தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் (1855–1942) தமிழுக்காகவே வாழ்ந்தவர். அறுபதாண்டு காலத்துக்கு மேல் தமிழ்க் கல்வி ஆசிரியராகப் பணி ஆற்றியபடியே, பழந்தமிழ் நூல்களை ஆராய்ந்து வெளியிட்டு, தமிழ்க் கல்வியின் எல்லையை விரிவாக்கி, பழந்தமிழ் இலக்கியங்களையும் உயர் காப்பியங்களையும் காலத்தின் அழிவினின்றும் மீட்டுத் தந்தவர். பழந்தமிழர் வாழ்க்கை உயர்வை இலக்கியச் செய்திகள் வாயிலாக உணர்த்தியவர். இலக்கியப் பதிப்புத்துறையில் பாடுபட்டு ஏடு தேடிய இவரது உழைப்பின் பயனாக புது ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. வரலாற்றுச் செய்திகளைச் சுவையான நவீன சிறுகதை போலச் சொல்ல வல்லவர். வாழ்க்கை வரலாற்றுத் துறையில் தமிழிலே ஒரு வழிகாட்டி இவர். இன்றைய தமிழர் சிந்தனைக் கருத்துக்களையும் தமிழ் எழுத்தாளர் நடையையும் ஐயரவர்கள் வெளியீடுகள் பெரிதும் பாதித்துள்ளன எனலாம்.

இளமையில் நீண்ட காலம் ஐயரவர்களுடன் முக்கிய மாணவராக இருந்து பழகிய நூலாசிரியர் கி. வா. ஜகந்நாதன் பண்டைத் தமிழ்க் கல்வியிலும் சிறந்தவர்; இன்றைய முன்னணி எழுத்தாளர் வரிசையிலும் மதிக்கப்பெறும் ஆசிரியர். ஐயரவர்களின் சிறந்த வாழ்வையும் உயர்ந்த தமிழ்ப் பணியையும் இந்த நூலில் தெளிவாக உணர்த்துகின்றார்.

 


அட்டை அமைப்பு: சத்தியஜித் ராய்


உருவப் படம் : மகாமகோபாத்தியாய

டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் நூலகம்
வழங்கிய புகைப் படத்தின் கோட்டுருவம்.


விலை :ரூ. 4.

 



தமிழ்த் தாத்தா


இந்திய இலக்கியச் சிற்பிகள்
 

தமிழ்த் தாத்தா

(டாக்டர் உ. வே. சாமிநாத ஐயரவர்கள் வாழ்வும்
இலக்கியப் பணியும்)


 


கி. வா. ஜகந்நாதன்


 



சாகித்திய அக்காதெமி

Tamizh Tatta: (Dr. U. V. Swaminatha Iyer), Monograph in Tamil K. V. Jagannathan, Sahitya Akademi, New Delhi (1983) Rs. 4.


 

© சாகித்திய அக்காதெமி

முதல் வெளியீடு: 1983

 

தலைமை அலுவலகம்:

சாகித்திய அக்காதெமி

ரவீந்திரபவன், புது தில்லி 110 001

 

கிளை அலுவலகங்கள்:

29, எல்டாம்ஸ் சாலை, சென்னை 600 018

பிளாக் W-B,ரவீந்திர சரோபர் ஸ்டேடியம், கல்கத்தா 700 029

172, பம்பாய் மராத்தி கிரந்த சங்கிரகாலயா ரோடு

தாதர், பம்பாய் 400 014

 

விலை : ரூ. 4.

 

அச்சிட்டோர்: டையோசிசன் அச்சகம், சென்னை 600 007

முன்னுரை

சென்ற நூற்றாண்டின் இறுதியில் தோன்றி இந்த நூற்றாண்டில் மறைந்த இரண்டு பெரும் புலவர்கள் தமிழுக்கு ஆக்கத்தை அளித்துப் புகழ் படைத்தனர். ஒருவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்; மற்றொருவர் மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாத ஐயரவர்கள். பாரதியார் அற்புதமான புதிய கவிதைகளைப் பாடித் தமிழ் மகளை அலங்கரித்தார். ஐயரவர்களோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய சங்க நூல்களையும் வேறு பழைய காவியங்களையும் கண்டெடுத்து ஆராய்ந்து அருமையான முறையில் பதிப்பித்து உதவினார்கள். அந்த நூல்களால் உலகம் முழுவதும் தமிழின் தொன்மையையும் பெருமையையும் பண்டைத் தமிழ் நாகரிகத்தையும் தெரிந்துகொண்டது. வெவ்வேறு நாடுகளில் உள்ள பேரறிஞர்கள் தமிழில் ஈடுபட்டு ஆராய்ச்சி செய்யலானார்கள். அதன் பயனாக உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்றன, இனியும் நடைபெறும்.

கம்பராமாயணம், வில்லி பாரதம் போன்ற நூல்களோடு நின்றிருந்த தமிழ் இலக்கியத்தின் விரிவு புலப்பட்டது. இவ்வளவு பழைய காலத்திலே தமிழ் நாட்டின் நாகரிகம் இத்தகைய சிறப்புடன் இருந்தது பெரு வியப்புக்குரியது என்று பலரும் பாராட்டினார்கள். தொன்மையான நூல்களாக இருந்தாலும் சங்க நூல்கள் இன்றும் கற்பவர்களுக்கு இனியனவாய் உள்ளன.

இத்தகைய சங்க நூல்களைக் கண்டெடுத்து உதவிய டாக்டர் ஐயர் உரைநடையிலும் பல நூல்களே எழுதினார். அவர் பதிப்பித்த மணிமேகலைக்கு அங்கமாக மணிமேகலைக் கதைச் சுருக்கத்தையும், புத்தர், சங்கம், தர்மம் என்னும் மும்மணிகளைப்பற்றியும் எழுதினார். பெருங்கதைக்கு அங்கமாக உதயணன் சரித்திரத்தை எழுதினார்.

இவற்றையெல்லாமல் தம் ஆசிரியராகிய மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் வரலாற்றையும் வேறு பலருடைய வரலாறுகளையும் எழுதி உதவினார். ஏடு தேடியபோது தாம்பெற்ற அநுபவங்களை எடுத்துரைத்தார். சங்க நூல்களில் கண்ட பல செய்திகளைக் கட்டுரை வடிவில் எழுதினார். அவர் பதிப்பித்த

நூல்களில் உள்ள முகவுரையே அவருடைய உரைநடை வளத்துக்குச் சான்றுபகரும். அவற்றோடு மேலே கண்ட வகைகளில் அவர் எழுதிக் குவித்தவை தமிழுக்குக் கிடைத்த களஞ்சியம் ஆகும்.

பண்டை நூற்பதிப்பு, வாழ்க்கை வரலாறு, ஆராய்ச்சி, அநுபவக்அநுபவக் கட்டுரைகள் என்று பல துறைகளில் தம்முடைய இலக்கியப் பணியைச் செய்த அப்பெருமான் எண்பத்தெட்டு ஆண்டுகள் வாழ்ந்து 1942ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மறைந்தார். நினைவு தெரிந்தது முதல் தமிழைப் பயின்றும், பயிற்றுவித்தும், பிறகு பண்டை நூல்களைப் பதிப்பித்தும் தமிழுக்கு வளம் ஊட்டி வாழ்ந்த அப்பெரியாருடைய வரலாறு பல பல அரிய உண்மைகளை வெளியிடுகிறது.

அப்பெருமானுடைய வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கமே இந்த வெளியீடு. அவருடைய வாழ்க்கையில் மாணவப் பருவம், ஆசிரியத் தொண்டு, பதிப்புத்துறை, எழுத்துப்பணி என்ற பகுதிகள் அமைந்தன. அவற்றையெல்லாம் ஒருவாறு சுருக்கமாக இந்த நூலில் எழுதியிருக்கிறேன். இறுதியில் அவருடைய உரைநடையைப் பற்றிய பகுதியையும் எழுதிச் சேர்த்திருக்கிறேன்.

கவியரசர் பாரதியார் ‘பொதிய மலைப் பிறந்த தமிழ் வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயில், துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய், இறப்பின்றித் துலங்குவாயே!’ என்று ஐயரவர்களைப்பற்றிப் பாடினார். ஆம், அப்பெருமான் என்றும் வாழ்வார். தமிழுள்ள காலமெல்லாம் அவர் புகழ் நின்று நிலைக்கும்.

பொருளடக்கம்


1. 9
2. 10
3. 14
4. 17
5. 17
6. 19
7. 20
8. 21
9. 23
10. 23
11. 24
12. 25
13. 25
14. 26
15. 28
16. 30
17. 31
18. 31
19. 32
20. 33
21. 34
22. 37
23. 39
24. 39
25. 40
26. 41
27. 42
28. 45
29. 45
30. 46
31. 46
32. 47
33. 50
34. 50
35. 50
36. 51
37. 52
38. 53
39. 53
40. 54
41. 54
42. 55
43. 55
44. 56
45. 57
46. 57
47. 57
48. 58
49. 59
50. 59
51. 60
52. 61
53. 61
54. 62
55. 62
56. 63
57. 63
58. 64
59. 64
60. 65
61. 65
62. 66
63. 66
64. 68
65. 70
79