிருந்து மீள்விக்கப்பட்டது