நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.



நபிகள் நாயகம்








முத்தமிழ்க் காவலர், கலைமாமணி,
டாக்டர் கி. ஆ. பெ. விசுவநாதம் டி. லிட்,












பாரி நிலையம்
184.பிராட்வே, சென்னை-600108



முதற் பதிப்பு : அக்டோபர், 1974
இரண்டாம் பதிப்பு : ஜனவரி, 1983
மூன்றாம் பதிப்பு : டிசம்பர், 1988
நான்காம் பதிப்பு : ஆகஸ்டு. 1994










விலை : ரூ. 7.00









கவின்கலை அச்சகம்,
2/141, 2வது தெரு,
கந்தசாமி நகர், பாலவாக்கம்
சென்னை-600041 தொலைபேசி 41 71 41.



முன்னுரை

சென்ற ஆண்டு கும்பகோணத்தில் நடைபெற்ற அகில இந்திய மீலாத் விழாவில் நான் பங்கு பெற்றுப் பேசிய பேச்சு இது. இப்பேச்சை இஸ்லாமியப் பெருமக்கள் பலரும், இஸ்லாமியப் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் சிலரும் பாராட்டியிருந்தனர்.

இதை நூல் வடிவில் வெளியிட வேண்டுமெனப் பல அன்பர்கள் வற்புறுத்தி எழுதியிருந்தனர். இன்னும் சிறிது விரிவுபடுத்தி, ஒரு பெரிய நூலாக வெளியிட எண்ணியும், என்னால் முடியவில்லை. இந்த அளவுக்கேனும் வெளியிட முடிந்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

இதை எழுதுவதற்கு எனக்குத் துணை புரிந்த கோயமுத்துர் வேளாண்மைப் பல்கலைக் கழகத் துணைத் தமிழ் ஆசிரியர் அன்பர் திரு கந்தசாமி எம். ஏ., அவர் களுக்கும், இதனை ஒப்பு நோக்கி உதவிய திருச்சி ஜமால் முகமது கல்லூரித் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் ஜனாப் சி. நயினார் முகம்மது எம். ஏ அவர்களுக்கும், எவ்வளவோ வேலைகளிருந்தும், நூல் முழுவதையும், நன்கு ஆராய்ந்து படித்து, திருத்தங்களும் செய்து உதவி, மதிப்புரையும் எழுதி வழங்கிய மாண்புமிகு சென்னை உயர்நீதி மன்ற நீதிப்தி ஐஸ்டிஸ் எம். எம். இஸ்மாயில் எம். ஏ., பி. எல் அவர்களுக்கும், இந்நூலின் எழுத்துப் பிரதியை முழுதும் படித்துப் பார்த்து, நூலை வெளியிட ஒப்புதலும் அளித்து, பாராட்டுரையும் வழங்கி உதவிய திருச்சி நகர காஜியார். ஆவி ஜனாப் மெளல்வி முன்ஷி பாசில் சையத் அப்துல் கனி அவர்களுக்கும் என் நன்றியறிதலையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இந்நூலை நல்ல முறையில் அச்சிட்டு உதவிய சென்னை மாருதி அச்சகத்தாருக்கும், விரைவில் வெளியிட்டு உதவிய சென்னை பாரி நிலைய உரிமையாளர் திரு. அ. செல்லப்பன் அவர்களுக்கும் என் நன்றி. இதை இஸ்லாமியப் பெருமக்கள் மட்டுமின்றி, எல்லாச் சமய மக்களும் படித்து, வாழ்க்கைக்குப் பயன்படுத்திப் பலனடைவது நல்லது.

தங்களன்பிற்குரிய
கி. ஆ. பெ. விசுவநாதம்
திருச்சிராப்பள்ளி-8
1-10-1974

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
மாண்புமிகு ஜஸ்டிஸ் M. M. இஸ்மாயில் அவர்கள்

மதிப்புரை

திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் சாதி, சமய பேதமின்றி தமிழர்கள் அனைவருடைய அன்புக்கும், மதிப்புக்கும், மரியாதைக்கும் பாத்திரமானவர்கள். அவர்களுடைய பகுத்தறிவுப் பற்று இஸ்லாத்திடத்திலும், அதன் திருத்தூதரான முஹம்மது நபி அவர்களிடத்திலும் உண்மையான ஈடுபாட்டை உண்டாக்கிற்று. சுமார் 50 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் முஹம்மது நபி அவர்களுடைய பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக நடக்கும் 'மீலாது' விழாக்களில் பெருமளவு அவர்கள் பங்கு கொண்டு நபிகள் நாயகமவர்களுடைய வாழ்க்கையைப் பற்றியும் போதனைகளைப் புற்றியும் விரிவாகப் பேசி வருகிறார்கள். 'அகில இந்திய மீலாது விழா' என்று அண்மையில் கும்பகோணத்தில் நடந்த விழா ஒன்றில் அவர்கள் பேசிய பேச்சு, இப்புத்தக வடிவில் வெளியிடப்படுகிறது.

நபிகள் நாயகம் அவர்களுடைய வரலாறு, அவர்கள் செய்த செயற்கருஞ் செயல்கள், அவர்கள் உணர்த்திய சகோதரத்துவம், அவர்களுடைய அருங்குணங்கள், அவர்கள் கையாண்டு போதித்த சிக்கனம், பிறருடைய குற்றங்களை மன்னிக்கும் கருணை உள்ளம், அவர்கள் நபித்துவம் பெற்றது, அவர்கள் இறைவனிடமிருந்து பெற்று உலகுக்கு வழங்கிய திருக்குர்-ஆன், நபிகள் நாயகமவர்கள் உலகிலே நிலை நிறுத்திய சீர்திருத்தங்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையின் பல துறைகளிலே காட்டிய பெருந்தன்மை, உணர்த்திய குறிக்கோள்கள் ஆகியவற்றோடு இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவங்கள், அதன் ஐம்பெருங் கடமைகள், முஹம்மது நபியவர்கள் இறுதி தீர்க்கத்தரிசி என்ற கொள்கை ஆகியவையும் சுருக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றன.

நூல் முழுவதிலும் ஆசிரியர் அவர்களுடைய நல்லெண்ணமும், சிரத்தையும், இஸ்லாத்திடத்தும், முஹம்மது நபியவர்களிடத்தும், முஸ்லிம்களிடத்தும் அவர்களுக்குள்ள விசுவாசமும், மிகத் தெளிவாகத் தெரிகின்றன. இத்தகைய நல்லெண்ணத்திற்காகவும், முஸ்லிம்கள் திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களுக்கு என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்.

இந்நூலில் சரித்திர ஆதாரமில்லாமல் கர்ண பரம்பரையாக வழங்கி வருகின்ற நிகழ்ச்சிகள் சிலவும், சில தவறுகளும் இடம் பெற்றிருக்கின்றன. சில அச்சுப் பிழைகளும் காணப்படுகின்றன. இவை அடுத்த பதிப்பில் தவிர்க்கப்படவேண்டும் என்பது என் நோக்கம். இப்பதிப்பிலும் அவை எடுத்துக் காட்டப் பெற்று, இந்நூலின் இறுதியியில் பிழை திருத்தம் என ஒரு குறிப்பும் வெளி வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

ஆசிரியர் அவர்களுடைய இந்த முயற்சியும், பணியும் எல்லோருடைய போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் உரியன. இஸ்லாத்தைப் பற்றியும், நபிகள் நாயகமவர்களைப் பற்றியும் சாதாரண மக்களிடையே நிலவும் தவறான சில எண்ணங்களைத் திருத்தக்கூடிய கருத்துகளும் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. இத்தகைய கருத்துகளை அகமார்ந்த ஆர்வத்தோடு வெளியிட்டிருக்கும் திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுதலையும், நன்றியையும், மரியாதையையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மு. மு இஸ்மாயில்
சென்னை-28
20-09-74



மதிப்புரை

ஆலி ஜனாப் மெளல்வி பாசில்
சையத் அப்துல் கனி அவர்கள்

திருச்சி நகர காஜி, திருச்சிராப்பள்ளி



"மதிப்பிற்குரிய முத்தமிழ்க் காவலர் திரு. கி. ஆ. பெ. விசுவநாதம்" அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. நாடறிந்த நாவலர். தமிழ்க் காவலர். வாதத்திறமை பெரிதும் உடையவர். முதுமைப் பருவம் எய்திய மூதறிஞர்.

75 ஆண்டுகளை எட்டிப் பிடித்த பெரியவர். பற்பல சமயங்களைத் தர்க்க முறையில் ஆராய்ந்து அறிந்தவர்.

அப்பெரியவர் செய்து வரும் தமிழ்த் தொண்டும், சமூகத் தொண்டும், சமயத் தொண்டும் பொதுவாக எல்லாச் சமயத்தினராலும், சிறப்பாக இஸ்லாமிய மக்களாலும் மறக்க முடியாதவையாகும். தமிழகம் முழுவதுமிருந்து வருகின்ற முஸ்லீம் மக்களுடன், அவர் நீண்ட காலமாக நெருக்கமான தொடர்பு கொண்டவர். இஸ்லாமிய சமூகத்தில் அவருக்கு மிகுந்த செல்வாக்கும், நல்ல மதிப்பும் உண்டு. இஸ்லாமிய இலக்கியங்களையும், சமய உண்மைகளையும் நன்கறிந்தவர். இன்றைய இஸ்லாமியத் தலைமுறையினரில் சிலர் கூட அவர் மூலம் இஸ்லாத்தைப் பற்றித் தெரிந்துகொண்டார்கள் என்பது மிகையாகாது.

சென்ற ஆண்டு கும்பகோணத்தில் நடைபெற்ற அகில இந்திய மீலாத் விழாவில் நபி மணி[ஸல்-அம்] அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும், நற்றொண்டுகளையும் குறித்து அவர் கொடுத்த குரல் ஒலி, நாடு முழுதும் நன்கு பரவியது. இன்று அது நூல் வடிவில் வெளிவருகிறது, இது அருமையும் பெருமையும் வாய்ந்ததாகும்.

இந்நூலை நான் பார்வையிட்டு மகிழ்ந்தேன். கருத்துகள் சுவையும், நயமும் கலந்து மிளிர்கின்றன. செய்திகள் ஆதாரத்தோடு விளக்கம் பெற்றிருக்கின்றன. நாயகம் அவர்களைப் பற்றி நாவலர் விசுவநாதம் அவர்கள் எவ்வளவு ஆராய்ந்திருக்கிறார்கள் என்பதற்கு இந்நூலே ஒரு சான்று.

அண்ணல் நபி [ஸல்-அம்] பற்றி அறிந்து கொள்ள ஆசையுள்ளவர்களுக்கு இச்சிறிய நூல் போதுமானது என்று கூறும் அளவிற்கு எனக்குத் துணிவு ஏற்படுகிறது.

பொதுவாக தமிழக மக்களும், குறிப்பாக இஸ்லாமிய மக்களும் இந்நூலை ஆழ்ந்து படித்து எம்பெருமானார் கலைமறை முகம்மது [ஸல்-அம்] அவர்களின் வரலாற்றினையும், போதனைகளையும் நன்கறிந்து, தமது வாழ்க்கைக்குப் பயன்படுத்திப் பயனடைய வேண்டுமெனவும், இதன் ஆசிரியர் இது போன்று இன்னுஞ் சில நூல்களையும் எழுதி, நமக்கு உதவி ஊக்கமளிக்க வேண்டுமெனவும் எல்லாம் வல்ல ஆண்டவனாகிய அல்லாஹவை வணங்கி வேண்டிக் கொள்கிறேன்.

தங்களன்புள்ள
சையத் அப்துல் கனி
திருச்சிராப்பள்ளி
29-03-74