திருக்குறள் புதைபொருள் 1

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.



தி ரு க் கு ற ள்

புதைபொருள்

[முதற் பாகம்]

 

முத்தமிழ்க் காவலர், கலைமாமணி
டாக்டர் கி. ஆ. பெ. விசுவநாதம், டி. லிட்.

 

பாரி நிலையம்
184.பிராட்வே.சென்னை.600108

முதற் பதிப்பு : ஜூலை, 1956
இரண்டாம் பதிப்பு : பிப்ரவரி, 1957
மூன்றாம் பதிப்பு : நவம்பர், 1958
நான்காம் பதிப்பு : ஏப்ரல், 1960
ஐந்தாம் பதிப்பு : செப்டம்பர், 1962
ஆறாம் பதிப்பு : ஜூன், 1966
ஏழாம் பதிப்பு : ஆகஸ்ட், 1970
எட்டாம் பதிப்பு : ஆகஸ்ட், 1974
ஒன்பதாம் பதிப்பு : ஜனவரி, 1979
பத்தாம் பதிப்பு : டிசம்பர், 1982
பதினொன்றாம் பதிப்பு : 1990


 

விலை: ரூ. 4-50

 



அச்சிட்டோர் : தொ.பே. 477820
சாலை அச்சகம், 11 திருவீதியான் தெரு
கோபாலபுரம், சென்னை-600 086 [சாலை 187]

முன்னுரை

திருக்குறள் தமிழகத்தின் செல்வம்! அதுவும் தமிழனின் சொந்தச் சொத்து! அது உலகின் ஒப்பற்ற செல்வங்களில் ஒன்றாக இன்றும் திகழ்ந்து வருகிறது!

முத்துக் குளிக்கும் மக்கள் தங்கள் மூச்சு வலிமைக்கு ஏற்ற அளவு கடலில் மூழ்கி, செல்வங்களை அள்ளி வருவது போல, குறளில் மூழ்கும் மக்களும், தங்கள் அறிவு வலிமைக்கு ஏற்ற அளவு செல்வங்களை அள்ளி மகிழலாம்.

உலகில் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப் பெற்ற நூல்களில் திருக்குறள் மூன்றாவது இடத்தைப் பெற்றிருக்கிறது. முதல் இரண்டும் பைபிளும், குரானும் ஆகும். அவை "சமய நூல்கள்" என்று ஒதுக்கப்பட்டு விடுமானால், உலக இலக்கியங்களிலேயே திருக்குறள் ஒன்றிற்கே முதல் இடம் கிடைத்திருக்கிறது என்று பெருமையடையலாம்.

திருக்குறள் ஒரு வாழ்வு நூல்; அதுவும் வாழ்ந்து காட்டிய ஓர் பேரறிஞனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கபெற்ற ஒரு பெருநூல். வாழ்வு அனைத்தும் வாழ்வாகாது. வாழ்வில் உயிர் பெறுவதே வாழ்வு. குறள் அத்தகைய வாழ்விற்கு வழிகாட்டும் ஒரு வழிகாட்டி!

மனிதன் மனிதனாகப் பிறந்தும், பறவையைப் போல ஆகாயத்தில் பறக்கவும், மீனைப் போலத் தண்ணீரில் நீந்தவும் கற்றுக்கொண்டிருக்கிறான். ஆனால், மனிதன் மனிதனாகப் பிறந்தும், மனிதனைப்போவத் தரையில் எவ்வாறு நடப்பது என்பதைக் கற்றுக்கொள்ளவில்லை. அதைக் கற்றுக்கொடுப்பது திருக்குறள்.

குறளுக்கு உள்ள சிறப்புக்கள் பல. அவற்றுள் ஒன்று அதன் ஒப்பற்ற இயல்பு. அது சிறியவர்களைக் கண்டால் நெருங்கியிருந்துகொண்டு கருத்துக்களை வெளிப்படையாகவே அள்ளி அள்ளி ஊட்டுவதும், அறிஞர்களைக் கண்டு விட்டால் எட்டியிருந்து உயர்ந்த கருத்துக்களைக் கொண்டு சிறந்த விருந்தளித்து வருவதுமாகும்.

இந் நூலில் 12 குறள்கள் ஆராயப் பெற்றுள்ளன. முதல் எட்டுக் குறள்களில் புதைபொருள்களும், பின் நான்கு குறள்களில் மறைபொருள்களும் விளக்கப் பெற்றுள்ளன. மாறுபட்ட பொருள்கள் தமிழகப் பேரறிஞர்களால் ஏற்கப் பெறுமானால் மகிழ்வேன். தவறுகள் இருந்து திருத்தப்பெறுமானால் ஏற்பேன்.

திருக்குறளை மேற்போக்காகப் படிப்பதைவிடச் சிறிது கருத்துான்றிப் படிப்பது நல்லது. அதுவும் அறிவதற்காக, போதிப்பதற்காக, எழுதுவதற்காக, பேசுவதற்காக என்று இல்லாமல் "நடந்து ஒழுகுவதற்காக" என்று படிப்பது நல்லது!

என்னால் இயன்ற அளவு செய்யும் இலக்கியத் தொண்டுகளில் ஒன்று இது. தமிழக மக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது எனது விருப்பம். இதை எழுதும்படி இடைவிடாது தூண்டிய அன்பர்களுக்கு என் வணக்கம். இதனை நல்ல முறையில் வெளியிட்டு உதவிய பாரி நிலையத்தாருக்கு எனது நன்றி. மதிப்புரை வழங்கிய பெரும் பேராசிரியருக்கு எனது நன்றியும், வணக்கமும்!

திருச்சிராப்பள்ளி,

தங்கள் அன்பிற்குரிய,

1—7—1956

கி.ஆ.பெ. விசுவநாதம்

மதிப்புரை

டாக்டர் திரு. அ. சிதம்பரநாத செட்டியார்

அவர்கள், எம். ஏ., பி எச். டி.

தமிழ்ப் பெரும் பேராசிரியர்,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்

திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் திருக்குறளை எழுத்தெண்ணிப் படித்தவர். அதன் நுண்பொருள்களை ஆய்ந்து பிறர்க்கு எடுத்து வழங்கும் நாநலம் படைத்தவர். "எண்பொருள வாகச் செலச் சொல்லித் தான் பிறர்வாய் நுண்பொருள் காண்பதறிவு" என்னும் திருக்குறளுக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் அறிவு நிரம்பியவர்.

அவரால் இயற்றப்பட்ட இந்நூல், புலவர்க்கும் பொது மக்கட்கும் இனியதோர் விருந்தாகும். திருக்குறட்பாக்களில் வரும் சொற்களை அலசியலசி ஆராய்ச்சி செய்து, கடைந்தெடுத்த நுண்பொருள்களை இனிய, எளிய, செந்தமிழ் நடையில் இந்நூலினுள் அவர் தந்திருப்பதை வரவேற்கின்றேன். "கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்திக் குறுகத் தறித்த குறள்" என்றதன் உண்மையானது, இச் சிறிய பெருநூலால் நன்கு விளங்குகிறது.

'ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்' என்ற இடத்தில் வரும் "உயிரினும்" என்ற சொல்லுக்கும், 'பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு' என்ற இடத்து வரும் "பிறர்" என்ற சொல்லுக்கும், 'உடுக்கை யிழந்தவன் கைபோல' என்ற இடத்து வரும் "இழந்தவன்" என்ற சொல்லுக்கும் திரு. விசுவநாதம் தந்திருக்கும் விளக்கங்கள் பாராட்டத் தக்கவை.

பதசாரம் எழுதுதலில் பரிமேலழகர் அழகர் என்பார்கள். ஆயினும் இந்நூலில் காட்டப்படும் புதை பொருள் விளக்கத்தை உற்று நோக்குவோர்க்கு இவ்வாசிரியர் பரிமேலழகரை விஞ்சிவிட்டார் என்பது புலப்படும்.

திருக்குறட் சுரங்கத்துட் புகுந்து, பன்னிரண்டு பாளங்களை எடுத்துவந்து, அவற்றின் சிந்தைக்கினிய அழகினைச் செவ்விதின் எடுத்துக் காட்டியுள்ள திரு. விசுவநாதனாருக்குத் தமிழுலகு கடப்பாடுடையது. அவர் மென்மேலும் இவைபோன்ற நுண்பொருள்களைத் தோண்டி எடுத்துத் தருதல் வேண்டுமென விழைகின்றேன். பலரும் இதைப் படித்துப் பயன்பெறுவது நல்லது.

அண்ணாமலை நகர்

தங்கள்,

18--6-1956

அ. சிதம்பரநாதன்

 

தமிழுக்குத் தொண்டு செய்வதில்

பொன், பொருள், புகழ், பதவி

ஆகிய நான்கையும் கருதாது

நற்பணி புரிந்து,

ஆன்று அவிந்து அடங்கிய சான்றோர்,

எனது ஆசிரியர்,

நாவலர்

திரு. ந. மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா

அவர்களின் திருவடிகளில்

இந்நூல் ஒரு அன்பு மலராக வைக்கப் பெறுகிறது.