1.நாமகள் இலம்பகம்- பாடல் 301-325
சீவகசிந்தாமணிக் காப்பியம்[தொகு]
1. நாமகள் இலம்பகம்[தொகு]
(அழுகுரல்)[தொகு]
- அழுகுரல் மயங்கிய வல்ல லாவணத்
- தெழுகிளை மகிழ்ந்தெம தரசு வேண்டினான்
- கழிபெருங் காதலான் கந்து நாமனென்
- றுழிதரு பெருநிதி யுவப்ப நல்கினான். (301) ( )
(திருமகற்)[தொகு]
- திருமகற் பெற்றெனச் செம்பொற் குன்றெனப்
- பெருநல நிதிதலை திறந்து பீடுடை
- யிருநிலத் திரவலர்க் கார்த்தி யின்னணஞ்
- செருநிலம் பயப்புறச் செல்வன் செல்லுமே. (302)
- (வேறு )
(நல்லுயிர்)[தொகு]
- நல்லுயிர் நீங்கலு நன்மாண் புடையதொர்
- புல்லுயிர் தன்னொடு நின்றுழிப் புல்லுயிர்
- கல்லுயிர் காட்டிற் கரப்பக் கலங்கவிழ்ந்
- தல்லலுற் றாளுற்ற தாற்ற வுரைப்பாம். (303) ( )
(பொறியறு)[தொகு]
- பொறியறு பாவையிற் பொம்மென விம்மி
- வெறியுறு கோதை வெறுநில மெய்த
- விறுமுறை யெழுச்சியி னெய்துவ தெல்லாம்
- நிறிமையிற் கூற நினைவி னகன்றாள். (304) ( )
(பெருமகற்)[தொகு]
- பெருமகற் காக்கம் பிறழ்வின்றிக் கேட்டே
- திருமக டானினிச் செய்வதை யெல்லா
- மொருமனத் தன்னா யுரையென லோடுந்
- தெருவரு தெய்வதஞ் செப்பிய தன்றே. (305) ( )
(மணியறைந்)[தொகு]
- மணியறைந் தென்ன வரியற லைம்பாற்
- பணிவருங் கற்பிற் படைமலர்க் கண்ணாய்
- துணியிருட் போர்வையிற் றுன்னுபு போகி
- யணிமணற் பேரியாற் றமரிகை சார்வாம். (306) ( )
(அமரிகைக்)[தொகு]
- அமரிகைக் கோசனை யைம்பது சென்றாற்
- குமரிக் கொடிமதிற் கோபுர மூதூர்
- தமரிய லோம்புந் தரணி திலகம்
- நமரது மற்றது நண்ணல மாகி. (307) ( )
(வண்டார்)[தொகு]
- வண்டார் குவளையு வாவியும் பொய்கையுங்
- கண்டார் மனங்கவர் காவுங் கஞலிய
- தண்டா ரணியத்துத் தாபதப் பள்ளியொன்
- றுண்டாங் கதனு ளுறைகுவ மென்றாள். (308) ( )
(பொருளுடை)[தொகு]
- பொருளுடை வாய்மொழி போற்றினள் கூற
- மருளுடை மாதர் மதித்தன ளாகி
- யருளுடை மாதவ ரத்திசை முன்னி
- யிருளிடை மின்னி னிலங்கிழை சென்றாள். (309)
- (வேறு )
(உருவ மாமதி)[தொகு]
- உருவ மாமதி வாண்முகத் தோடிய
- விருவி லும்மெறி மாமக கரக்குழை
- திருவி லும்மிவை தேமொழி மாதரைப்
- பொருவி னீளதர் போக்குவ போன்றவே. (310)
- (வேறு )
(சிலம்பிரங்கிப்)[தொகு]
- சிலம்பிரங்கிப் போற்றிசைப்பத் திருவிற் கைபோய் மெய்காப்ப
- விலங்குபொற் கிண்கிணியுங் கலையு மேங்க வெறிவேற்கண்
- மலங்கமணி மலர்ந்த பவளக் கொம்பு முழுமெய்யும்
- சிலம்பிவலந் ததுபோற் போர்வை போர்த்துச் செல்லுற்றாள். (311) ( )
(பஞ்சியடர)[தொகு]
- பஞ்சியட ரனிச்ச நெருஞ்சி யீன்ற பழமாலென்
- றஞ்சு மலரடிக ளரங்கண் டன்ன வருங்காட்டுட்
- குஞ்சித் தசைந்தசைந்து குருதி கான்று வெய்துயிரா
- வஞ்சி யிடைநுடங்க மயில்கை வீசி நடந்ததே. (312) ( )
- (வேறு )
(தடங்கொடா)[தொகு]
- தடங்கொ டாமரைத் தாதுறை தேவியுங்
- குடங்கை போலுண்கட் கூனியுங் கூர்ம்பரற்
- கடங்க ளும்மலை யுங்கடந் தார்புன
- லிடங்கொள் யாற்றக மெய்தின ரென்பவே. (313) ( )
(எல்லையெய்)[தொகு]
- எல்லை யெய்திய வாயிரச் செங்கதிர்
- மல்லன் மாக்கடற் றோன்றலும் வைகிருட்
- டொல்லை நல்வினை முற்படத் தோன்றிய
- வல்லல் வெவ்வினை போல வகன்றதே. (314) ( )
(நுணங்குநுண்)[தொகு]
- நுணங்கு நுண்கொடி மின்னொர் மழைமிசை
- மணங்கொள் வார்பொழில் வந்துகி டந்ததொத்
- தணங்கு நுண்டுகில் மேலசைந் தாளரோ
- நிணங்கொள் வைந்நுதி வேனெடுங் கண்ணினாள். (315) ( )
(வைகிற்)[தொகு]
- வைகிற் றெம்மனை வாழிய போழ்தெனக்
- கையி னானடி தைவரக் கண்மலர்ந்
- தைய வோவென் றெழுந்தன ளாய்மதி
- மொய்கொள் பூமி முளைப்பது போலவே. (316) ( )
(தூவியஞ்சிறை)[தொகு]
- தூவி யஞ்சிறை யன்னமுந் தோகையும்
- மேவி மென்புன மானின மாதியா
- நாவி நாறெழின் மேனியைக் கண்டுகண்
- டாவித் தாற்றுகி லாதழு திட்டவே. (317) ( )
(கொம்மைவெம்)[தொகு]
- கொம்மை வெம்முலைப் போதிற் கொடியனா
- ளும்மை நின்றதொ ரூழ்வினை யுண்மையா
- லிம்மை யிவ்விட ருற்றன ளெய்தினாள்
- செம்மை மாதவர் செய்தவப் பள்ளியே. (318)
- (வேறு )
(வாளுறை)[தொகு]
- வாளுறை நெடுங்க ணாளை மாதவ மகளி ரெல்லாந்
- தோளுறப் புல்லு வார்போற் றொக்கெதிர் கொண்டுபுக்குத்
- தாளுறு வருத்த மோம்பித் தவநெறிப் படுக்க லுற்று
- நாளுறத் திங்க ளூர நல்லணி நீக்கு கின்றார். (319)
- (வேறு )
(திருந்துதக)[தொகு]
- திருந்து தகரச் செந்நெருப்பிற் றேன்றோய்த் தமிர்தங் கொளவுயிர்க்குங்
- கருங்கா ழகிலி னறும்புகையிற் கழுமிக் கோதை கண்படுக்குந்
- திருந்து நானக் குழல்புலம்பத் தேனும் வண்டு மிசைப்புலம்ப
- வரும்பொன் மாலை யலங்கலோ டாரம் புலம்ப வகற்றினாள். (320) ( )
(திங்களுகிரிற்)[தொகு]
- திங்க ளுகிரிற் சொலிப்பதுபோற் றிலகம் விரலிற் றானீக்கிப்
- பைம்பொன் மகர குண்டலமும் பாவை கழுத்தி னணிகலமும்
- வெங்கண் வேந்தற் கமிர்தாகி வேற்கட் பாவை பகையாய
- வங்கண் முலையி னணிமுத்து மரும்பொற் பூணு மகற்றினாள். (321) ( )
(பஞ்சியனைய)[தொகு]
- பஞ்சி யனைய வேய்மென்றோட் பகுவாய் மகரங் கான்றிட்ட
- துஞ்சாக் கதிர்கொ டுணைமுத்தந் தொழுதே னும்மை யெனத்துறந்
- தஞ்சி வருத்து நுசுப்பினாள் வளைகை யுடைத்து மணிக்காந்த
- ளஞ்சச் சிவந்த மெல்விரல்சூ ழரும்பொ னாழி யகற்றினாள். (322) ( )
(பூப்பெய்)[தொகு]
- பூப்பெய் செம்பொற் கோடிகமும் பொன்னா ரால வட்டமு
- மாக்கு மணிசெய் தேர்த்தட்டு மரவின் பையு மடுமல்குல்
- வீக்கி மின்னுங் கலையெல்லாம் வேந்தன் போகி யரம்பையரை
- நோக்கி நும்மை நோக்கானீர் நோவா தொழிமி னெனத்துறந்தாள். (323) ( )
(பிடிக்கை)[தொகு]
- பிடிக்கை போலுந் திரள்குறங்கி னணியு நீக்கிப் பிணையன்னா
- ளடிக்கிண் கிணியு மஞ்சிலம்பும் விரன்மோ திரத்தோ டகற்றியபின்
- கொடிப்பூத் துதிர்ந்த தோற்றம்போற் கொள்ளத் தோன்றி யணங்கலற
- வுடுத்தாள் கற்றோய் நுண்கலிங்க முரவோன் சிறுவ னுயர்கெனவே. (324)
- ( வேறு)
(பாலுடை)[தொகு]
- பாலுடை யமிர்தம் பைம்பொற் கலத்திடைப் பாவை யன்ன
- நூலடு நுசுப்பி னல்லா ரேந்தவு நேர்ந்து நோக்காச்
- சேலடு கண்ணி காந்தட் டிருமணித் துடுப்பு முன்கை
- வாலட கருளிச் செய்ய வனத்துறை தெய்வ மானாள். (325)
- தொடர்வது
- 1. நாமகள் இலம்பகம்- பாடல் 326-350
பார்க்க[தொகு]
- 1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125
- 1. நாமகள் இலம்பகம்- பாடல் 125-150
- 1. நாமகள் இலம்பகம் பாடல் 151-175
- 1.நாமகள் இலம்பகம்- பாடல் 176-200