நாலடியார் 12-ஆம் அதிகாரம்-மெய்ம்மை

விக்கிமூலம் இலிருந்து

சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியார்[தொகு]

உரை: களத்தூர் வேதகிரி முதலியார்[தொகு]

அறத்துப்பால்: துறவறவியல்[தொகு]

பனிரெண்டாம் அதிகாரம் மெய்ம்மை

[அஃதாவது, உண்மை கூறுதலாம்]

பாடல்: 111 (இசையா)[தொகு]

இசையா வொருபொரு ளில்லென்றல் யார்க்கும் இசையா ஒரு பொருள் இல் என்றல் யார்க்கும்

வசையன்று வையத் தியற்கை - நசையழுங்க வசை அன்று வையத்து இயற்கை- நசை அழுங்க

நின்றோடிப் பொய்த்த னிரைதொடீஇ! செய்ந்நன்றி நின்று ஓடிப் பொய்த்தல் நிரை தொடீஇ, செய் நன்றி

கொன்றாரிற் குற்ற முடைத்து. (01) கொன்றாரில் குற்றம் உடைத்து. (௧)

பதவுரை

நிரை தொடீஇ= வரிசையாக அணிந்த வளையல்களை யுடையவளே!

இசையா= கிடையாத,

ஒரு பொருள்= ஒரு பொருளை,

இல் என்றல்= இல்லையென்று சொல்லல்,

யார்க்கும்= யாவர்க்கும்,

வசை அன்று= குற்றமல்ல,

வையத்து= பூமியில்,

இயற்கை= இயல்பாகும்;

நசை= ஆசை,

அழுங்க= கெட,

நின்று ஓடி= நெடுங்கால நின்று,

பொய்த்தல்= பொய்சொல்லல்,

செய் நன்றி= பிறர் செய்த வுதவியை,

கொன்றாரில்= கொன்றவரைப் பார்க்கிலும்,

குற்றம்= குற்றம்,

உடைத்து= உடையதாம்.

கருத்துரை
பெண்ணே! ஒருவரைப் பலகால் திரியவைத்து இல்லையென்று சொல்லல் செய்ந்நன்றி அழித்ததிலும் குற்றமுடையதாம்.
விசேடவுரை
பொய்த்தல்- எழுவாய், குற்றமுடைத்து- பயனிலை.

பாடல்: 112 (தக்காருந்)[தொகு]

தக்காருந் தக்கவ ரல்லாருந் தந்நீர்மை () தக்காரும் தக்கவர் அல்லாரும் தம் நீர்மை
யெக்காலுங் குன்ற லிலராவர்- அக்காரம் () எ காலும் குன்றல் இலர் ஆவர் - அக்காரம்
யாவரே தின்னினுங் கையாதாங் கைக்குமாந் () யாவர் ஏ தின்னினும் கையாதாம் கைக்குமாம்
தேவரே தின்னினும் வேம்பு. (02) தேவர் ஏ தின்னினும் வேம்பு.
பதவுரை

தக்காரும்= பெரியோரும்,

தக்கவர் அல்லாரும்= சிறியோரும்,

தம்= தமது,

நீர்மை= குணங்களில்,

எ காலும்= எந்நாளும்,

குன்றல்= குறைதல்,

இலர் ஆவர்= இல்லாதவராவர்;

அக்காரம்= வெல்லத்தை,

யாவர்= எவர்,

தின்னினும்= தின்றாலும்,

கையாது= கசக்காது;

வேம்பு= வேம்பை,

தேவர்= தேவர்கள்,

தின்னினும்= தின்றாலும்,

கைக்கும்= கசக்கும்.

கருத்துரை
பெரியோரும் சிறியோரும் தங்கள் குணங்களில் குறைவுபடார்கள்.
விசேடவுரை
குன்றல்- எழுவாய், இலராவர்- பயனிலை; ஆம், உம், ஏ, உம் அசைகள்.

பாடல்: 113 (காலாடு)[தொகு]

காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து () கால் ஆடு போழ்தில் கழி கிளைஞர் வானத்து

மேலாடு மீனிற் பலராவர்- ஏலா ()மேல் ஆடு மீனில் பலர் ஆவர்- ஏலா

விடரொருவ ருற்றக்கா லீர்ங்குன்ற நாட! () இடர் ஒருவர் உற்றக்கால் ஈர் குன்றம் நாட

தொடர்புடையே மென்பார் சிலர். (03) தொடர்புடையேம் என்பார் சிலர். (௩)

பதவுரை

ஈர் குன்றம்= குளிர்ந்த மலையையும்,

நாட= நாட்டையும் உடைய பாண்டியனே!,

ஒருவர்= ஒருவர்,

கால் ஆடு போழ்தில்= (செல்வமுற்று) சஞ்சரிக்கும் காலத்து,

கழி= மிகுந்த,

கிளைஞர்= உறவினர்,

வானத்து= ஆகாயத்து,

மேல் ஆடு= மேலே சஞ்சரிக்கும்,

மீனில்= நட்சத்திரங்களைப் பார்க்கிலும்,

பலர் ஆவர்= அநேகராவார்,

ஏலா= பொருந்தாத,

இடர்= துன்பங்களை,

உற்றக்கால்= அடைந்தால்,

சிலர்= சிலர் மாத்திரம்,

தொடர்பு= சம்பந்தம்,

உடையோம்= உடையோம்,

என்பார்= என்று சொல்வார்கள்.

கருத்துரை
ப2ண்டியனே! ஒருவர் நடந்து திரியுங் காலத்துப் பலபேர் உறவினராவார்கள்; அவரை துன்பமடைந்த காலத்துச் சிலபேர் உறவினராவார்கள்.
விசேடவுரை
கிளைஞர்- எழுவாய், ஆவர்- பயனிலை, சிலர்- எழுவாய், என்பார்- பயனிலை.

பாடல்: 114 (வடுவிலா)[தொகு]

வடுவிலா வையத்து மன்னிய மூன்றி () வடு இலா வையத்து மன்னிய மூன்றின்

னடுவண தெய்த விருதலையு - மெய்து ()நடுவணது எய்த இரு தலையும் - எய்தும்

நடுவண தெய்தாதா னெய்து முலைப்பெய் () நடுவணது எய்தாதான் எய்தும் உலைப்பெய்து

தடுவது போலுந் துயர். (04) அடுவது போலும் துயர்.(௪)

பதவுரை

வடு இலா= குற்றமில்லாத,

வையத்து= பூமியில்,

மன்னிய= நிலைபெற்ற,

மூன்றில்= (அறம், பொருள், இன்பமென்னும்) மூன்றனுள்,

நடுவணது= நடுவாகிய பொருள்,

எய்த= பொருந்த,

இருதலையும்= தருமமும், காமமும்,

எய்தும்= அடையும்;

நடுவணது= பொருளை,

எய்தாதான்= அடையாதவன்,

உலை= உலையில்,

பெய்து= போட்டு,

அடுவதுபோலும்= (ஆமையைக்) கொல்லுதல் போலும்,

துயர்= துன்பத்தை,

எய்தும்= அடைவான்.

கருத்துரை
பொருளை அடைந்தவன் புண்ணியத்தையும், இன்பத்தையும் அடைவான்; பொருளை அடையாதவன் துன்பத்தை அடைவான்.
விசேடவுரை
இருதலை- எழுவாய், எய்தும்- பயனிலை, பொருளை- செயப்படுபொருள். எய்தாதான்- எழுவாய், எய்தும்- பயனிலை, துயர்- செயப்படுபொருள்.

பாடல்: 115 (நல்லாவின்)[தொகு]

நல்லாவின் கன்றாயி னாகும் விலைபெறூஉங் () நல் ஆவின் கன்று ஆயின் நாகும் விலை பெறூஉம்

கல்லாரே யாயினுஞ் செல்வர்வாய்ச்- சொற்செல்லும் ()கல்லாரை ஆயினும் செல்வர் வாய் - சொல் செல்லும்

புல்லீரப் போழ்தி னுழவேபோன் மீதாடிச் () புல் ஈரம் போழ்தின் உழவே போல் மீது ஆடி

செல்லாவா நல்கூர்ந்தார் சொல். (05) செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல். (௫)

பதவுரை

நல்= நல்ல,

ஆவின்= பசுவின்,

கன்று ஆயின்= கன்றானால்,

நாகும்= இளங்கன்றும்,

விலை பெறூஉம்= விலை பெறும்;

கல்லாரே ஆயினும்= கல்லாதவரானாலும்,

செல்வர் வாய்= ஐசுவரியவான்கள் வாக்கிற் பிறக்கும்,

சொல் செல்லும்= சொற்கள் செல்லும்;

நல்கூர்ந்தார் சொல்= வறியவர் வாக்கிற் பிறக்கும் சொற்கள்,

புல் ஈரம்= அற்ப ஈரம் பொருந்திய காலத்தில்,

(உழும்) உழவே போல்= உழுபடைச் சால் போல,

மீது ஆடி= மேலாடி,

செல்லா ஆம்= செல்ல மாட்டாவாம்.

கருத்துரை
செல்வவான்கள் சொற்கள் செல்லும், தரித்திரர் சொற்கள் செல்லாவாம்.
விசேடவுரை
சொல்- எழுவாய், செல்லாவாம்- பயனிலை. ஏ-அசை.

பாடல் 116 (இடம்பட)[தொகு]

இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினு மென்று () இடம் பட மெய் ஞானம் கற்பினும் என்றும்

மடங்காதா ரென்று மடங்கார்- தடங்கண்ணா ()அடங்காதார் என்றும் அடங்கார் - தடம் கண்ணாய்

யுப்பொடு நெய்பா றயிர்காயம் பெய்தடினும் () உப்பொடு நெய் பால் தயிர் காயம் பெய்து அடினும்

கைப்பறா பேய்ச்சுரையின் காய். (06) கைப்பு அறா பேய் சுரையின் காய் (௬).

பதவுரை

தடம் கண்ணாய்= விசாலம் பொருந்திய கண்களையுடையவளே!

உப்பொடு= உப்புடன்,

நெய்= நெய்யும்,

பால்= பாலும்,

தயிர்= தயிரும்,

காயம்= பல காயங்களும்,

பெய்து= இட்டு,

பேய்ச்சுரையின் காய்= பேய்ச்சுரைக்காயை,

அடினும்= சமைத்தாலும்,

கைப்பு அறா= (அதன்) கசப்பு நீங்காது; (அதுபோல),

மெய் ஞானம்= உண்மை ஞான நூல்களை,

என்றும்= எந்நாளும்,

இடம்பட= விரிவாக,

கற்பினும்= கற்றாலும்,

அடங்கார்= அடங்காதவர்கள்,

என்றும்= எந்நாளும்,

அடங்கார்= அடங்கார்.

கருத்துரை
பெண்ணே! அடங்காதவர்கள் எக்காலமும் அடங்கார்.
விசேடவுரை
அடங்காதார்- எழுவாய், அடங்கார்- பயனிலை.


அவிநயர் சூத்திரம்

“குறட்பா விரண்டவை நால்வகைத் தொடையாய்

முதற்பா தனிச்சொலி னடிமூஉ யிருவகை

விகற்பி னடப்பது நேரிசை வெண்பா.”

இஃது இவ்விதியால் நேரிசை வெண்பா.

பாடல் 117 (தம்மை)[தொகு]

தம்மை யிகழ்வாரைத் தாமவரின் முன்னிகழ்க () தம்மை யிகழ்வாரைத் தாம் அவரின் முன் இகழ்க

வென்னை? யவரொடு பட்டது- புன்னை ()என்னை அவரொடு பட்டது- புன்னை

விறற்பூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப () விறல் பூ கமழ் கானல் வீங்கு நீர் சேர்ப்ப

வுறற்பால யார்க்கு முறும். (07) உறல் பால யார்க்கும் உறும் (௭).

பதவுரை

புன்னை= புன்னையினது,

விறல்= மிக்க,

பூ= பூக்களின் மணம்,

கமழ்= பரிமளிக்கின்ற,

கானல்= சோலையையும்,

வீங்கு= நிறைந்த,

நீர்= நீரினையும்,

சேர்ப்ப= கடற்கரையையும் உடைய பாண்டியனே!

உறல் பால= வருபவை,

யார்க்கும்= யாவருக்கும்,

உறும்= வருமாதலால்,

தம்மை= தங்களை,

இகழ்வாரை= இகழ்பவர்களை,

தாம்= தாங்கள்,

அவரின்முன் இகழ்க= அவர்களின் முன்பாக இகழக்கடவர்கள்,

அவரோடு பட்டது= அவர்கள் பின்னால் இகழப்பட்ட தன்மை,

என்னை?= என்ன?

கருத்துரை
பாண்டியனே! தங்களை யிகழ்ந்தவர்கள் முன்பாகத் தாங்கள் இகழக்கடவர்கள்! அவர்கள் பின் இகழ்வதென்ன.
விசேடவுரை
தாம்- எழுவாய், இகழ்க- பயனிலை

பாடல் 118 (ஆவே)[தொகு]

ஆவே றுருவின வாயினு மாபயந்த () ஆ வேறு உருவின ஆயினும் ஆ பயந்த

பால்வே றுருவின வல்லவாம்- பால்போ ()பால் வேறு உருவின அல்லவாம்- பால்போல்

லொருதன்மைத் தாகு மறநெறி யாபோ () ஒரு தன்மைத்து ஆகும் அறம் நெறி ஆ போல்

லுருவு பலகொள லீங்கு. (08) உருவு பல கொளல் ஈங்கு. (௮)

பதவுரை

ஆ= பசுக்கள்,

வேறு= வேறுபட்ட

உருவின ஆயினும்= உருவங்களை யுடையனவாயினும்,

ஆ= அப்பசுக்கள்,

பயந்த= கொடுத்த,

பால்= பாலெல்லாம்,

வேறு= வேறுபட்ட,

உருவின= உருவங்களையுடையன,

அல்ல ஆம்= அல்லனவாம்;

பால் போல்= அப் பால் போல,

அறம்= அறத்தினது,

நெறி= வழி,

ஒரு தன்மைத்து= ஒரு தன்மையையுடையது,

ஆகும்= ஆம்,

ஆ போல்= அப் பசுக்கள் போல,

ஈங்கு= ஈங்கு உண்டாகிய சமயங்களும்,

பல= பல,

உருவு= வேடங்களை,

கொளல்= கொண்டிருக்கும்.

கருத்துரை
பசுக்களெல்லாம் வேறுருவானாலும் பாலெல்லாம் ஓருருவே; அதுபோல, யார்செய்யினுந் தரும்மெல்லாம் ஒருவழியாகும்; இப்படியே சமயங்கள்.
விசேவுரை
அறநெறி- எழுவாய், ஆகும்- பயனிலை, சமயங்கள்- எழுவாய், கொளல்- பயனிலை, வேடங்களை- செயப்படுபொருள்.

அகத்தியச் சூத்திரம்

“முதலு மூன்று நாற்சீ ராகியும்

இரண்டு மீறு முச்சீ ராகியும்

தனிச்சொற் சீர்கொளு நேரிசை வெண்பா.”

பாடல் 119 (யாஅருலகத்)[தொகு]

யாஅ ருலகத்தோர் சொல்லில்லார் தேருங்கால் () யாஅர் உலகத்தோர் சொல் இல்லார் தேரும் கால்

யாஅ ருபாயத்தின் வாழாதார்- யாஅ ()யாஅர் உபாயத்தின் வாழாதார் -யாஅர்

ரிடையாக வின்னாத தெய்தாதார் யாஅர் () இடையாக இன்னாதது எய்தாதார் யாஅர்

கடைபோகச் செல்வமுய்த் தார். (09) கடை போக செல்வம் உய்த்தார். (௯)

பதவுரை

தேரும்கால்= ஆராயுமிடத்து,

உலகத்து= உலகில்,

ஓர் சொல்= ஓர் நிந்தைச் சொல்லை,

இல்லார்= இல்லாதவர்,

யார்= யாவர்?,

உபாயத்தின்= (முற்பிறப்பில் தவஞ்செய்த) உபாயத்தால்,

வாழாதார்= (இப்பிறப்பில்) வாழாதார்,

யார்= யாவர்?,

இடை ஆக= இதற்கு முன்,

இன்னாதது= துன்பத்தை,

எய்தாதார்= அடையாதவர்,

யார்= யாவர்?,

கடைபோக= முடிவளவும்,

செல்வம்= செல்வத்தை,

உய்த்தார்= செலுத்தினவர்,

யார்= யார்தாம்? (ஒருவருமில்லை).

கருத்துரை
உலகத்தில் ஒரு நிந்தையேனும் அடையாதார் யார்? வாழாதார் யார்? யார் துன்பம் அடையாதார்? யார் முற்றுஞ் செல்வம் பெற்றார்.
விசேடவுரை
யார்- எழுவாய், யார்- பயனிலை.

பாடல் 120 (தாஞ்செய்)[தொகு]

தாஞ்செய் வினையல்லாற் றம்மொடு செல்வதுமற் () தாம் செய் வினை அல்லால் தம்மொடு செல்வது மற்று

றியாங்கணுந் தேரிற் பிறிதில்லை- யாங்குத்தாம் ()யாங்கணும் தேரில் பிறிது இல்லை- ஆங்குத் தாம்

போற்றிப் புனைந்த வுடம்பும் பயனின்றே () போற்றிப் புனைந்த உடம்பும் பயன் இன்றே

கூற்றங்கொண் டோடும் பொழுது. (10) கூற்றம் கொண்டு ஓடும் பொழுது. (௰)

பதவுரை

ஆங்கு= அவ்விடத்து,

தாம்= தாங்கள்,

போற்றி= காத்து,

புனைந்த= அழகுசெய்த,

உடம்பும்= சரீரமும்,

கூற்றம்= கூற்றுவன்,

கொண்டு= தமது உயிரைக் கொண்டு,

ஓடும்பொழுது= போங் காலத்தில்,

பயன்= பிரயோசனம்,

இன்றி= இல்லை;

தாம்= தாங்கள்,

செய்= செய்த,

வினை= இருவினையும்,

அல்லால்= அல்லாது,

தம்மொடு= தம்முடனே,

செல்வது= கூடப்போவது,

யாங்கணும்= எக்காலத்தாயினும்,

தேரில்= ஆராய்ந்தால்,

பிறிது இல்லை= வேறொன்றுமில்லை.

கருத்துரை
தாங்கள் செய்த நல்வினை தீவினையே தங்களோடுகூட வரும்.
விசேடவுரை
வினை- எழுவாய், பிறிதில்லை- பயனிலை.


பார்க்க[தொகு]

நாலடியார்- வேதகிரி முதலியாரவர்கள் உரையுடன்

அறத்துப்பால்- 1.துறவறவியல்

நாலடியார் 1-ஆம் அதிகாரம் -செல்வ நிலையாமை
நாலடியார் 2-ஆம் அதிகாரம் -இளமை நிலையாமை
நாலடியார் 3-ஆம் அதிகாரம் - யாக்கை நிலையாமை
நாலடியார் 4-ஆம் அதிகாரம் - அறன் வலியுறுத்தல்
நாலடியார் 5-ஆம் அதிகாரம் - தூய்தன்மை
2.இல்லறவியல்
நாலடியார் 7-ஆம் அதிகாரம் - சினமின்மை
நாலடியார் 8-ஆம் அதிகாரம்-பொறையுடைமை
நாலடியார் 9-ஆம் அதிகாரம்-பிறர்மனைநயவாமை
நாலடியார் 10-ஆம் அதிகாரம்-ஈகை
நாலடியார் 11-ஆம் அதிகாரம்-பழவினை
[[]]
நாலடியார் 13-ஆம் அதிகாரம்-தீவினையச்சம்

2.பொருட்பால்: 1.அரசியல்

நாலடியார் 14-ஆம் அதிகாரம்-கல்வி
நாலடியார் 15-ஆம் அதிகாரம்-குடிப்பிறப்பு
நாலடியார் 16-ஆம் அதிகாரம்-மேன்மக்கள்
நாலடியார் 17-ஆம் அதிகாரம்-பெரியாரைப் பிழையாமை
நாலடியார் 18-ஆம் அதிகாரம்-நல்லினஞ் சேர்தல்
நாலடியார் 19-ஆம் அதிகாரம்-பெருமை
நாலடியார் 20-ஆம் அதிகாரம்-தாளாண்மை
[[]]