நெஞ்சக்கனல்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.



நெஞ்சக்கனல்




நா. பார்த்தசாரதி

(மணிவண்ணன்)

 


தமிழ்ப் புத்தகாலயம்
58.டி.பி.கோயில் தெரு, N.K.T.பெண்கள் பள்ளி எதிரில்
திருவல்லிக்கேணி, சென்னை-600005

தொலைபேசி: 84 32 26

நெஞ்சக்கனல் (சமூக நாவல்)

முதற் பதிப்பு: மே, 1968

இரண்டாம் பதிப்பு: ஏப்ரல், 1971

மூன்றாம் பதிப்பு: அக்டோபர், 1974

நான்காம் பதிப்பு: அக்டோபர், 1978

ஐந்தாம் பதிப்பு: மார்ச், 1984

ஆறாம் பதிப்பு: ஜூலை, 1993

விலை: ரூ. 27–00


NENJAKKANAL

Tamil social novel

by NAA. PARTHASARATHY

(c) Naa. Parthasarathy

Sixth Edition : July, 1993

192 Pages

10 pt. Letters

10.9 Kg. white printing

18 x 12.5 cms

Box board binding

Bama Prasuram, Madras–600 002

TAMIL PUTHAKALAYAM

58, T. P. Koil Street

Triplicane : Madras–600 005

Price Rs. 27–00


அச்சிட்டோர்

பாமா பிரசுரம்

சென்னை–600 002.

பதிப்புரை


“...ஆறாதே நாவினாற் சுட்ட வடு” என்று வள்ளுவப் பேராசான் வற்புறுத்துகிறார். ஏன்? குற்ற உணர்வு நெஞ்சில் கனலாக எரிந்து கொண்டிருப்பதால்தான் அந்த வடு ஆறாத புண்ணாக நிலைத்துவிடுகிறது. அந்த நெஞ்சக் கனலை அவித்துவிடும் ‘ஆற்றல்’ உடையவர்களுக்கும், அல்லது அக்கணலே தோன்றாத உள்ளம் படைத்தோர்க்கும் ‘நாவினாற் சுட்ட வடு’ புண்ணாவதில்லை என்பது உலகம் கண்ட அனுபவ உண்மை.

மனச்சாட்சியின் குரலுக்குச் செவி சாய்ப்பவர்களுக்கெல்லாம் ‘நெஞ்சக் கனல்’ தோன்றுவது இயற்கை. அக்கனல் மனிதனை எரித்து விடுவதில்லை. அவனுள்–அவனது பலவீனமாகக் கிளர்ந்தெழும் தீய உணர்ச்சிகளையே எரித்துச் சாம்பலாக்குகிறது. வேள்வித் தீக்குச் சமானமான இந்த “நெஞ்சக்கனல்” அவிந்துவிடாமல் காப்பாற்றிக் கொள்ளும் எந்த மனிதனும் முழு மனிதனாக உயர முடியும். அவ்வாறு உயர்ந்த ஒரு மனிதர் இக்கதையில் வருகிறார். 

கடந்த கால் நூற்றாண்டில் நமது நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ள எத்தனையோ குழப்பங்களுக்கிடையிலும் நம் மக்களின் மனச்சாட்சி முற்றிலும் மரத்துப்போய் விடவில்லை என்ற உண்மையை இந்நாவல் மிகவும் தெளிவாக விளக்குகிறது.

இனிய காதல் கதைகளைவிட இம்மாதிரிப் பிரச்னைகளை வைத்துக் கதை பின்னுவது கொஞ்சம் சிரமமான காரியமே. அந்தச் சிரமமான காரியத்தைத் திறம்படவும் அழகாகவும்.. செய்து முடித்திருக்கிறார் ஆசிரியர் நா. பார்த்தசாரதி. அவருக்கு எங்கள் மனப்பூர்வமான நன்றி உரித்தாகுக.


சென்னை, கண. முத்தையா,

18–5–68. தமிழ்ப் புத்தகாலயம்.


நெஞ்சக் கனல்
கொடி ஏற்றம்–காப்பு


அந்நியர்களிடமிருந்து விடுதலை பெற்றும் சொந்த நாட்டின் சில பிற்போக்கான மனிதர்களிடமிருந்தும் பிரச்சினைகளிடமிருந்தும் தார்மீக விடுதலைப் பெற போராடிக் கொண்டிருக்கிற ஒரு தேசத்தில், உணவு, மொழி, தொழில், சமதர்மம், எல்லோருக்கும் நல்வாழ்வு ஆகிய சகல துறைகளிலும் நலன் நாடும் ஒரு தேசிய நற்போக்கு நிலையில் இந்த நாவல் பிறக்கிறது. இதற்கான சூழ்நிலையும் திறக்கிறது.

என் நாவல்களில், காந்திய இலட்சியங்களும்,கவியின் நளினமுமுள்ள ஓர் இளைஞனைக் குறிஞ்சி மலரிலும், சத்தியவேட்கையோடு கூடிய ஒரு கல்லூரித் தமிழ் விரிவுரையாளனைப் பொன்விலங்கிலும், நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்கிற நக்கீர தைரியமுள்ள ஓர் உழைக்கும் பத்திரிகையாளனை ‘நெற்றிக்கண்'ணிலும் படைத்தேன்.

இந்த நாவலிலோ சந்தர்ப்பவசத்தால் அரசியல்வாதியாக நேரிடும் ‘பெரிய’ குடும்பத்து மனிதர் ஒருவரைப் படைக்கிறேன். நான் நெருங்கியிருந்து கண்ட சில அரசியல்வாதிகளின் சாயல்களும் நான் விலகியிருந்து உணர்ந்த பல அரசியல்வாதிகளின் சாயல்களும் இதில் வராது என்று உங்களுக்கு இந்த முன்னுரையில் உத்தரவாதம் கொடுப்பது அவ்வளவு நியாயமாக இருக்க முடியாது அல்லவா? ‘ஆப்ஸர்வேஷன்’ எழுத்தாளனின் குணமாகுமா, குற்றமாகுமா? என்று உங்களைக் கேட்டால் நீங்கள் எப்படி முடிவு கூறுவீர்களோ  அப்படியே இது நியாயமுமாகலாம்; நியாயமாகாமலும் இருக்கலாம்.

ஆனால் என்னுடைய மனோதர்மத்தையே ஒரு நியாயமாக நிறுத்தித் திருவிழாவுக்குக் காப்புக் கட்டிக்கொண்டு கொடியேற்றுவதுபோல் அதனுயரத்தில் என்னுடைய சத்தியமான தேசிய நம்பிக்கைகளை ஏற்றி உயர்த்திவிட்டு இந்த நாவலை எழுதத் தொடங்குகிறேன். இதை இந்தச் சமயத்தில் எழுதுவதற்குச் சிறப்பான காரணம் எதுவும் இல்லை. எந்தச் சமயத்தில் எழுதினாலும் ஏதாவது ஒரு காரணம் இருக்குமே; அதுதான் இந்தச் சமயத்திலும் காரணமாக இருக்கிறது; சிறப்பாகவும் இருக்கிறது. இனி. மேலே படியுங்கள்.

ஓ! ஏதோ ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேனே!

ஆம்! இப்போது நினைவு வருகிறது. இந்த நாவலைப் படிப்பதனால் என்ன இலாபம் என்று உங்களில் சிலர் கேட்கலாம்! அல்லது அப்படிக் கேட்க நினைக்கலாம்.

படிக்காமல் தவற விடுவதனால் நஷ்டம் நிச்சயமாக உண்டு என்று மட்டும் உறுதியாகச் சொன்னால் அப்படிச் சொல்வதற்காக என்னை மன்னிப்பீர்களா?


நா. பார்த்தசாரதி

(மணிவண்ணன்)

உள்ளடக்கம்


"https://ta.wikisource.org/w/index.php?title=நெஞ்சக்கனல்&oldid=1520015" இலிருந்து மீள்விக்கப்பட்டது