நாலடியார் 13-ஆம் அதிகாரம்-தீவினையச்சம்

விக்கிமூலம் இலிருந்து

சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியார்[தொகு]

உரை: களத்தூர் வேதகிரி முதலியார்[தொகு]

௧. அறத்துப்பால்: ௨. இல்லறவியல்[தொகு]

பதின்மூன்றாம் அதிகாரம் தீவினையச்சம்

[அஃதாவது, தீவினைக்கு அஞ்சுதலாம்]

பாடல்: 121 (தூக்கத்துட்)[தொகு]

துக்கத்துட் டூங்கித் துறவின்கட் சேர்கலா துக்கத்துள் தூங்கி துறவின் கண் சேர்கலா

மக்கட் பிணத்த சுடுகாடு - தொக்க மக்கள் பிணத்த சுடுகாடு - தொக்க

விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன்கெட்ட விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன் கெட்ட

புல்லறி வாளர் வயிறு. (01) புல் அறிவாளர் வயிறு. (௧)

பதவுரை

துக்கத்துள்= துன்பத்தினிடத்து,

தூங்கி= மயங்கி,

துறவின்கண்= துறவறத்திலே,

சேர்கலா= அடையாத,

மக்கள்= மக்களின்,

பிணத்த= பிணங்களையுடையன,

சுடுகாடு= சுடுகாடுகள்,

தொக்க= நெருங்கிய,

விலங்கிற்கும்= மிருகங்களுக்கும்,

புள்ளிற்கும்= பறவைகளுக்கும்,

காடு= காடுகளாவன,

புலன்கெட்ட= அறிவுகெட்ட,

புல் அறிவு ஆளர்= அறிவீனருடைய,

வயிறு= வயிறுகள்.

கருத்துரை
மிருகங்கள் பறவைகள் இவற்றினுக்கு அறிவீனர்களுடைய வயிறுகளே சுடுகாடுகளாம்.
விசேடவுரை
வயிறு- எழுவாய், காடு- பயனிலை.

பாடல்: 122 (இரும்பார்க்குங்)[தொகு]

இரும்பார்க்குங் காலரா யேதிலார்க் காளாய்க் () இரும்பு ஆர்க்கும் காலர் ஆய் ஏதிலார்க்கு ஆள் ஆய்
கரும்பார் கழனியுட் சேர்வர் - சுரும்பார்க்குங் ()கரும்பு ஆர் கழனியுள் சேர்வர் - சுரும்பு ஆர்க்கும்
காட்டுளாய் வாழுஞ் சிவலுங் குறும்பூழுங் () காட்டுள் ஆய் வாழும் சிவலும் குறும்பூழும்
கூட்டுளாய்க் கொண்டுவைப் பார். (02) கூட்டுள் ஆய்க் கொண்டு வைப்பார். (௨)

பதவுரை: சுரும்பு= வண்டுகள்,

ஆர்க்கும்= சத்திக்கும்,

காட்டுள் ஆய்= காட்டிடமாய்,

வாழும்= வாழுகின்ற,

சிவலும்= கவுதாரியையும்,

குறும்பூழும்= காடையையும்,

கூட்டுள் ஆய்= கூட்டிடமாய்,

கொண்டு வைப்பார்= கொண்டுபோய் அடைப்பவர்கள்,

இரும்பு= விலங்கு,

ஆர்க்கும்= சத்திக்கும்,

காலர் ஆய்= அடிமையாய்,

ஏதிலார்க்கு= யாதொன்றும் இல்லாத அநாதைநிலைக்கு,

ஆள் ஆய்= ஆளாகி,

இரும் பார்= இருட்பூமியாகிய,

கழனியுள்= வயலிடத்தில்,

சேர்வர்=அடைவார்கள்.

கருத்துரை: இப்பிறப்பில் காடை, கவுதாரி முதலானவற்றைக் கூட்டில் அடைப்பவர்கள் மறுபிறப்பில் விலங்குபூண்டு நரகத்திலடைவார்கள்.

விசேடவுரை: வைப்பார்- எழுவாய், சேர்வார்- பயனிலை.

பாடல்: 123 (அக்கே)[தொகு]

அக்கேபோ லங்கை யொழிய விரலழுகித் () அக்கே போல் அம் கை ஒழிய விரல் அழுகி
துக்கத் தொழுநோ யெழுபவே - யக்கா ()துக்கம் தொழு நோய் எழுபவே - அக்கால்
லலவனைக் காதலித்துக் கான்முரித்துத் தின்ற () அலவனை காதலித்து கால் முரித்து தின்ற
பழவினை வந்தடைந்தக் கால். (03) பழ வினை வந்து அடைந்தக்கால். (௩)

பதவுரை: அ கால்= முற்பிறப்பில்,

அலவனை= நண்டுகளை,

காதலித்து= இச்சித்து,

கால் முரித்து= கால்களை ஒடித்து,

தின்ற= உண்ட,

பழ வினை= பழைய வினை,

வந்து அடைந்தக்கால்= வந்தால்,

அக்கே போல்= சங்குமணி போல்,

அம் கை= அகங்கை,

ஒழிய= தவிர,

விரல்= விரல்கள்,

அழுகி= அழுகி,

தொழு நோய்= குஷ்ட நோயில்,

துக்கம்= துன்பமடைந்து,

எழுப= திரிவார்கள்.

கருத்துரை: முற்பிறப்பில் நண்டுகளைத் தின்றவர்கள் இப்பிறப்பில் குஷ்ட வியாதி கொண்டு திரிவார்கள்.

விசேடவுரை: தொழுநோய்- எழுவாய், எழுப- பயனிலை. ஏ- அசை.

நன்னூல்- மெய்யீற்றுப் புணரியல்,

“அகமுனர்ச் செவிகை வரினிடை யனகெடும்.”

இவ்விதியால் அகம்+கை= அங்கை ஆயிற்று.

பாடல்: 124 (நெருப்பழற்)[தொகு]

நெருப்பழற் சேர்ந்தக்கா னெய்போல் வதூஉ () ;நெருப்பு அழல் சேர்ந்தக்கால் நெய் போல்வதூஉம்
மெரிப்பச்சுட் டெவ்வநோ யாக்கும் - பரப்பக் ()எரிப்ப சுட்டு எவ்வம் நோய் ஆக்கும் - பரப்ப
கொடுவினைய ராகுவர் கோடாருங் கோடிக் () கொடு வினையர் ஆகுவர் கோடாரும் கோடி
கடுவினைய ராகியார்ச் சார்ந்து. (04) கடு வினையர் ஆகியார் சார்ந்து. (௪)

பதவுரை:

நெருப்பு= நெருப்பினது,

அழல்= வெம்மையை,

சேர்ந்தக்கால்= சேர்ந்தால்,

நெய் போல்வதூஉம்= நெய்போலக் குளிர்ச்சியை யுடையதும்,

எரிப்ப= எரிக்கும்படி,

சுட்டு= கொளுத்தி,

எவ்வம்= துன்பமாகிய,

நோய்= நோயை,

ஆக்கும்= உண்டாக்கும்; (அதுபோல),

கோடாரும்= நன்னடை பிறழாதவர்களும்,

கடு வினையர் ஆகியார்= கொடியவர்களை,

சார்ந்து= சேர்ந்து,

கோடி= நன்னடை பிறழ்ந்து,

பரப்ப= முகவும்,

கோடு= கொடிய,

வினையர் ஆகுவர்= வினையையுடையவர் ஆவார்கள்.

கருத்துரை: துன்மார்க்கரைச் சேர்ந்த நன்மார்க்கரும் துன்மார்க்கராவார்கள்.

விசேடவுரை: கோடார்- எழுவாய், ஆகுவர்- பயனிலை.

பாடல்: 125 (பெரியவர்)[தொகு]

பெரியவர் கேண்மை பிறைபோல நாளும் () பெரியவர் கேண்மை பிறை போல நாளும்
வரிசை வரிசையா நந்தும் - வரிசையால் ()வரிசை வரிசையா நந்தும் - வரிசையால்
வானூர் மதியம்போல் வைகலுந் தேயுமே () வான் ஊர் மதியம் போல் வைகலும் தேயுமே
தானே சிறியார் தொடர்பு. (05) தானே சிறியார் தொடர்பு. (௫)

பதவுரை: பெரியவர்= பெரியோர்,

கேண்மை= சிநேகம்,

பிறைபோல= இளம்பிறை போல,

நாளும்= எந்நாளும்,

வரிசை வரிசை ஆ= கிரமங் கிரமமாக,

நந்தும்= வளரும்;

சிறியார்= சிறியோர்கள்,

தொடர்பு= சிநேகம்,

வான்= ஆகாயத்திலே,

ஊர்= செல்லும்,

மதியம்போல்= பூர்ணசந்திரன் போல்,

வைகலும்= தினந்தோறும்,

வரிசையாய்= கிரமமாய்,

தானே= தனக்குத் தானே,

தேயும்= குறைந்துபோகும்.

கருத்துரை: பெரியோர்கள் சிநேகம் பிறைபோல வளரும்; சிறியோர்கள் சிநேகம் நிறைசந்திரன் குறைதல்போற் குறையும்.

விசேடவுரை: கேண்மை- எழுவாய், நந்தும்- பயனிலை, தொடர்பு- எழுவாய், தேயும்- பயனிலை. ஏகாரம்- அசை.

பாடல் 126 (சான்றோரென)[தொகு]

சான்றோ ரெனமதித்துச் சார்ந்தாய்மற் சார்ந்தாய்க்குச் () சான்றோர் என மதித்து சார்ந்தாய் மன் சார்ந்தாய்க்கு
சான்றாண்மை சார்ந்தார்க ணில்லாயிற் - சார்ந்தோய்கேள் ()சான்றாண்மை சார்ந்தார் கண் இல் ஆயின் - சார்ந்தோய் கேள்
சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன் () சாந்து அகத்து உண்டு என்று செப்பு திறந்து ஒருவன்
பாம்பகத்துக் கண்ட துடைத்து. (06) பாம்பு அகத்து கண்டது உடைத்து. (௬)

பதவுரை:

சான்றோர் என= பெரியோரென,

மதித்து= எண்ணி,

சார்ந்தாய் மன்= சேர்ந்தவனே,

சார்ந்தாய்க்கு= சேர்ந்த உனக்கு,

சான்றாண்மை= பெருந்தன்மை,

சார்ந்தார்கண்= நீ சேரப்பட்டவரிடத்து,

இல் ஆயின்= இல்லாவிடில்,

சார்ந்தோய்= சேர்ந்தவனே,

கேள்= கேட்பாயாக,

சாந்து= கலவைச் சாந்து,

அகத்து= உள்ளிடத்து,

உண்டு என்று= இருக்கிறதென்று,

செப்பு= செப்பை,

திறந்து= திறந்து,

ஒருவன்= ஒருவன்,

அகத்து= உள்ளே,

பாம்பு= பாம்பை,

கண்டது உடைத்து= கண்டது போலும்.

கருத்துரை:

நன்மார்க்கம் உண்டென்று நீ சேரப்பட்டவரிடத்துத் துன்மார்க்கம் உண்டாயிருத்தல் எதுபோலெனில், ஒருவன் செப்பின் உள்ளே சாந்து உண்டென்று திறந்து பாம்பைக் கண்டாற் போலும்.

விசேடவுரை: ஒருவன்- எழுவாய், உடைத்து- பயனிலை, தன்மையை- செயப்படுபொருள். மன்- அசை.

பாடல் 127 (யாஅரொருவ)[தொகு]



யாஅ ரொருவ ரொருவர்த முள்ளத்தைத் () யாஅர் ஒருவர் ஒருவர் தம் உள்ளத்தை
தேருந் துணைமை யுடையவர் - சாரற் ()தேரும் துணைமை உடையவர் - சாரல்
கனமணி நின்றிமைக்கு நாடகேண் மக்கள் () கனம் மணி நின்று இமைக்கும் நாட கேள் மக்கள்
மனம்வேறு செய்கையும் வேறு. (07) மனம் வேறு செய்கையும் வேறு. (௭)

பதவுரை:

சாரல்= மலைச்சாரலிலே,

கனம்= பொன்னும்,

மணி= அரதநங்களும்,

நின்று= இருந்து,

இமைக்கும்= பிரகாசிக்கும்,

நாட= நாட்டையுடைய பாண்டியனே,

கேள்= கேட்பாயாக;

மக்கள்= மனிதர்கள்,

மனம்= மனத்தில் எண்ணுவதும்,

வேறு= வேறு,

செய்கையும்= நடக்கையும்,

வேறு= வேறு, (ஆதலால்),

ஒருவர்= ஒருவர்,

ஒருவர் தம்= மற்றொருவருடைய,

உள்ளத்தை = மனதை,

தேரும் = அறியும்,

துணைமை உடையவர் = அளவினை யுடையவர்,

யார் = யாவர்?


கருத்துரை:

பாண்டியனே! ஒருவர் மனதை மற்றொருவர் அறியார்.

விசேடவுரை:

உடையவர் - எழுவாய், யார் - பயனிலை.

பாடல் 128 (உள்ளத்தா)[தொகு]

உள்ளத்தா னள்ளா துறுதித் தொழிலராய்க் () உள்ளத்தால் நள்ளாது உறுதி தொழிலராய்
கள்ளத்தா னட்டார் கழிகேண்மை - தெள்ளிப் ()கள்ளத்தான் நட்டார் கழி கேண்மை - தெள்ளி
புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட () புனல் செதும்பு நின்று அலைக்கும் பூ குன்றம் நாட
மனத்துக்கண் மாசாய் விடும். (08) மனத்துக் கண் மாசு ஆய் விடும். (௮)

பதவுரை:

தெள்ளி= மணிகளைக் கொழித்து,

புனல்= அருவி நீரானது,

செதும்பு நின்று= சேறு பொருந்தி,

அலைக்கும்= ஒதுக்கும்,

பூ= அழகிய,

குன்றம்= மலையையும்,

நாட= நாட்டையுமுடைய பாண்டியனே!,

உள்ளத்தால்= மனதால்,

நள்ளாது= சிநேகியாது,

உறுதி தொழிலர் ஆய்= பலம் பொருந்திய செய்கையை உடையராய்,

கள்ளத்தால்= வஞ்சகத்தால்,

நட்டார்= சினேகித்தவரது,

கழி= மிகுந்த,

கேண்மை= சிநேகம்,

மனத்துக்கண்= மனதினிடத்தில்,

மாசு ஆய் விடும்= குற்றமாய் முடியும்.

கருத்துரை:

பாண்டியனே! மனங்கலந்து உறவு செய்யாது வஞ்சகமாக உறவு செய்தல் மனதிடத்திற் குற்றமாம்.

விசேடவுரை:

கேண்மை- எழுவாய், மாசாய்விடும்- பயனிலை.

பாடல் 129 (ஓக்கிய)[தொகு]

ஓக்கிய வொள்வாடன் னொன்னார்கைப் பட்டக்கா () ஓக்கிய ஒள் வாள் தன் ஒன்னார் கை பட்டக்கால்
லூக்க மழிப்பதூஉ மெய்யாகு - மாக்க ()ஊக்கம் அழிப்பதூஉம் மெய் ஆகும் - ஆக்கம்
மிருமையுஞ் சென்று சுடுதலா னல்ல () இருமையும் சென்று சுடுதலான் நல்ல
கருமமே கல்லார்கட் டீர்வு. (09) கருமமே கல்லார் கண் தீர்வு. (௯)

பதவுரை: ஓக்கிய= ஓங்கிய,

ஒள்= ஒளிபொருந்திய,

வாள்= தன் வாளாயுதம்,

தன் ஒன்னார்= தன் சத்துருக்கள்,

கை= கையில்,

பட்டக்கால்= அகப்பட்டால்,

ஊக்கம்= மனத் தைரியத்தை,

அழிப்பதூஉம்= கெடுப்பதும்,

மெய் ஆகும்= உண்மையாகும்;

ஆக்கம்= தீவினைப்பலன்,

இருமையும்= இம்மையு மறுமையும்,

சென்று= தன்னுடன் சென்று,

சுடுதலால்= வருத்துதலால்,

கல்லார்கண்= தீவினையாளரிடத்து,

தீர்வு= சிநேகம் நீங்குதல்,

நல்ல கருமமே= நல்ல காரியமேயாம்.

கருத்துரை: தீவினையாளரிடத்துச் சிநேக நீங்குதல் நல்லது.

விசேடவுரை: தீர்வு- எழுவாய், கருமம்- பயனிலை. ஏ-அசை.

நன்னூல்

“வலித்தல் மெலித்த னீட்டல் குறுக்கல்

விரித்த றொகுத்தலும் வருஞ்செய்யுள் வேண்டுழி.”

இவ்விதியால் ‘ஓக்கிய’ என வலித்தல் விகாரமாயிற்று.

பாடல் 130 (மனைப்பாசங்)[தொகு]

மனைப்பாசங் கைவிடாய் மக்கட்கென் றேங்கி () மனை பாசம் கை விடாய் மக்கட்கு என்று ஏங்கி
யெனைத்தூழி வாழ்தியோ நெஞ்சே - யெனைத்துஞ் ()எனைத்து ஊழி வாழ்தியோ நெஞ்சே - எனைத்தும்
சிறுவரையே யாயினுஞ் செய்தநன் றல்லா () சிறுவரையே ஆயினும் செய்த நன்று அல்லால்
லுறுபயனோ வில்லை யுயிர்க்கு. (60) உறு பயனோ இல்லை உயிர்க்கு. (௰)

பதவுரை:

நெஞ்சே= மனமே!

மனை= இல்வாழ்க்கையின்,

பாசம்= ஆசையை,

கைவிடாய்= விட்டுவிடாய்;

மக்கட்கு என்று= மக்களுக்கு என்று,

ஏங்கி= இரங்கி,

எனைத்து ஊழி= எவ்வளவு காலம்,

வாழ்தியோ= வாழ்வாயோ;

சிறு வரை= சிறு பொழுது,

ஆயினும்= ஆனாலும்,

செய்த= தான் செய்த,

நன்று= தரும்பபலன்,

அல்லால்= அல்லது,

எனைத்தும்= எவ்வளவும்,

உயிர்க்கு= நம் உயிர்க்கு,

உறு பயன்= பொருந்திய பலன்,

இல்லை= இல்லை.


கருத்துரை: மனமே! நம்முயிர்க்குத் தருமத்தை அன்றிப் பலனில்லை.

விசேடவுரை: உறுபயன்- எழுவாய், இல்லை- பயனிலை- ஏ, ஓ- அசைகள்.

தீவினையச்சம் முற்றிற்று.

ஆக அதிகாரம் 13-க்குச் செய்யுள்-130.

இல்லறவியல் முற்றிற்று[தொகு]

அறத்துப்பால் முற்றிற்று[தொகு]

பார்க்க[தொகு]

நாலடியார்- வேதகிரி முதலியாரவர்கள் உரையுடன்
நாலடியார் 1-ஆம் அதிகாரம் -செல்வ நிலையாமை
நாலடியார் 2-ஆம் அதிகாரம் -இளமை நிலையாமை
நாலடியார் 3-ஆம் அதிகாரம் - யாக்கை நிலையாமை
நாலடியார் 4-ஆம் அதிகாரம் - அறன் வலியுறுத்தல்
நாலடியார் 5-ஆம் அதிகாரம் - தூய்தன்மை
நாலடியார் 7-ஆம் அதிகாரம் - சினமின்மை
நாலடியார் 8-ஆம் அதிகாரம்-பொறையுடைமை
நாலடியார் 9-ஆம் அதிகாரம்-பிறர்மனைநயவாமை
நாலடியார் 10-ஆம் அதிகாரம்-ஈகை
நாலடியார் 11-ஆம் அதிகாரம்-பழவினை
நாலடியார் 12-ஆம் அதிகாரம்-மெய்ம்மை
[[]]

2.பொருட்பால்: 1.அரசியல்

நாலடியார் 14-ஆம் அதிகாரம்-கல்வி
நாலடியார் 15-ஆம் அதிகாரம்-குடிப்பிறப்பு
நாலடியார் 16-ஆம் அதிகாரம்-மேன்மக்கள்
நாலடியார் 17-ஆம் அதிகாரம்-பெரியாரைப் பிழையாமை
நாலடியார் 18-ஆம் அதிகாரம்-நல்லினஞ் சேர்தல்
நாலடியார் 19-ஆம் அதிகாரம்-பெருமை
நாலடியார் 20-ஆம் அதிகாரம்-தாளாண்மை
[[]]