ஓங்குக உலகம்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

ஓங்குக உலகம்





பேராசிரியர் அ. மு. பரமசிவானந்தம்

நிறுவனர், வள்ளியம்மாள் கல்வி அறம்

சென்னை-102





வள்ளியம்மாள் கல்வி அறம்
F-40, முதல் பெருந்தெரு

அண்ணாநகர் கிழக்கு

சென்னை-102

ஓங்குக உலகம்





பேராசிரியர் அ. மு. பரமசிவானந்தம்

நிறுவனர், வள்ளியம்மாள் கல்வி அறம்

சென்னை-102





வள்ளியம்மாள் கல்வி அறம்
F-40, முதல் பெருந்தெரு

அண்ணாநகர் கிழக்கு

சென்னை-102

உரிமைப் பதிப்பு : ஏப்ரல், 1990.
பக்கங்கள் : 188


விலை : ரூபாய் 16.00

உரிமை ஆசிரியருக்கே


‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்’

—பாரதி


மாருதி பிரஸ், 173 பீட்டர்ஸ்ரோடு, சென்னை-600 014.

விற்பனை :

பாரி நிலையம்
184, பிரகாசம் சாலை (பிராட்வே)

- சென்னை-1


முன்னுரை

நான் என் வாழ்வில் வளமளித்த தமிழன்னையை மறவாது போற்றுகின்றேனாயினும், என் அன்னையின் பெயரால் கல்வி அறம் அமைத்து, சென்னை அண்ணாநகரில் என் கல்விப் பணியினைத் தொடங்கியபிறகு அத் தமிழ் உலகை விட்டே நெடுந்துாரம் சென்றுவிட்டதாக நினைத்தேன். எழுபத்தைந்து நூல்களுக்கு மேல் எழுதி அன்னைத் தமிழுக்கு ஆரம் சூட்டி மகிழ்ந்த நான், பெற்ற அன்னைக்கு உற்ற பணி செய்யத் தொடங்கிய பிறகு நூல்கள் எழுதவுமில்லை-வெளியிடவுமில்லை. வெளிநாடுகளுக்குச் சென்றது பற்றிய ஒரு நூலும் (ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்) பள்ளியின் வளர்ச்சி பற்றிய ஒரு நூலும் (திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்) அண்மையில் வெளிவந்தன. என் நூல்களுள் சில பாட நூல்களாக அமைய அவற்றின்வழி பெற்ற பொருளே இவ்வறத்துக்கு மூலப் பொருளாக அமைந்தது என்பதை நான் பலமுறை சுட்டியிருக்கிறேன்.

சென்ற ஆண்டிலே நான் குவித்து வைத்திருந்த பழந்தாள்களையெல்லாம் பகுத்துப் பார்க்க நேரம் கிடைத்தது. நான் பல ஆண்டுகளில் பேசிய பேச்சுக்கள் (நான் பெரும்பாலும் பேசுவதையெல்லாம் எழுதிவைக்கும் வழக்கம் உடையவன்), பல இதழ்களுக்கு எழுதிய எழுத்துக்கள் என் கையகப்பட்டன. அவற்றை பகுத்துப் பார்க்கும்போது என் மாணவர் ஓரிருவர் உடனிருந்தனர். அவர்கள் இக்கட்டுரைகளையெல்லாம் கண்டு, ‘தாங்கள் புதிதாக எழுதாவிட்டாலும் இவைகளைத் தொகுத்து நூலாக்கலாமே’ என்றனர். அதுவும் சரி என்றே எனக்கும் பட்டது. உடனே சிலவற்றை ஆய்ந்து எடுத்துத் தொகுக்க நினைத்த போது சில அடிப்படைகளைக் கொண்டேன். கட்டுரைகளில் சிறிய அளவில் உள்ளவற்றை ஒரு நூலாகவும், பெரியவற்றை வேறு நூலாகவும் அமைக்கலாம் எனக் கருதினேன். அக்கருத்தின்வழியே இச் சிறு நூல் வெளிவருகின்றது.

இதில் இருபத்தைந்து கட்டுரைகள்-வெவ்வேறு காலங்களில் எழுதியவை-பேசியவை இடம் பெறுகின்றன. அனைத்தும் அளவில் சிறியனவாகவே உள்ளன. எனினும் ‘காகிதம் செய்வதிலும் அச்சுக் கலையிலும் சீன் நாட்டின் பங்கு’ என்ற கட்டுரை பெரியதாக-பதினாறு பக்க அளவில் நீண்டுள்ளது. இக் கட்டுரை எப்பொழுது-எதற்காக எழுதினேன் என்பது நினைவில் இல்லை. மேலும் இது யாருக்காகவோ ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப் பெற்ற ஒன்று எனவும் நினைக்கிறேன். எனவே இது என் உள்ளத்தெழுந்தது எனக் கூற முடியாது. மற்றவை அனைத்தும் அளவில் சிறியனவாகவே உள்ளன.

நான் ஆயுள் எல்லையில் முக்கால் நூற்றாண்டைக் கடந்து வாழ்கின்றவன். ஒருகால் அரசியலில் பங்கு பெற்று, தேர்தலில் வெற்றி பெற்றவன். 1937இல் இராஜாஜி முதலமைச்சராக இருந்த காலந்தொட்டு நாடாண்ட நல்லவர்களையெல்லாம் ஓரளவு அறிந்தவன். பச்சையப்பன் கல்லூரிக்கு வந்தபின் (1944) நான் முற்றும் அரசியலை விட்டு விலகினேன் என்றாலும், அரசியல் தலைவர்கள்-முதல்வர்களோடு தொடர்பு எப்படியோ இருந்துவந்தது. எனவேதான் இதில் நான் பழகிய முதல்வர்கள் பற்றிய கட்டுரைக்ள் இடம் பெறுகின்றன. அப்படியே நான் அறிந்த பெரும்புலவர் இருவர் இங்கே இடம்பெற்றுள்ளனர். என்னை அணைத்து வளர்த்த பச்சையப்பரும் உடன் உள்ளார்.

இந் நூலினை ‘சமுதாயம்’, ‘நாட்டின் நலம் கண்டவர்’, ‘ஆய்வு நெறி’, ‘இலக்கிய்நெறி’ என்று நான்கு பிரிவாகப் பாகுபடுத்தி மொத்தம் இருபத்தைந்து கட்டுரைகளை இதில் இணைத்துள்ளேன். அவற்றுள் முதல் கட்டுரையாக உள்ள ‘ஓங்குக உலகம்’ என்ற பெயரையே இந்த நூலின் பெயராகவும் அமைத்துள்ளேன். கட்டுரைகள் பெரும்பாலும் உலக சமுதாய வளர்ச்சிக்கும் மக்கள் வாழ்வின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக உள்ளமையாலும், அத்தகைய வளர்ச்சிக்கு வழிவகுத்துச் செயலாற்றியவர் வாழ்க்கை பற்றிய குறிப்புகள் உள்ளமையாலும், ஒருசில வருங்கால உலகுக்கு வழிகாட்டியாக:-ஓங்க உதவுவனவாக உள்ளமையாலும் ‘இப்பெயர்’ இந்நூலுக்குப் பொருந்தும் என்றே எண்ணுகிறேன்.

பொதுவாக உலக நெறியும்-சிறப்பாகத் தமிழ் நெறியும் இக் கட்டுரைகளில் காட்டப் பெறுகின்றன. மொழி தோன்றிய நாள் தொட்டு-மனிதவாழ்வு மலர்ந்த நாள் தொட்டு எல்லா நீதிகளையும் நெறிமுறைகளையும் கற்றும் கேட்டும் மற்றவர்களுக்கு உணர்த்தியும் நின்ற-நிற்கின்ற மனிதன்-எல்லாவ்ற்றையும் கண்டுவிட்டோம் என ஏமாக்கும் மனிதன்-சற்றே நின்று, நினைத்து, சென்ற காலத்தையும் வருங்கால நிலையையும் எண்ணுவானாயின் திருந்த மாட்டானா என்ற உள்ளக் குமுறலோடு ஒருசில கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. வையத்துள் வாழ்வாங்கு வாழ மனிதன் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் நெறி-ஆட்சி நெறி-சமுதாய நெறி பற்றிய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. எனவே ‘ஓங்குக உலகம்’ என்ற பெயர் வழியே வெளிவரும் இந்நூல் ஓரளவாயினும் சமுதாய உயர்வுக்கு-வாழ்வுக்குப் பயன்படும் வகையில் வழிகாட்டியாக அமையும் எனஎண்ணுகிறேன். கற்போர் முடிவு செய்வார்களாக! பல ஆண்டுகளுக்கு முன்பு-பலவகை நிலைகளில் எழுதப் பெற்றமையின் இக்கட்டுரைகளில் தொடர்ச்சியான பொருள்நிலை இல்லை. எனினும் அனைத்தும் உலகம் சிறக்க-ஓங்க-உயர வழிகாட்டுவனவேயாம்.

இந்நூல் அச்சிடுங்காலை இதனைக் கண்டு அச்சுப் பிழைகளை ஒப்பு நோக்கித் திருத்தி உதவிய பச்சையப்பர் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் சா. வளவன்.அவர்களுக்கு என் நன்றி உரித்து.


தமிழ்க்கலை இல்லம்
சென்னை.30
14–4–90

பணிவுள்ள,
அ.மு. பரமசிவானந்தம்

உள்ளே


பக்கம்

I சமுதாயம்

1. 9
2. 13
3. 18
4. 21
5. 25
6. 33
7. 39

II காட்டின் கலம் கண்டவர்

8. 44
9. 55
10. 64
11. 67
11. 75
13. 85
14. 89
15. 100

III ஆய்வு நெறி

16. 108
17. 118
18. 128
19. 144

IV இலக்கிய நெறி

20. 152
21. 161
22. 169
23. 172
24. 179
25. 183

"https://ta.wikisource.org/w/index.php?title=ஓங்குக_உலகம்&oldid=1519865" இலிருந்து மீள்விக்கப்பட்டது