போதி மாதவன்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.



போதி மாதவன்

(புத்தர் வரலாறு)

 

ஆசிரியர்

ப. ராமசாமி

 

முல்லை நிலையம்

9, பாரதி நகர் முதல் தெரு,

தி. நகர், சென்னை-600 017

முதற் பதிப்பு : டிசம்பர், 1999

முல்லை : 117


நூல் பற்றிய விவரங்கள்


நூற் பெயர் : போதி மாதவன்
ஆசிரியர் : ப. ராமசாமி
தாள் : வெள்ளைத்தாள் 10.5 கி.கி.
நூலின் அளவு : 18.5x 12.5 செ. மீ
பக்கங்கள் : 416
வெளியிடுவோர் : முல்லை நிலையம்
9, பாரதி நகர் முதல் தெரு
தி. நகர், சென்னை -600 017
விற்பனை உரிமை : பாரி நிலையம்
184, பிராட்வே ,சென்னை -108
பொருள் : வரலாறு

விலை : ரூ. 85-00

அச்சிட்டோர் : ஸ்ரீ ராஜேஸ்வரி பிரிண்டிங் ஒர்க்ஸ்,
12, கஜபதி தெரு,
சென்னை-5.

முன்னுரை

புத்தர் பெருமானின் சரிதையை விரிவாக எழுத வேண்டுமென்று பல்லாண்டுகளாக எனக்கு ஆவல் இருந்து வந்தது. 1951-ஆம் ஆண்டு, ஒரு சமயம் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையவர்களிடம் என் ஆவலைத் தெரிவித்தேன். உடனேயே அவர்கள் மகிழ்ச்சியுடன் துள்ளி அமர்ந்துகொண்டு, ‘அவசியம் எழுதுங்கள், சீக்கிரம் எழுதி முடியுங்கள்! எனது “ஆசிய ஜோதி” யிலுள்ள பாடல்களில் தேவையானவைகளை எடுத்து உபயோகித்துக் கொள்ளுங்கள்!’ என்று ஆர்வத்தோடு ஆசி கூறினார்கள். ஆசிய ஜோதியாய்-அகில ஜோதியாய்-விளங்கிய போதி மாதவனிடம் கவிமணியவர்கள் கொண்டிருந்த ஈடுபாடு எனக்கும் ஊக்கமளித்தது. அரசு நிழலிருந்து அருளறம் பூண்ட அண்ணலின் சரிதையையும், அவரது தருமத்தையும் பற்றி எழுதுவதற்குத் தகுதியும் ஆற்றலும் இல்லாதிருப்பினும் எழுத முற்பட்டேன். அதன் விளைவாக ஆறு நூல்கள் உருவாயின.

பெருமானைப்பற்றிய சரித்திர ஆதாரங்கள் குறைவு: கற்பனைக் கதைகளே அதிகம்; பெளத்தத் திருமுறைகளிலிருந்து சில குறிப்பிட்ட சரித்திர ஆதாரங்களே கிடைக்கின்றன. அவைகளில் புத்தர் தமது சுயசரிதையைத் தாமே கூறியுள்ள பகுதிகள் மேலும் சுருக்கமானவை. சரித்திரக் குறிப்புகளை மட்டும் ஆதாரமாய்க் கொண்டு எழுதினால், நூல் சதையற்ற எலும்புக் கூடு போலிருக்கும். கதைகளையே ஆதாரமாய்க் கொண்டு எழுதினால், புதிய புராணமாகிவிடும். எனவே சரித்திரம், புராண வரலாறு ஆகிய இரண்டையும் துணைக்கொண்டு நான் இந்நூலை எழுதியுள்ளேன். கௌதம புத்தர் சரித்திர நாயகர் என்பதிலும், அவரது வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சிகளிலும் துளியேனும் சந்தேகமில்லை. பௌத்த தருமம் இந்தியாவில் 1,500 ஆண்டுகட்கு மேலாக நிலைத்து வளர்ந்து வந்திருக்கிறது. அந்தக் காலத்திலேதான் உலகிலே இந்நாடு மகோன்னத நிலையை அடைந்திருந்தது. வட இந்தியாவிலே, கோசலம், மகதம் முதலிய சில பகுதிகளில் மட்டும் பரவியிருந்த பௌத்த சமயத்தை அசோக சக்கரவர்த்தி உலகப் பெருஞ் சமயமாக்கியிருந்தார். ‘இங்கே பகவர் பிறந்தார்’ என்று பொறித்துள்ள கற்றூண் ஒன்றை அவர் நாட்டி வைத்திரா விட்டால், பெருமான் அவதரித்த தலம்கூட உலகுக்குத் தெரிந்திருக்க முடியாது. பிறவிப் பிணி மருத்து வரும், நல்லறம் பகர்ந்த நாயகரும், சன்மார்க்கப் போத கரும், தயாவீரரும், கலைகட்கெல்லாம் நாதருமான சாக்கிய முனிவர் சம்பந்தமான கல்வெட்டுக்களும், ஸ்தம் பங்களும், ஆலயங்களும், விகாரைகளும் சரித்திரக் குறிப்புக்கள் தயாரிக்க மிகவும் உதவியாக இருக்கின்றன.

சுமார் 2,500 ஆண்டுகட்கு முன்னர் ததாகதராகிய புத்தருடன் நெருங்கி வாழ்ந்து வந்த ஆதிச்சீடர்கள் பதின்மர்: காசியபர், ஆனந்தர், சாரீபுத்திரர், மௌத் கல்யாயனர், அநுருத்தர், சூபூதி, பூர்ணர், காத்தியாயனர், உபாலி, இராகுலர். இவர்களில் சாரீபுத்திரர் பகவருடைய கடைசி யாத்திரையில் சில இடங்களுக்கு மட்டும் அவரோடு சென்றுவிட்டுத் தமது கிராமத்திற்குச் சென்று தேகவியோகமானார். அதன் பின்பு மௌத்கல்யாயனர் புறச்சமயிகளின் சூழ்ச்சியால் கொலையுண்டு இறந்தார். இவர்கள் பெருமானின் வலக்கரமாகவும், இடக்கரமாகவும் இருந்து பணியாற்றி வந்த மேதாவிகள். இவர்களுடைய அஸ்திகள் பிற்காலத்தில் சாஞ்சி ஸ்தூபம் ஒன்றில் புதைக்கப் பெற்றிருந்தன. ஒருகால் இந்திய அரசாங்கத்தின் புதைபொருள் ஆராய்ச்சித் தலைமையதிகாரியாயிருந்த தளபதி கன்னிங்ஹாம் 1850-ஆம் ஆண்டு அவைகளைக் கண்டெடுத்து, லண்டனிலுள்ள விக்டோரியா ஆல்பர்ட் கண்காட்சிச் சாலைக்கு அனுப்பி வைத்தார். இந்திய நாடு விடுதலை பெற்றபின், தேடுதற்கரிய அச்செல்வங்கள் திரும்பக் கிடைத்தன.

அவைகளை அடக்கம் செய்து வைப்பதற்காக இரண்டு லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட செலவில் இந்திய மகாபோதி சங்கத்தார் சாஞ்சியிலேயே புதிதாக ஒரு விகாரை அமைத்திருந்தார்கள். சாஞ்சிக் குன்றில் பழைய விகாரைக்கு அருகிலேயே இது அழகுற அமைந்துள்ளது.

நவம்பர் 30ல் ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட மக்ககரின் பெருங்கூட்டத்தோடு அஸ்திகள் அடங்கிய தங்கப் பேழை ஊர்வலமாக எடுத்துவரப் பெற்றது. மணிகள் முழங்கவும், மந்திர கீதங்கள் ஒலிக்கவும், பிக்குக்களும், பிக்குணிகளும் தரையில் விழுந்து வணங்கவும், மக்களனைவரும் பணிந்து போற்றிப் பரவசமாக நிற்கவும், இந்திய மகாபோதி சங்கத்தின் தருமகர்த்தா புனித பிக்கு ஸ்ரீனிவாச நாயகத்தேரரும், இலங்கை மகாபோதி சங்கத் தலைவர் புனித பிக்கு டாக்டர் பி. வஜிராணண மகாதேரரும் அஸ்திகளை இந்தியப் பிரதம மந்திரி திரு. பண்டித நேரு அவர்களிடமிருந்து பெற்று விகாரையுள் அடக்கம் செய்தனர். புத்த கயையிலிருந்தும், அனுராதபுரத்திலிருந்தும் வந்திருந்த இரண்டு அரசிளங் கன்றுகளும் நடப்பெற்றன.

இந்த அரிய நிகழ்ச்சியும், மகாநாட்டுச் சொற்பொழிவுகளும் இந்நாட்டு மக்களுக்குப் பௌத்த தருமத்தின் பண்டைப் பெருமைகளைப் படம் பிடித்துக் காட்டியிருக்கும். ‘கண் பிறர்க்களிக்கும் கண்ணோன்’ என்று துதிக்கப்பெற்ற புத்தர் எண்பது ஆண்டுகள் இனிது வாழ்ந்து, இந்நாட்டில் காடும் கிராமமும், நாடும் நகரும் சுற்றிவந்து, மக்களிடம் அருள் சுரந்து தரும உபதேசம் செய்து, அற ஆழியை உருட்டிவந்த செய்தி கற்றோர் யாவருக்கும் நினைவுக்கு வந்திருக்கும். பௌத்த தருமம் பற்பல நூற்றாண்டுகளாக நாடெங்கும் பரவித் தழைத்து வளர்ந்து வந்தமை இப்பொழுது பழங் கதையாய்ப் போய்விட்டது. தூர தொலைவிலுள்ள ஆசிய நாடுகள் பலவற்றிலேயே பௌத்தம் பல்கி வளர்ந்து வருகிறது. பிறந்த நாட்டிலே, கிழக்குப் பாகிஸ்தான் மூலையிலேதான் அதைத் தேடிக் காணவேண்டியிருக்கிறது! ஆயினும் பௌத்த தருமத்தின் உயரிய கொள்கைகள் பலவும் இங்குள்ள பிறசமயங்களிலே ஊறிக் கலந்துள்ளன. பெரும்பாலான அறிவாளர்கள், தாங்கள் பௌத்தர்களாயில்லாதிருப்பினும், அதனிடத்திலும், புத்தரிடத்திலும் அன்பு கொண்டுள்ளனர்.

புத்தரைப் பகவான் என்று பக்தர்கள் பக்தியால் பரவுவார்கள். அவர் நம்மைப் போன்ற மனிதரே; அரண்மனையிலே பிறந்து, அரச போகங்களைத் துய்த்தவர்; ஆனால், அரியாசனத்தைத் துறந்து வெளியேறிய பின்பு, காடு தான் அவருக்கு வீடு; கையிலிருந்த ஓடு தான் வற்றாத செல்வம். அந்நிலையில் இராஜகிருக நகரில் ஒருநாள் முதன் முதல் பிச்சையெடுத்தார். திருவோட்டில் சேர்ந்த உணவுடன் அவர் ஊருக்கு வெளியே ஒதுக்குப் புறத்திற்குப்போய் உணவருந்த அமர்ந்தார். ஓட்டிலிருந்து ஒரு கவளம் எடுத்து வாயில் போடுகிறார், வாய் குமட்டுகிறது! அறுசுவை உண்டி எங்கே! கண்டவர் வீடுகளில் வாங்கிய கதம்பச் சோறு எங்கே! உணவு உள்ளே செல்ல மறுத்தது.

ஆனால் சித்தார்த்தர் அதை வெளியே தள்ள மறுத்தார். உலகின் துக்கத்தையெல்லாம் ஒழித்துக் கட்ட வேண்டுமென்று கிளம்பிய உத்தமர் பிச்சைச் சோற்றுக்குப் புறங்கொடுத்து ஓட முடியுமா? எப்படியோ உள்ளத்தில் உரமேற்றிக் கொண்டு அவர் அதை உண்டுவிட்டார். அது முதல்—அதாவது, அவருடைய 20 வயது முதல்—80 வயது வரை அவர் பிச்சைச் சோறே உண்டு வாழ்ந்தார்!

வாழ்நாள் முழுதும் ஒரு கடுஞ் சொல் அவர் வாயிலிருந்து வந்ததில்லை. அவர் செவிகளும் தீ மொழிக்கு அடைத்த செவிகள். மூர்க்கமான விலங்குகளும் செந்தாமரை போன்ற அவர் திருமுகத்தைப் பார்த்தால் சினம் தணியுமென்றால், மக்களைப்பற்றிச் சொல்ல வேண்டிய தில்லை.

ப. ராமஸ்வாமி

"https://ta.wikisource.org/w/index.php?title=போதி_மாதவன்&oldid=1548053" இலிருந்து மீள்விக்கப்பட்டது