பஞ்ச தந்திரக் கதைகள்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

பஞ்சதந்திரக் கதைகள்

(படங்களுடன்)

 

நாரா நாச்சியப்பன்

 

அன்னை நாகம்மை பதிப்பகம்

2/141 இரண்டாவது தெரு, கந்தசாமி நகர்,

பாலவாக்கம்சென்னை 600 041

அன்னை நாகம்மை வெளியீடு
மார்ச், 1996


 
விலை ரூ 30.00
 



கவின் கலை அச்சகம், கந்தசாமிநகர்

பாலவாக்கம், சென்னை 600 041

தொலைபேசி 492 77 21

என் ஆசை

பஞ்ச தந்திரக் கதைகள் உலகப் புகழ்பெற்றவை. கதை என்றால் எப்படியிருக்க வேண்டும் என்ற கேள்விக்கு எடுத்துக்காட்டாக உள்ள நூல்களிலே ‘பஞ்ச தந்திரக் கதைகள்’ ஒன்றாகும். சிறந்ததுமாகும்.

கதை ஒரு கருத்தை வலியுறுத்துவதாக இருக்க வேண்டும். அதற்கு, அது படித்தவுடன் நெஞ்சில் பசுமரத் தாணி போல் பதிவதாக இருக்க வேண்டும்; திரும்பத் திரும்பச் சொன்னாலும் புதுச் சுவை வழங்குவதாயிருக்க வேண்டும். சலிப்புத் தராத தன்மையும் அந்தக் கதைக்கு இருக்க வேண்டும் இந்தச் சிறப்புக்களெல்லாம் பஞ்ச தந்திரக் கதைகளில் அடங்கி யிருக்கின்றன.

தமிழில் பஞ்ச தந்திரக்கதைகள், எத்தனையோ பதிப்புகள் வெளிவந்து விட்டன. பாட்டு வடிவிலும், உரைநடையிலும் பலப் பல பதிப்புக்கள் பலப் பல நூலகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளன. இருந்தும், மீண்டுமொரு முறை வெளி வருவதென்றால், அதில் ஏதாவது புதுமை யிருக்க வேண்டும் என்று வாசகர்கள் எதிர்பார்ப்பது இயல்புதான். வாசகர்கள் ஏமாற வேண்டியதில்லை; இதில் நிறையப் புதுமை இருக்கிறது.

முதலாவதாக இதுவரை வெளிவந்துள்ள எந்தத் தமிழாக்கத்திலும் கையாளப்படாத மிக எளிமையான தமிழ் நடையை நான் கையாண்டிருக்கிறேன். பெரியவர்கள் மட்டுமல்லாமல் சிறுவர்களும் படிக்கவேண்டும் என்ற கருத்தோடு, மிகமிக முயன்று எளிமையாக எழுதியிருக்கிறேன். எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக நல்ல தமிழைக் கை விட்டு விடவில்லை. வேண்டாத சில கதைகளை விலக்கியுமிருக்கிறேன்.

காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றபடி அறிவைப் பயன்படுத்துகிறவன் எடுத்த செயலைச் சிறக்கத் தொடுத்து வெற்றி பெற முடிப்பான் என்பதுதான் பஞ்ச தந்திரக் கதைகளில் அமைந்துள்ள கருத்தாகும். முன்னதாகவே ஆழ்ந்து சிந்தித்து வேலை செய்யும் அறிவுடைமைக்கு பஞ்ச தந்திரக் கதைகளின் ஆசிரியர் முதன்மை கொடுத்துச் சிறப்பிக்கிறார். சூழ்நிலைக்கேற்ற சிந்தனையை அடுத்தபடியாக ஆதரிக்கிறார். மேற்போக்காகப் படிக்கும் போது, ‘எப்படியாவது சூழ்ச்சி செய்து. தான் வாழ்ந்தால் போதும்’ என்ற கருத்தை ஆசிரியர் கூறுவதாகத் தோன்றக் கூடும். ஆழ்ந்து கதைகளைப் படித்துப் பார்த்தால்தான், ஆசிரியர் நெறி வழிப்பட்ட சூழ்ச்சி முறைகளை மட்டுமே ஆதரிக்கிறார் என்பது தெளிவாகப் புலப்படும். ஆசிரியர் கொள்கை, யாரும் ஏமாளித்தனமாக நடந்து கொள்ளக் கூடாது என்பதேயாகும்.

வருங்காலக் குமுகாயம், சூழ்ச்சிகளுக் காட்படாத-ஏமாறாத-தன்னறிவுள்ள குமுகாயமாக வளர வேண்டுமானால், இதுபோன்ற சூழ்ச்சி முறைக் கதைகளை நிறையப் படிக்க வேண்டும். அறிவு வளர வேண்டும். இதுவே என் ஆசை.

நாரா நாச்சியப்பன்

பஞ்சதந்திரக் கதைகள்

பொருளடக்கம்
பகுதி 1


நட்புப் பிரித்தல்


1. 9
2. 33
3. 35
4. 36
5. 39
6. 42
7. 45
8. 48
9. 49
10. 53
11. 56
12. 57
13. 59
14. 61
15. 64
16. 65
17. 68
பகுதி 2


நட்பு உண்டாக்குதல்


1. 72
2. 94
3. 96
4. 103
5. 107


பகுதி 3


அடுத்துக் கெடுத்தல்



1. 109
2. 130
3. 133
4. 139
5. 143
6. 145
7. 147
8. 150
9. 154
10. 157
11. 159
12. 161
13. 164
பகுதி 4


பெற்றதை இழக்கச் செய்தல்


1. 168
2. 176
3. 178
4. 183
5. 186
6. 188
7. 190
8. 193


பகுதி 5


ஆராயாத செயல் தவிர்த்தல்


1. 195
2. 199
3. 202
4. 204
5. 211
6. 215
7. 217
8. 218
9. 219
10. 221
11. 225
12. 228
13. 230
14. 231

பாயிரம்

பகைநட்பை வெட்டிப் பலன்காணல்; மிக்க
தகவுடையார் நட்பு வளர்த்தல்:-மிகப்பழகிச்
சாய்த்தல்; அடைந்த திழக்கவிடல்; ஆயாமை
நீத்தல்இவை பஞ்சதந்தி ரம்

காட்டு விலங்குகளைக் காட்சிப் பொருளாக்கி
நாட்டு கதைகேட்பார் நாடோறும்-வேட்டதெலாம்
பெற்றுநலங் காண்பார்; பிறர்சூழ்ச்சி தூளாக்கி
வெற்றிகாண் பாரே விழித்து.

அன்று வடமொழியில் ஆக்கிவைத்த சூழ்ச்சிமுறை
இன்று தமிழில் இயம்பினான்-நின் றபுகழ்
நாச்சியப்பன் சொல்லின் நயந்தெளிவார்க் கெந்நாளும்
வீழ்ச்சியிலை என்றே விளம்பு.

ஐவ்கைச் சூழ்ச்சியையும் ஆராய்ந்து காண்போர்க்கே
உய்வகை தோன்றும் உயிர்வாழ்வில் -மெய்புகல்
நாச்சியப்பன் செந்தமிழில் நல்குமிதைத் தம்பிஒரு
மூச்சிலே கற்று முடி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பஞ்ச_தந்திரக்_கதைகள்&oldid=1520016" இலிருந்து மீள்விக்கப்பட்டது