வேங்கடம் முதல் குமரி வரை 3

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.



வேங்கடம் முதல் குமரி வரை


(பாகம் - 3)
– காவிரிக் கரையிலே –



கலைமாமணி
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்



கலைஞன் பதிப்பகம்
10 கண்ணதாசன் சாலை

தியாகராய நகர்
சென்னை - 600017



RS. 95.00

VENKATAM MUTHAL KUMARI VARAI Part - 3
by
Τho. Μu. ΒΑSΑΚΑRΑ ΤΟΝDΑΙΜΑΝ

First Edition : 1961
Second Edition : 2001


Published by
KALAIGNAAN PATHIPAGAM
10 Kannadhasan Salai
T. Nagar, Chennai - 600 017


Typeset by : Vignesh Laser
Chennai- 5.

Printed at: Sakthi Printers
Chennai - 600 021.

முன்னுரை


“வேங்கடம் முதல் குமரிவரை” என்ற தொடரின் மூன்றாவது புத்தகம் இது. 'பாலாற்றின் மருங்கிலே' என்ற முதல் புத்தகத்தையும், 'பொன்னியின் மடியிலே' என்ற இரண்டாவது புத்தகத்தையும் தமிழ் அன்பர்கள் ஆவலோடு வரவேற்று ஆதரித்தனர். அது காரணமாகவே இந்த மூன்றாவது புத்தகத்தைக் 'காவிரிக் கரையிலே' என்ற தலைப்போடு வெளியிட முற்படுகிறேன் நான்.

தமிழ் நாட்டில் கோயில்கள் பல இடங்களிலும் பரந்து கிடந்தாலும், காவிரியின் இருகரையிலும் தான் அவை அதிகமாகவும் சிறப்பாகவும் இருக்கின்றன என்பதை அன்பர்கள் அறிவார்கள். இந்த மூன்றாவது புத்தகத்தில் கும்பகோணத்திலிருந்து தல யாத்திரை துவங்குகிறது. தெற்கே திருப்பெருந்துறைவரை சென்று மேற்கு நோக்கித் திரும்பி, கொங்குநாட்டுத் தலங்களுக்கு எல்லாம் சென்று கோவையை அடுத்த போரூரில் தலயாத்திரை நிறைவுறுகிறது. அடுத்த நான்காவது புத்தகம் பழநியில் துவங்கி பாண்டி நாட்டுத் தலங்கள் வழியாக, கன்னியாகுமாரியில் நிறைவுறும்.

கட்டுரைகள் தொடர்ந்து கல்கியில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவைகளைப் பாராட்டி எழுதும் அன்பர் பலர். குறை கூறுவாரும் இல்லாமல் இல்லை. அதிலும் ஒன்றிரண்டு ஸ்ரீ வைணவர்கள், நான் சைவத்தையே உயர்த்திப் பேசுகிறேன் என்றும் வைணவத்தைத் தாழ்த்துகிறேன் என்றுகூடக் கருதுகிறார்கள். நான் சைவம், வைணவம், பௌத்தம், சமணம் என்ற வேறுபாடுகளை எல்லாம் பாராட்டாதவன். எம்மதமும் சம்மதமே என்ற கொள்கையுடையவன். கலைகளைக் கொண்டே கடவுளரை எல்லாம் கண்டு களிப்பவன். ஆதலால் இந்த ஆதாரமற்ற புகாருக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை.

சமீபத்தில் டில்லியில் இருந்து தென்னாடு வந்திருந்த தமிழ் அன்பர் ஒருவர் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதி வந்து திரும்பியிருக்கிறார். அவர் டெல்லி திரும்பியபின் கல்கியில் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலைப் பற்றிய கட்டுரை வந்திருக்கிறது. அதனைப் படித்துவிட்டு 'அடடா! இக்கட்டுரை முன்னரே வராமல் போய்விட்டதே! கட்டுரையைப் படித்தபின், அக்கோயிலில் பார்க்க வேண்டியவை என்ன என்னவோ இருக்கிறதே! அத்தனையையும் பாராமல் அல்லவா திரும்பிவிட்டோம்' என்று ஆதங்கத்தோடு கடிதம் எழுதியிருக்கிறார். உண்மைதான். கட்டுரைகள் அடங்கிய புத்தகத்தை வைத்துக்கொண்டு சென்றிருந்தால் பார்க்கவேண்டியவைகளை எல்லாம் பார்த்து அனுபவித்திருப்பார். இப்போது தமிழ்நாட்டில் ஒரு கூட்டம் தயாராகிக் கொண்டிருக்கிறது; ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று, அந்த மாதத்தில் வெளிவந்த நான்கைந்து கோயில்களையும் பார்த்து வருவதென்று கங்கணம் கட்டிக் கொண்டு தலயாத்திரை துவங்குகிறார்கள் இவர்கள். இவர்களுக்கு எல்லாம் இப்புத்தகம் மிக உதவியாக இருக்கும் அல்லவா!

இந்த மூன்றாம் தொகுதிக்கு, ஒரு நல்ல முன்னுரையை, கலைமகள் ஆசிரியர், நண்பர் திரு. கி. வா. ஜகந்நாதன் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி. சில மாதங்களுக்கு முன் அவர்கள் என்னிடம், உன் கட்டுரைகளை யார் யார் எல்லாம், படிக்கிறார்கள் தெரியுமா? காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரிய சுவாமிகள் ஒழுங்காய்ப் படிக்கிறார்கள்; பாராட்டுகிறார்கள் என்றார். இதைக்கேட்டு நான் அப்படியே மூர்ச்சித்துவிட்டேன். நாட்டில் ஆஸ்திகத்தை வளர்க்கவும் சமய அறிவைப் பரப்பவும் குருமூர்த்தியாக எழுந்தருளிய ஆச்சார்ய சுவாமிகளே படிக்கிறார்கள் என்றால் அதைவிட வேறு என்ன பெருமை வேண்டும் எனக்கு. இந்தப் புத்தகத்தை ஜகத்குரு ஆச்சார்ய சுவாமி அவர்களுக்கே சமர்ப்பித்து அதனால் மகிழ்ச்சி அடைகிறேன்.

புத்தகம் வெளியிடுவதில் ஆர்வம் காட்டிய அன்பர்கள், புத்தகத்தை அழகாக அச்சிட்டுக் கொடுத்த பிரசுரகர்த்தர்கள், எல்லாவற்றிக்கும் மேலாக இக் கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தக உருவாய் வெளியிட அனுமதி தந்த கல்கி ஆசிரியர் எல்லோருக்கும் என் அன்பும் நன்றியும்.

இத்தொகுதியின் வெளியீட்டைப் பெரிய விழாவாகவே நடத்தத் திட்டமிட்டுள்ள கோவை நன்னெறிக் கழகத்தாருக்கும் என் நன்றியும் வணக்கமும்.

சித்ரகூடம்
திருநெல்வேலி
17-9-61
தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்.

முகவுரை

தல யாத்திரை செய்வதென்பது இந்த நாட்டுக்கே உரிய நல்ல பழக்கங்களில் ஒன்று, மற்ற நாடுகளில் உல்லாச யாத்திரை போவதுண்டு. தல யாத்திரை அவர்களுக்குத் தெரியாதது. மற்ற நாடுகள் இருக்கட்டும்; நம்முடைய பாரத நாட்டிலே கூட வட நாட்டுக்குப் போனால் தீர்த்த யாத்திரை தான் நன்றாகச் செய்ய முடியும். ஏதோ அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாகச் சில தலங்கள் உண்டு. அவற்றிற்கும் எத்தனையோ சிறப்புக்கள் இருக்கின்றன. இருந்தாலும் அங்கே போனால், மற்றவர்கள் துதிப்பதைக் கொண்டும் மனத்தில் மதிப்பும் பக்தியும் உண்டாகி வழிபட வேண்டும். -

ஆனால் தமிழ் நாட்டுத்தலங்கள் அப்படியா இருக்கின்றன? கோவிலின் தோற்றமே ஆளைப் பிரமிக்கவைத்து விடுகிறது, எத்தனை மேல் நாட்டினர்கள் தஞ்சாவூர்ப் பெரிய கோயிலைக் கண்டு வாயைப் பிளந்து கொண்டு நின்றிருக்கிறார்கள்!

கோயிலைக் கட்டுவதும் சிற்பங்களைக் கொட்டுவதும் கல்லெழுத்து வெட்டுவதும் இந்த நாட்டு அரசர்களுக்கெல்லாம் பரம்பரை வழக்கங்களாக இருந்து வந்துள்ளன. முன்பேதான் கோயில் இருக்கிறதே என்று இராமல் மேலும் மேலும் பின்வந்த அரசர்கள் கோயில்களை விரிவாக்கினார்கள், தங்கள் தங்கள் காலத்து வரலாற்றுக்கு ஆதாரமான கல்வெட்டுக்களைப் பொறித்தார்கள். ஊர் சிறியதாக இருந்தாலும் கோயில் பெரியதாக இருப்பதைப் பார்த்தால் “அந்தக் காலத்தில் இதை எப்படிக் கட்டினார்கள்!” என்று வியப்படையத்தான் தோன்றும்.

தமிழ் நாட்டு நாகரிகமே கோயிலைச் சுற்றி வளர்ந்தது என்று சொல்லிவிடலாம். சிற்பக்கலை, இசைக்கலை, நாட்டியக் கலை, காவியக்கலை, அலங்காரக்கலை, பூத்தொடுக்கும் கலை - ஏன், மடைப்பள்ளிக்கலை கூடத்தான் - கோயில்களிலே வளர்ந்தன. கோயிலில் ஊர்ச்சபை கூடியது; உடையவர் பண்டாரமாகிய கிராமப் பாங்கி இருந்தது; கல்விச்சாலை நடைபெற்றது. தேவாரமும் திவ்யப் பிரபந்தமும் இந்தக் கற்கோயில்களின் பெருமையை இலக்கியச் சுவையும் பக்திச் சுவையும் இணைந்த பாக்களால் புலப்படுத்தும் சொற்கோயில்களாக விளங்குகின்றன.

அயல் நாட்டினர் வந்து இவற்றைக் கண்டால் வியக்கிறார்கள்; படம் பிடிக்கிறார்கள் ; புத்தகம் எழுதுகிறார்கள்; நாம் அவர்கள் எழுதியதைக் கண்டு, 'அப்படியா' என்கிறோம். கோயிலுக்குள்ளே புகுந்து தீபாராதனையைக் கண்டு கன்னத்தில் போட்டுக் கொண்டு விபூதி வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும் அளவில் நம் வழிபாடு நிற்கிறது. திருக்கோயில்களில் உள்ள கலையுருவங்களைக் காணக் கண்ணும் அவற்றின் பெருமையைக் கேட்கக் காதும் எல்லோருக்கும் இருப்பதில்லை.

ஆனால், சில காலமாகக் 'கல்கி' பத்திரிகையில் வாரந்தோறும். திரு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் எழுதி வரும் 'வேங்கடம் முதல் குமரி வரை' என்ற தொடர் கட்டுரைகளைப் படித்து வருகிறவர்களில் பலர் கோயிலுக்குப் போனால் தீபாராதனை கண்டு கன்னத்தில் போட்டுக் கொள்வதோடு நிற்பதில்லை. அந்தக் கோயிலில் என்ன என்ன விக்கிரகங்கள் இருக்கின்றன, என்ன சிற்பங்கள் இருக்கின்றன என்று சிறிது ஆராயத் தொடங்கியிருக்கிறார்கள். பிறகு மறுபடியும் வந்து, "இதுவரையில் இவற்றைத் தெரிந்து கொள்ளாமல் இருந்தது பிசகு' என்று கன்னத்திலும் போட்டுக் கொள்கிறார்கள்.

கோவிலில் உள்ள கலை அழகை எப்படி அனுபவிக்க வேண்டும் என்பதை அன்பர் பாஸ்கரன் அவர்களுடைய கட்டுரை நன்றாக நமக்குக் காட்டுகிறது. அவர் எழுதும் கட்டுரைகளைப் படித்தால் நாமே அவருடன் அங்கங்கே சென்று எல்லாவற்றையும் காண்பது போன்ற அனுபவம் ஏற்படுகிறது.

இந்தக் கட்டுரைகளை இப்போது தொகுத்துப் புத்தகமாக வெளியிடுவது மிகவும் உபகாரமான காரியம். இது மூன்றாம் தொகுதி.

தொண்டைமானவர்கள் ஒவ்வொரு கோயிலாக நமக்கு அறிமுகப்படுத்தும் பாணி அவருக்கு என்றே அமைந்தது. ஊருக்குச் செல்லும் வழிகளைச் சொல்லி அழைத்துச் சென்று கோயில் முன் நிறுத்துகிறார். கோபுரம் முதலிய அமைப்புகளைக் காட்டுகிறார். புராணக் கதைகளை ரசமாகச் சொல்கிறார். அங்கே உள்ள சிற்பவடிவங்களின் சிறப்பைச் சுட்டிக்காட்டுகிறார். தேவாரத்தையும் திவ்யப் பிரபந்தத்தையும் எடுத்துச் சொல்கிறார்.

புராணங்களில் காணாத பலகதைகளையும் வழக்கங்களையும் பழமொழிகளையும் அங்கங்கே சொல்கிறார். இது மிக மிகப் பயனுள்ள தொண்டு சொல்வதைச் சுவைபட நுட்பமான நகைச் சுவை சில இடங்களில் மலர, சொல்கிறார்.

இந்தத் தொகுதியில் நாம் எத்தனையோ மூர்த்திகளைத் தரிசித்துக் கொள்கிறோம்; எத்தனையோ தீர்த்தங்களில் நீராடுகிறோம், புராண புருஷர்களையும் சரித்திரத்தில் வரும் மக்களையும் சந்திக்கிறோம். 'கட்டுரையின் எடுப்பும் தொடுப்பும் முடிப்பும் கச்சிதமாக அமைந்து ஒரு சிற்ப வடிவைப்போலக் கட்டுரையை ஆக்குகின்றன.

தலங்களைப் பற்றிப் பல நுட்பமான உண்மைகளையும், மூர்த்திகளின் அமைப்பிலுள்ள சிறப்பான பகுதிகளையும் சொல்கிறார். இவற்றை, பல முறை அவற்றைத் தரிசித்தவர்கள் கூட அறிந்து கொள்வதில்லை.

குடந்தைக் கீழ்க் கோட்டமாகிய நாகேசுவரன் கோயிலில் சித்திரை மாதத்தில் மூன்று நாட்களில் சூரியன் கருவறையில் தன் கதிர்களை வீசுகிற உண்மையை ஓரிடத்தில் சொல்கிறார்; கும்பேசுவர சுவாமி கோயிலில் உள்ள அம்பிகை மந்திர பீடேசுவரி மங்களாம்பிகை என்ற சிறப்பைப் புலப்படுத்துகிறார். சுவாமி மலையில் மகாமண்டபத்தில் வடக்குச் சுவர்ப்பக்கம் ஒரு பீடத்தில் சபாபதி என்ற பெயரோடு இருப்பவர் நடராஜர் அல்ல, பாகுலேய மூர்த்தி என்று தெரிவிக்கிறார். தாராசுரத்தில் அர்த்தநாரி உருவத்தில் மூன்று தலைகளுடன் நிற்பவர் விசுவரூப மூர்த்தி என்று காட்டுகிறார். நாச்சியார் கோவில் கல்கருடன், கண்ணமங்கையிலுள்ள தேன்கூடு, திருவாரூரில் மூக்குத்தி தீர்த்தம் என்று வழங்கும் முக்தி தீர்த்தம், சூர சங்காரத்துக்கு முதல் நாள் முகத்தில் வேர்வை அரும்பும் சிக்கல் சிங்காரவேலன், ஆவுடையார் கோயிலில் பதினோரு கரத்தோடு வீற்றிருக்கும் வல்லப கணபதி - இப்படிப் பலவற்றைப் பற்றிய நுட்பமான செய்திகள் இதில் வருகின்றன.

வரலாற்றோடு பொருந்திய பலகதைகளை விசாரித்து அறிந்து நயமாகச் சொல்கிறார். செம்பியன் மாதேவியின் வரலாறு, வடுவூருக்கு. ராமன் வந்த கதை, தஞ்சையில் தளிக்குளத்துப் பெருமான் பெரிய கோயிலைப் பெற்றது, கிழவி நிழலில் பெருவுடையார் எழுந்தருளியது, துலுக்க நாச்சியார் சரிதை, பவானியில் காரோ என்ற ஆங்கிலேயர் வேதநாயகியை வணங்கியது முதலியவற்றைக் காண்க.

கல்வெட்டுக்களைப் பற்றிய செய்திகள், கோயில் கட்டிய மன்னர்களின் பெருமை, புராணங்களில் வரும் வரலாறுகள், கர்ண பரம்பரைச் செய்திகள், தலத்தின் பெருமையைப் பற்றிய பாடல்கள் முதலிய பலவற்றையும் கோவையாக இணைத்துப் படிக்கப் படிக்க இனிக்கும் வகையில் இந்தக் கட்டுரைகள் ஓடுகின்றன. அந்த ஓட்டத்தைத்தானே விறுவிறுப்பு என்று இக்கால எழுத்தாளர்கள் சொல்கிறார்கள்?

இந்தப் புத்தகத்தைக் கோயிலுக்குப் போவதற்கு முன்பு படித்தால் ஒருவகை இன்பம் உண்டாகும்; போய் விட்டு வந்து படித்தால் அந்த இன்பம் பின்னும் பன் மடங்காகும். வெறும் ஆராய்ச்சியானால் அலுப்புத் தட்டும்; புராணமானால் சுவை இராது. சமய நூலானால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தோன்றும்; சரித்திர நிகழ்ச்சியானால் அவசியமானபோது புரட்டிப் பார்க்கலாம் என்று வைத்து விடுவோம்; பாடல்களானால் அமைதியாக இருந்து பார்த்தால் தான் விளங்கும் என்ற அச்சம் உண்டாகும். இந்த நூலில் இவை எல்லாம் இருக்கின்றன. ஆனால் படித்து முடித்து விடவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றன; படித்த பிறகோ பல தலங்களுக்குப் போய்ப் பல மூர்த்திகளை வழிபட்டு வந்த மனநிறைவு உண்டாகிறது. காசு இல்லாமல், பிரயாண அலுப்பு இல்லாமல், தேங்காய்பழம் இல்லாமல் இந்தப்பயன் நமக்குக் கிடைக்கிறது. நாம் அங்கே போய்த் தரிசித்தாலும் இத்தனை விவரங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு நமக்குக் கிடைக்காது.

நாவுக்கரசருக்குத் திருவையாற்றில் சிவபெருமான் கைலத் தரிசனம் காட்டியதை, 'இந்த விஞ்ஞானிகளுக்கெல்லாம் மேலான விஞ்ஞானி, ஆம்! 'டெலிவிஷன் எக்ஸ்பர்ட்' ஆக ஒருவன் அன்றே இருந்திருக்கிறான். நம்மிடையே அவன் யார்?" என்று கேள்வி கேட்டுக்கொண்டு விளக்குகிறார். நாவுக்கரசராவது திருவையாற்றுக்குப் போய்க் கைலைக் காட்சியைக் கண்டார். நாமோ இருந்த இடத்தில் இருந்தபடியே இத்தனை தலங்களையும் காணுகிறோம்; சொல்லால் படித்துச் சொல்வது போதாதென்று அழகழகாகப் படங்களையும் எடுத்து இணைத்திருக்கிறார் அன்பர் திரு. பாஸ்கரன்.

இவருக்கு நாம் என்ன கைம்மாறு செய்ய இயலும்? மனமார நாவார, “சபாஷ்” என்று ஆனந்தப் பொங்கலுக்கு அறிகுறியாக ஒரு வார்த்தையைச் சொல்வதையன்றி வேறு ஒன்றும் செய்யத் தோன்றவில்லை.

சென்னை
30-8-61

கி. வா. ஜகந்நாதன்.
ஆசிரியர் கலைமகன்


 
சமர்ப்பணம்


காஞ்சி

காமகோடி பீடாதிபதி ஜகத்குரு
ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமி அவர்களுக்கு


பொருளடக்கம்


1. 1
2. 10
3. 19
4. 29
5. 38
6. 47
7. 57
8. 68
9. 77
10. 86
11. 97
12. 106
13. 116
14. 126
15. 135
16. 144
17. 153
18. 162
19. 171
20. 180
21. 189
22. 197
23. 208