திருவாசகத்தேன்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.


திருவாசகத் தேன்
 

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

 


வானதி பதிப்பகம்



திருவாசகத் தேன்





தவத்திரு குன்றக்குடி அடிகளார்




முதற் பதிப்பு : ஜூலை, 1995

இரண்டாம் பதிப்பு : பிப்ரவரி, 1999

மூன்றாம் பதிப்பு : டிசம்பர், 2001


திருநாவுக்கரசு தயாரிப்பு



விலை : ரூ. 32.00


□ TITLE : THIRUVASAKA THEN
□ AUTHOR : THAVA THIRU KUNRAKUDI ADIGALAAR
□ LANGUAGE : TAMIL
□ EDITION : THIRD EDITION, DECEMBER, 20 FEBRUARY, 1999
□ NO. OF PAGES : viii + 184 = 192
□ PUBLISHED BY : VANATHI PATHIPPAKAM, 13, DEENADAYALU STREET, THYAGARAYA NAGAR, CHENNAI — 17.
□ PRICE : RS. 32.00

பதிப்புரை

ணக்கத்துக்குரிய தவமாமுனிவர் குன்றக்குடி அடிகளார் அவர்கள் "திருவாசகத் தேன்" என்னும் ஒப்பற்ற ஆன்மீக இலக்கியச் செல்வத்தை 'கலைமகள்' மாத இதழில் தொடர் கட்டுரையாக எழுதி தமிழ் மக்களுக்கு வழங்கி வந்தார்கள்.

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் திருவாசகத் தேன் எனும் அரிய செல்வம் நூல் வடிவில் வந்தால் தமிழ் மக்களுக்கு என்றும் பயனுடையதாக இருக்கும் எனக் கருதி வானதி பதிப்பகத்தில் நூலாக்குவதற்கு அவரிடம் அனுமதி கேட்டபொழுது அகமகிழ்வுடன் உடனே இசைவு தந்து நல்லாசி வழங்கி, இந்நூலின் தட்டச்சுப் பிரதிகளை எனக்கு அனுப்பி வைத்தார்கள்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளராகவும், சமயநெறிச் சான்றோராகவும், மாபெரும் சிந்தனையாளராகவும், தத்துவ மேதையாகவும் விளங்கியவர்.

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சமயசமூக-பொருளாதாரத் தொண்டுகள் கணக்கிட முடியாதெனினும் அவருடைய மகத்தான இலக்கியப் பணியின் மணிமகுடமாக அவருடைய திருவாசகத் தேன் திகழ்கிறது.

இந்நூலை, தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கு தமிழ் மக்கள் சார்பில் செலுத்தும் அஞ்சலியாகக் கருதி பக்தி சிரத்தையுடன் வானதி பதிப்பகத்தில் வெளியிட்டுள்ளேன்.

ந்நூலில், மாணிக்கவாசகர் சிவ பெருமானை மனமுருகி வழிபட்ட நிலைகளையும், அவர் பெற்ற சிவானந்தத்தையும் தவத்திரு. அடிகளார் அழகுற எடுத்துக் கூறியுள்ளார்கள். அதற்கு மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்திலிருந்து பல பாடல்களை எடுத்தாண்டுள்ளார்கள். சிறு சிறு புராணக் கதைகளையும் சுவைமிக்க உவமான உவமேயங்களையும், திருவாசகப் பாடல்களின் கருத்துக்களை மெய்ப்பிக்க அடிகளார் பயன்படுத்தியுள்ளமை, அவருடைய நுண்மாண் நுழைபுலத்தை எடுத்துக் காட்டுகிறது.

மனித ஆன்மா தூய்மை பெற- மனிதன் இம்மண்ணில் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்காதிருக்க- அம்மனிதன் மேற்கொள்ள வேண்டிய வினை (செயல்) வகைகளையும், வாழ்வியல் நெறிகளையும் மாணிக்கவாசகரின் மணிமொழிகள் வாயிலாகப் பல அறவுரைகளை நமக்கு அடிகளார் வழங்கியுள்ளார்கள்.

இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் சுவை மிக்க தேனுக்குச் சமமாக உள்ளன. மனிதநேயம் -பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை தவத்திரு அடிகளார் தமக்கே உரித்தான தனித்தமிழில் தந்துள்ளார், பல இடங்களில்.

னிமனிதப் போட்டி, பகைமை, வஞ்சக உணர்வுகளே வளர்ச்சிபெற்று நாடுகளுக்கிடையே யும் வியாபித்துள்ளது. இன்று பல உலக நாடுகளில் போர்க்குணம் தலைதுாக்கி நிற்கிறது. அக் குணத்தை வேரறுக்கவும், உலகில் சாந்தி நிலவவும், அன்பு பெருகவும், அமைதி நிலவிடவும் அடிகளாரின் திருவாசகத் தேன் முழுமையும் பயன்படும் என்றால் அது மிகையாகாது.

சைப்பற்றையும், இறைப்பற்றையும், அற நெறியையும், அன்பு வாழ்க்கையையும் மேற் கொள்ளத் துண்டும் பயன்மிக்க இனியதோர் நூலை தமிழ்ச் சமுதாயத்துக்கு வழங்கிவிட்டு சிவபதமடைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளாரை நினைவில் கொண்டு, அவரைப் போற்றி வணங்கி, இந்நூலை தமிழ் மக்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.

அன்பன்
ஏ. திருதாவுக்கரசு
வானதி பதிப்பகம்

பொருளடக்கம்
 
1
9
18
25
32
40
48
55
63
69
77
84
92
100
107
114
121
127
134
143
151
160
168
176
"https://ta.wikisource.org/w/index.php?title=திருவாசகத்தேன்&oldid=1519988" இலிருந்து மீள்விக்கப்பட்டது