வாழும் வழி

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.


வாழும் வழி




புலவர் சுந்தர சண்முகனார்



பிரபாத்-புக்-ஹவுஸ்

7. பிருந்தாவனம் தெரு,

மேற்கு மாம்பலம்,

சென்னை - 600 033.

(நூல் விவரப் பட்டியல்)
நூல் :வாழும் வழி
ஆசிரியர் :புலவர் சுந்தர சண்முகனார்
மொழி :தமிழ்
பொருள் :கட்டுரை
முதற்பதிப்பு :டிசம்பர் 2003
நூலின் அளவு :1 x 8 கிரெளன்
தாளின் தன்மை :10.5 கி.கி. வெள்ளைத் தாள்
எழுத்து :12 புள்ளி
பக்கம் :136
தயாரிப்பு :S. பிரபாகரன்
வெளியிட்டோர் :பிரபாத்-புக்-ஹவுஸ் 7. பிருந்தாவனம் தெரு, மேற்குமாம்பலம், சென்னை -33. 2471 1077
விலை :ரூ 38.00
ஒளியச்சு :ஸ்டார்ஸ் இன்போஸிஸ், சென்னை - 78. 2489 6658
அச்சிட்டோர் :மணி ஆப்செட், சென்னை-5.

அணிந்துரை
ரா.தேசிகப் பிள்ளையவர்கள், B.A., B.L.,

தமிழ்-பிரெஞ்சு ஆராய்ச்சித்துறைத் தலைவர்

பிரெஞ்சு கல்வி கலைக் கழகம் (பிரான்சு), புதுச்சேரி.

திருவாளர் சுந்தர சண்முகனார் ஒரு புலவர் - வண் புலவர். புலவர்க்குரிய இலக்கணங்கள் அனைத்தும் கொண்டு திகழும் இவ் அறிஞர் வாழும் வழி என்னும் நூலினை யாத்துத் தமிழ் மக்களுக்கு இதுபோது வழங்குகின்றார்.

உள்ளக் கிளர்ச்சிகளை நன்கறிந்து, உணர்ச்சிகளைச் செழுமையாக்கி, அவற்றைப் பிறர்க்கு எடுத்துக் கூறி, அவர்தம் மனத்தை ஈர்க்கச் செய்பவர்தாம் புலவர்பாழ்வறிந்த புலவர். வாழும் வழி கூறும் இந்நூலின் வாயிலாக, புலவர் பல இடங்களில் படிப்பவரின் சிந்தனையைத் தூண்டிவிடுகிறார்; சிந்தனையால் பொருளுண்மை தோன்றச் செய்கிறார். ஒன்றைக் காணுந் திறனும், அதனை ஆராயும் ஆற்றலும், பின்னர் அதனைச் சரியாக உணர்ந்துகொள்ளும் உரனும், இவ்வாசிரியரின் ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படிப்பவர்க்கு உண்டாகக்கூடும்.

மாந்தர் படித்து உணர்வு பெறத்தக்க முறையில் புலவர் சுந்தர சண்முகனாரின் வாழும் வழி அமைந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. நூல் நான்கு இயல்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இயலுக்கேற்ற முறையில் கட்டுரைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

கருத்துக்கள் மனத்தில் நன்கு பதியும்வண்ணம், தெளிந்த எளிய முறையில், சுவைபெற எழுத்துநடை செல்வது பெரிதும் பாராட்டற்குரியது. பல திறத்தாரும் படித்து இன்புறத்தக்க இந் நூலை, சிறப்பாக மாணவர் உலகம் போற்றிப் படித்துப் பயன்பெற வேண்டும் என்பது எமது அவா.

முன்னுரை

வாழும் வழி என் கட்டுரைகளின் தொகுப்பு நூலாகும். வாழ்வியல், இலக்கியவியல், மொழியியல், விஞ்ஞானவியல் என்னும் நான்கு பிரிவாக நூலை வகுத்துக் கொண்டு கட்டுரைகளை அமைத்துள்ளேன். அவற்றுள் முதல் பிரிவாகிய வாழ்வியலைச் சேர்ந்த கட்டுரைகளுள் முதல் கட்டுரையாகிய ‘மக்களாய்ப் பிறந்தோர் வாழும் வழி’ என்னும் தலைப்பே, இந்நூலுக்குப் பெயர் கொடுப்பதில் எனக்குத் துணைபுரிந்துள்ளது.

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகள் போல் இல்லாமல், எதையும் சொந்த ஆராய்ச்சி அறிவுக்கண் கொண்டு துருவி நோக்கி உண்மை காணும் பயிற்சி, வளர்ந்து வரும் வாழத் துடிக்கும் இளைஞர் உலகிற்கு மிகவும் இன்றியமையாதது என்பது என் பணிவான கருத்து. அத்தகு பயிற்சி பெறுவதில், படிப்பவர்க்கு என் ஆராய்ச்சி முடிவுகள் தூண்டுகோலாக நின்று துணைபுரியுமாயின் அதுவே எனக்கு வெற்றி.

இந்நூலுக்கு, உயர்திரு. ரா. தேசிகப் பிள்ளையவர்கள் அருள்கூர்ந்து அணிந்துரை வழங்கியுள்ளார்கள். அவர்கள் பேரறிஞர் கல்வி-கலை-நீதித்துறைகளில் அவர்தம் தொண்டு மிகப் பெரியது. பல்கலைக் கழகங்கட்குரிய பாட நூற்கள் எழுதி வெளியிட்டிருப்பவரும் பெரிய பெரிய தமிழ் நூற்களைப் பிரெஞ்சு மொழியில் பெயர்த்திருப்பதன் வாயிலாக உலக அறிமுகம் பெற்றிருப்பவருமாகிய அப்பெரியார்க்குச் சிறியேனது நன்றி உரியது.

சுந்தர சண்முகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=வாழும்_வழி&oldid=1548037" இலிருந்து மீள்விக்கப்பட்டது