கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி
 

வித்துவான்

ந. சுப்பு ரெட்டியார் எம்.ஏ., பி.எஸ்ஸி., எல். டி.,

தமிழ்த்துறைத் தலைவர்,

அழகப்பா பயிற்சிக் கல்லூரி, காரைக்குடி.

 

செல்வி பதிப்பகம்

காரைக்குடி

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.



முதற் பதிப்பு - மார்ச்சு 57
(உரிமை பதிப்பகத்தார்க்கே)



ஆசிரியரின் மற்ற நூல்கள்


1 கவிஞன் உள்ளம்
2 அறிவியல் பயிற்றும் முறை
3 தமிழ் பயிற்றும் முறை (அச்சில்)
4 காதல் சித்திரங்கள் (அச்சில்)
5 காலமும் கவிஞர்களும் (அச்சில்)






விலை ரூ. 2-00



சௌத் இந்தியா பிரஸ், காரைக்குடி,



சமர்ப்பணம்


தீந்தமிழ் அன்னைக்கு இனியநற் புதல்வன் ;
        செம்மையில் பிறழ்ந்திடா உளத்தன் ;
காந்திஎம் பெருமான் நெறிவழி நிற்போன் ;
        கல்சொலும் கதையுணர் அறிஞன் ;
சாந்தமார் முப்பால் வாசகம் சுவைப்போன் ;
        தண்டமிழ்க் கம்பனுக்கு அடியான் ;
மாந்தருள் சிறந்தோன் கணேசனும் எங்கள்
        வள்ளலுக்கு உரியதுஇந் நூலே.

APPRECIATION

By V. R. M. Chettiar, B. A.

 

Here is a sound delightful critical study of a great Tamil classic Kalingathu Parani ( கலிங்கத்துப் பரணி) sung by the poet Jayam Kondan of the 12th Century A. D.

Our critic Sri. N. Subbu Reddiar, M. A., B. Sc., L. T. has critically summarised within a short campass the central situations of the poetic narrative, psychologically emphasising the inspired poetic excellences of this great classic, and subtly interpreting the hidden poetic splendour of certain glorious passages which reveal, and revel in the glory of the human war and human love wherein demons also enjoy their unique participation by a tumultuous display of their revelrous dance and ceaseless gluttony, when the King's victory is cheerfully celebrated as a great public exhilaration.

Our author Mr. N. Subbu Reddiar, already the author of “ கவிஞன் உள்ளம் ”, has used a very simple effectual prose as a convenient medium for interpreting Jayam Kondan's mighty poetic masterpiece, and has surely succeeded in achieving a lucid exposition of the poetic theme of glorious war and glorious love, without allowing any confusion to creep in.



Kalingathu Parani, as a poetic composition, is a close-knit tangle of heavy human incidents culminating in the overwhelming glory and distinction of the great king Kulothunga and his commander-in-chief Karunakara Thondaiman.

The Thalisai (தாழிசை) Metre has been so very skillfully handled by Jayam Kondan that the poetic movement of the entire poem is easy, natural, rapturous, and enjoyable indeed—, certainly a perpetual delight !

I have enjoyed this entire criticism, and I strongly believe that this book may be safely recommended as a suitable Tamil text for the College and University classes.


Karaikudi

29-3–1957 V. R. M. CHETTIAR

அறிமுகம்

' கலிங்கத்துப் பரணி ' சுவைமிக்க ஓர் அரிய நூல். தமிழ்த் தாய் பெற்ற அரிய அணிகளுள் கலிங்கத்துப் பரணி சிறந்த இடம் பெறுகின்றது. வீரச் சுவைக்கு நிலைக்களனான கலிங்கத்துப் பரணி, காதல் சுவையை அதனினும் திறம்பட எடுத்துக் கூறுவது பாராட்டி மகிழ்தற்குரியது. பதின்மூன்று பகுதிகளைக் கொண்ட இப் பரணி நூலில் ' கடை திறப்பு ' என்ற ஒரு பகுதி, காதற் சுவையைப் பிற எந்த நூலினும் மேம்பட வாரி வழங்குகிறது.

தடையறாப் பெருந்துறவியாகிய தாயுமான அடிகளும் இப் பரணி நூலின் கடை திறப்புப் பகுதியில் உள்ளத்தைப் பறிகொடுத்து ‘உபய தனம் அசையில்” என்ற தாழிசையை எடுத்துத் தமது பாட்டில் நயம்படக் கையாண்ட முறையை இத் திறனாய்வு நூலில் எடுத்துக் காட்டியிருக்கிறார் அன்பர் சுப்பு ரெட்டியார்.

கவிஞர் சயங்கொண்டார் சுமார் 800 ஆண்டுகட்கு முன்னர் இருந்தவர் என்று காலக் கணக்கர் கூறுவர். சயங்கொண்டாரின் பாடல்களில் அவருக்கு முன்னே இருந்த சிறந்த புலவர்களின் கருத்துச் செறிவை ஆங்காங்குக் காணலாம்.

காணாக்கால் காணேன் தவறாய; காணுங்கால்
காணேன் தவறல் லவை

என்ற திருக்குறளையும்

மாணார்க் கடந்த மறவெம்போர் மாறனைக்
காணாக்கால் ஆயிரமும் சொல்லுவேன்;-கண்டக்கால்
பூண் ஆகம் தாவென்று புல்லப் பெறுவேனோ
நாணோடு உடன்பிறந்த நான்.

என்ற முத்தொள்ளாயிரப் பாடலையும் உள்ளத்திற் கொண்டே,

பேணுங் கொழுநர் பிழைகளெலாம்
பிரிந்த பொழுது நினைந்து அவரைக்
காணும் பொழுது மறந்திருப்பீர்
கனப்பொற் கபாடந் திறமினோ

என்று சயங்கொண்டார் பரணியில் பாடியிருத்தல் வேண்டும்.

தரைமகளும் தன்கொழுநன் உடலந் தன்னைத்
தாங்காமல் தன்னுடலால் தாங்கி விண்ணாட்டு
அரமகளிர் அவ்வுயிரைப் புணரா முன்னம்
ஆவிஒக்க விடுவாளைக் காண்மின் காண்மின்

என்ற கலிங்கத்துப் பரணிப் பாடலில் உள்ள வீரச்சுவையும் கருத்து நயமும் ஈடும் எடுப்பும் அற்றவை.

சிற்றரசர்கள் பேரரசர்களின் அடியில் விழும் போது திருவடியில் சூடும் முடிபற்றி, கவிச் சக்கரவர்த்தி கம்பன் உள்ளிட்ட புலவர் பலரும் பாடியுள்ளனர். எனினும்,

முடிசூடும் முடியொன்றே முதலபயன் எங்கோமான்
அடிசூடும் முடிஎண்ணில் ஆயிரம்நூ றாயிரமே.

என்ற சயங்கொண்டாரின் பாட்டு எல்லாவற்றிற்கும் சிகரமாக விளங்குகின்றது.



ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவ னுக்கு வகுப்பது பரணி

என்ற இலக்கணத்துக்கு

மாவா யிரமும் படக்கலிங்கர்
மடிந்த களப்போர் உரைப்போர்க்கு
நாவா யிரமும் கேட்போர்க்கு
நாளா யிரமும் வேண்டுமால்


என்ற சயங்கொண்டாரின் பாட்டு இலக்கியமாக நயம்பட அமைந்திருக்கின்றது.

எடுத்துக்கொண்ட பாட்டுடைத் தலைவன் கடவுள் அவதாரமே என்று கொண்டு,

தேவரெலாம் குறையிரப்பத் தேவகிதன்
திருவயிற்றில் வசுதே வற்கு
மூவுலகுந் தொழநெடுமால் முன்னொருநாள்
அவதாரஞ் செய்த பின்னை,
அன்றிலங்கை பொருதழித்த அவனே அப்
பாரதப்போர் முடித்துப் பின்னை
வென்றிலங்கு கதிராழி விசயதரன்
எனஉதித்தான் விளம்பக் கேண்மின் !


என்று ஆசிரியர் பாடியிருக்கும் நயம் பெரிதும் இன்புறத் தக்கது.

அருமறையின் நெறிகாட்ட அயன் பயந்த
நிலமகளை அண்டங் காக்கும்
உரிமையினில் கைப்பிடித்த உபயகுலோத்
தமன்அபயன் வாழ்க

என்று பாட்டுடைத் தலைவனை ஆசிரியர் வாழ்த்துவது சீரியது.

ந்த கலிங்கத்துப் பரணி என்ற அரிய நூலுக்குத் திறவுகோலாக அமைந்திருப்பது ' கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி ' என்னும் இந்த நூல். இத் திறனாய்வு நூலை எழுதியவர், என் அரிய நண்பரும் நன்கு கற்றவரும் வள்ளல் அழகப்பனாரின் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவருமாகிய அன்பர் சுப்பு ரெட்டியார் அவர்கள். அன்னார் கலிங்கத்துப் பரணியை நன்கு ஆராய்ந்து ஆங்காங்குள்ள நயங்களை யெல்லாம் இந்நூலில் அழகுபட எடுத்துக் காட்டியிருக்கிறார். கலிங்கத்துப் பரணி கற்பார்க்கு இந்நூல் பேருதவி செய்ய வல்லது.

'கடைதிறப்பின் உட்பொருள்' என்ற பகுதியில் திரு. ரெட்டியார் காட்டியிருக்கும் கருத்தே கொள்ளத்தக்கது. தமிழ் மக்கள் இந்நூலையும் இதற்கு மூலமாகிய கலிங்கத்துப் பரணி நூலின் சிறந்த பாடல்களையும் படித்து உணர்ந்து இன்புற்று உயரத் தமிழ்த் தாய் அருள்வாளாக.

வணக்கம்.

29–3–57 ராய. சொ.


நூல் முகம்

'கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி' என்ற இச்சிறு நூல் புலவர்க்கே உரியது என்று பொதுமக்கள் மருள வேண்டாம். பொதுமக்களுக் கென்றே எண்ணி எழுதப்பெற்றது இது. பொதுமக்களும் இலக்கியங்களைத் திறனாயும் நோக்குடன் படிக்க வேண்டும் என்பது எனது ஆசை. அம்முறையில் இந்நூல் வழிகாட்டியாக அமையுமானல், அதுவே யான் பெற்ற பேறு; எனது முயற்சியின் பயன்.

இந்நூலில் ஒன்பது கட்டுரைகள் அடங்கியுள்ளன. அவற்றில் ஆறு, நூலை ஆறு வித கோணத்திலிருந்து பார்ப்பவை; நூல் முழுவதும் செல்லக்கூடிய பார்வைகள் அவை. கற்களாலும் சுண்ணத்தாலும் எழுப்பிய மாளிகையைப் பலவித கண்ணோட்டத்தால் பார்ப்பதுபோல சொற்களாலும் சுவைப் பொருள்களாலும் எழுப்பப் பெற்ற காவிய மாளிகையைப் பல்வேறு நிலையிலிருந்து நோக்கி அனுபவித்தேன். இப்பார்வைகள் மூல நூலைப் படித்துச் சுவைக்க விரும்புவார்க்கு ஓரளவு துணையாக இருக்கும் என்று கருதுகின்றேன்.

இந்நூலை எங்கள் கணேசன் அவர்கட்குச் சமர்ப்பணம் செய்துள்ளேன். திரு. கணேசன் அவர்கள் புலவர்கட்குப் புலவர் ; தலைவர்கட்குத் தலைவர் ; தொண்டர்கட்குத் தொண்டர். அவர் அலாதி மனிதர். அனைத்தையும் அப்பர் பெருமானுக்கே அர்ப்பணம் செய்து வாழ்வைத் துணையாக்கிக் கொண்டு வாழ்ந்த - பெரிய புராணத் தொண்டர் - அப்பூதியடிகள் போலவே, அனைத்தையும் கம்பனுக்கென்றே உரிமையாக்கித் தம் வாழ்வைத் தூய்மையாக்கிக் கொண்டு வாழ்பவர் திரு. கணேசன். கம்பன் காவியத்தைத் துணைக் கொண்டு பாமர மக்கள் மீதும் இலக்கிய வானத்தைக் கவியச் செய்து கொண்டு வருபவர். அவருக்குச் சமர்ப்பணம் செய்வதே பல்லாற்றானும் பொருத்தம் என்து கருதினேன்; அவ்வாறே செய்தும் உள்ளேன்.

எங்கள் ராய. சொ. அவர்கள் இலக்கியச் செல்வர் ; தமிழ் இலக்கியங்களின் எல்லைகளை யெல்லாம் கண்ட மேதை ; வரையாது வழங்கும் வள்ளல். பண்டைக் காலத்தில் அரசர்கள் ஆண்டு தோறும் துலாபாரம் ஏறுவார்களாம். அன்று தன்னைக் காண வருபவர்கட்குப் பொன்னும் வெள்ளியும் மணிகளும் அள்ளி அள்ளி வழங்கப் பெறுமாம். எங்கள் ராய சொ. அவர்கள் சனிக் கிழமை தோறும் இலக்கியத் துலாபாரம் ஏறுவார். அப்பொழுதெல்லாம் எங்கட்கு நல்ல வேட்டை! நாங்கள் பல்வேறு இலக்கியச் செல்வங்களே செவியாரப் பருகுவோம். இந்த இலக்கிய தானம் சுமார் நான்காண்டுகளாகக் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்திலிருந்து நடைபெற்று வருகிறது. இங்ஙனம் 'இலக்கிய வள்ளலாக' வாழ்பவர்கள் என்மீது காட்டிவரும் அளவற்ற அன்பின் காரணமாக முன்னுரை அருளி எனக்கு ஆசி கூறி என் நூலையும் சிறப்பித்துள்ளார்கள். அப்பெரியாருக்கு என் உளங் கனிந்த நன்றி.

திரு. வி. ஆர். எம். செட்டியார் அவர்கள் நல்ல இலக்கியச் சுவைஞர்; சிறந்த பதிப்பாளர். காரைக்குடி ஸ்டார் பிரசுரத்தின் அதிபர். அவர் என் நூலை முற்றும் நோக்கிப் பாராட்டுரை வழங்கினமைக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

இந் நூலிலுள்ள கட்டுரைகளில் ஐந்து 'தினமணிச் சுடரில்' வெளிவந்தவை. அவற்றை வெளியிட்டுக் கொள்ள இசைவு தந்த அப் பத்திரிகை ஆசிரியருக்கு என் நன்றி. காரைக்குடி செல்விப் பதிப்பகத்தார் இந் நூலை அழகுறப் பதிப்பித்து, வெளியிட்டு, கற்போர் கரங்களில் கவின் பெறச் செய்தமைக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

யான் மேற்கொண்டுள்ள இலக்கியத் தொண்டில் வெற்றி காண்பதற்கு உறுதுணையாக நிற்கும். எல்லாம் வல்ல இறைவனுக்கு என் வணக்கங்கள்.

காரைக்குடி
30-3-'57
ந. சுப்பு ரெட்டியார்