அகநானூறு/141 முதல் 150 முடிய
Appearance
< அகநானூறு
அகநானூறு பக்கங்கள்
களிற்றியானை நிரை 1-10 11-20 21-30 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100 101-110 111-120
மணிமிடை பவளம் 121-130 131-140 141-150 151-160 161-170 171-180 181-190 191-200 201-210 211-220 221-230 231-240 241-250 251-260 261-270 271-280 281-290 291-300
நித்திலக் கோவை 301-310 311-320 321-330 331-340 341-350 351-360 361-370 371-380 381-390 391-400
2.மணிமிடை பவளம்
[தொகு]பாடல் 141 (அம்மவாழி)
[தொகு]- அம்ம வாழி, தோழி ! கைம்மிகக்
- கனவுங் கங்குல்தோ றினிய: நனவும்
- புனைவினை நல்இல் புள்ளும் பாங்கின!
- நெஞ்சும் நனிபுகன்று உறையும்; எஞ்சாது
- உலகுதொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி 5
- மழைகால் நீங்கிய மாக விசும்பில்
- குறுமுயல் மறுநிறம் கிளர, மதி நிறைந்து,
- அறுமீன் சேரும் அகல்இருள் நடுநாள்:
- மறுகுவிளக் குறுத்து, மாலை தூக்கிப்,
- பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய 10
- விழவுஉடன் அயர, வருகதில் அம்ம!
- துவரப் புலர்ந்து தூமலர் கஞலித்,
- தகரம் நாறுந் தண்நறுங் கதுப்பின்
- புதுமண மகடூஉ அயினிய கடிநகர்ப்
- பல்கோட்டு அடுப்பில் பால்உலை இரீஇ 15
- கூழைக் கூந்தற் குறுந்தொடி மகளிர்
- பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்துப்
- பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கைக்
- கடிதுஇடி வெரீஇய கமஞ்சூல் வெண்குருகு
- தீங்குலை வாழை ஓங்குமடல் இராது: 20
- நெடுங்கால் மாஅத்துக் குறும்பறை பயிற்றுஞ்
- செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால்
- வெல்போர்ச் சோழன் இடையாற்று அன்ன
- நல்லிசை வெறுக்கை தருமார், பல்பொறிப்
- புலிக்கேழ் உற்ற பூவிடைப் பெருஞ்சினை 25
- நரந்த நறும்பூ நாள்மலர் உதிரக்,
- கலைபாய்ந்து உகளும், கல்சேர் வேங்கைத்,
- தேம்கமழ் நெடுவரைப் பிறங்கிய
- வேங்கட வைப்பிற் சுரன்இறந் தோரே. 29
பாடல் 142 (இலமலரன்ன)
[தொகு]- இலமலர் அன்ன அம்செந் நாவிற்
- புலம்மீக் கூறும் புரையோர் ஏத்தப்,
- பலர்மேந் தோன்றிய கவிகை வள்ளல்
- நிறையருந் தானை வெல்போர் மாந்தரம்-
- பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற 5
- குறையோர் கொள்கலம் போல, நன்றும்
- உவஇனி - வாழிய, நெஞ்சே!- காதலி
- முறையின் வழா அது ஆற்றிப் பெற்ற
- கறையடி யானை நன்னன் பாழி,
- ஊட்டரு மரபின் அஞ்சு வரு பேய்எக் 10
- கூட்டெதிர் கொண்ட வாய்மொழி மிஞிலி
- புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும்பெயர்
- வெள்ளத் தானை அதிகற் கொன்றுஉவந்து
- ஒள்வாள் அமலை ஞாட்பிற்,
- பலர் அறி வுறுதல் அஞ்சிப், பைப்பய, 15
- நீர்த்திரள் கடுக்கும் மாசில் வெள்ளிச்
- சூர்ப்புறு கோல்வளை செறித்த முன்கைக்
- குறை அறல் அன்ன இரும்பல் கூந்தல்,
- இடனில் சிறுபுறத்து இழையொடு துயல்வரக்,
- கடல்மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து. 20
- உருவுகிளர் ஏர்வினைப் பொலிந்த பாவை
- இயல்கற் றன்ன ஒதுக்கினள் வந்து,
- பெயல் அலைக் கலங்கிய மலைப்பூங் கோதை
- இயல்எறி பொன்னின் கொங்குசோர்பு உறைப்பத்
- தொடிக்கண் வடுக்கொள - முயங்கினள்:
- வடிப்புறு நரம்பின் தீவிய மொழிந்தே. 26
பாடல் 143 (செய்வினைப்)
[தொகு]- செய்வினைப் பிரிதல் எண்ணிக், கைம்மிகக்
- காடுகவின் ஒழியக் கடுங்கதிர் தெறுதலின்,
- நீடுசினை வறிய வாக, ஒல்லென
- வாடுபல் அகலிலை கோடைக்கு ஒய்யும்
- தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கெழுபு 5
- முளிஅரிற் பிறந்த வளிவளர் கூர்எரிச்
- சுடர்நிமிர் நெடுங்கொடி விடர்முகை முழங்கும்
- 'வெம்மலை அருஞ்சுரம் நீந்தி - ஐய!
- சேறும்' என்ற சிறுசொற்கு... இவட்கே,
- வசைஇல் வெம்போர் வானவன் மறவன் 10
- நசையின் வாழ்நர்க்கு நன்கலஞ் சுரக்கும்,
- பொய்யா வாய்வாள், புனைகழல் பிட்டன்
- மைதவழ் உயர்சிமைக் குதிரைக் கவாஅன்
- அகல்அறை நெடுஞ்சுனை, துவலையின் மலர்ந்த
- தண்கமழ் நீலம் போலக்,
- கண்பனி கலுழ்ந்தன; நோகோ யானே. 16
பாடல் 144 (வருதுமென்ற)
[தொகு]- "வருதும்" என்ற நாளும் பொய்த்தன;
- அரியேர் உண்கண் நீரும் நில்லா;
- தண்கார்க்கு ஈன்ற பைங்கொடி முல்லை
- வைவாய் வான்முகை அவிழ்ந்த கோதை
- பெய்வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார், 5
- அருள்கண் மாறலோ மாறுக- அந்தில்
- அறன்அஞ் சலரே!- ஆயிழை! நமர்' எனச்
- சிறிய சொல்லிப் பெரிய புலப்பினும்,
- பனிபடு நறுந்தார் குழைய, நம்மொடு,
- துனிதீர் முயக்கம் பெற்றோள் போல 10
- உவக்குநள்- வாழிய, நெஞ்சே!- விசும்பின்
- ஏறெழுந்து முழங்கினும் மாறெழுந்து சிலைக்கும்
- கடாஅ யானை கொட்கும் பாசறைப்,
- பார்வேட்டு எழுந்த மள்ளர் கையதை
- கூர்வாட் குவிமுகஞ் சிதைய நூறி 15
- மானடி மருங்கில் பெயர்த்த குருதி
- வான மீனின் வயின்வயின் இமைப்ப,
- அமரோர்த்து, அட்ட செல்வம்
- தமர்விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே. 19
பாடல் 145 (வேர்முழுது)
[தொகு]- வேர்முழுது உலறி நின்ற புழற்கால்,
- தேர்மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும்,
- வற்றல் மரத்த பொன்தலை ஓதி
- வெயிற்கவின் இழந்த வைப்பின் பையுள் கொள,
- நுண்ணிதின் நிவக்கும் வெண்ஞெமை வியன்காட்டு 5
- ஆளில் அத்தத்து, அளியள் அவனொடு-
- வாள்வரி பொருத புண்கூர் யானை
- புகர்சிதை முகத்த குருதி வார,
- உயர்சிமை நெடுங்கோட்டு உருமென முழங்கும்
- 'அருஞ்சுரம் இறந்தனள்' என்ப- பெருஞ்சீர் 10
- அன்னி குறுக்கைப் பறந்தலைத், திதியன்
- தொல்நிலை முழுமுதல் துமியப் பண்ணிய
- நன்னர் மெல்லிணர்ப் புன்னை போலக்,
- கடுநவைப் படீஇயர் மாதோ - களி மயில்
- குஞ்சரக் குரல குருகோடு ஆலும், 15
- துஞ்சா முழவின் துய்த்தியல் வாழ்க்கைக்,
- கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின்,
- ஊழடி ஒதுங்கினும் உயங்கும் ஐம்பாற்
- சிறுபல் கூந்தற் போதுபிடித்து அருளாது,
- எறிகோல் சிதைய நூறவும், சிறுபுறம், 20
- 'எனக்குஉரித்து' என்னாள், நின்ற என்
- அமர்க்கண் அஞ்ஞையை அலைத்த கையே! 22
பாடல் 146 (வலிமிகுமுன்பின்)
[தொகு]- வலிமிகு முன்பின் அண்ணல் ஏஎறு
- பனிமலர்ப் பொய்கைப் பகல்செல மறுகி
- மடக்கண் எருமை மாண்நாகு தழீஇ,
- படப்பை நண்ணிப், பழனத்து அல்கும்
- கலிமகிழ் ஊரன் ஒலிமணி நெடுந்தேர் 5
- ஒள்ளிமழை மகளிர் சேரிப், பல்நாள்
- இயங்கல் ஆனாது ஆயின்; வயங்கிழை
- யார்கொல் அனியள் தானே- எம்போல்
- மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி
- வளிபொரத் துயல்வரும் தளிபொழி மலரின் 10
- கண்பனி ஆகத்து உறைப்பக், கண் பசந்து
- ஆயமும் அயலும் மருளத்,
- தாயோம்பு ஆய்நலம் வேண்டா தோளோ? 13
பாடல் 147 (ஓங்குமலைச்)
[தொகு]- ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த
- வேங்கை வெறித்தழை வேறுவகுத் தன்னை
- ஊன்பொதி அவிழாக் கோட்டுகிர்க் குருளை
- மூன்றுடன் ஈன்ற முடங்கர் நிழத்த,
- துறுகல் விடரளைப் பிணவுபசி கூர்ந்தெனப், 5
- பொறிகிளர் உழுவைப் போழ்வாய் ஏற்றை
- அறுகோட்டு உழைமான் ஆண்குரல் ஓர்க்கும்
- நெறிபடு கவலை நிரம்பா நீளிடை,
- வெள்ளி வீதியைப் போல நன்றும்
- செலவு அயர்ந் திசினால் யானே; பல புலந்து, 10
- உண்ணா உயக்கமொடு உயிர்செலச் சா அய்,
- தோளும் தொல்கவின் தொலைய, நாளும்
- பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி,
- மருந்துபிறிது இன்மையின், இருந்துவினை இலனே! 14
பாடல் 148 (பனைத்திரள்)
[தொகு]- பனைத்திரள் அன்ன பருஏர் எறுழ்த் தடக்கைச்
- கொலைச்சினந் தவிரா மதனுடை முன்பின்,
- வண்டுபடு கடாஅத்து, உயர்மருப்பு யானை
- தண்கமழ் சிலம்பின் மரம்படத் தொலைச்சி:
- உறுபுலி உரறக் குத்தி; விறல்கடிந்து, 5
- சிறுதினைப் பெரும்புனம் வவ்வும் நாட!
- கடும்பரிக் குதிரை ஆஅய் எயினன்
- நெடுந்தேர் மிஞிலியொடு பொருது, களம் பட்டெனக்
- காணிய செல்லாக் கூகை நாணிக்
- கடும்பகல் வழங்கா தாஅங்கு, இடும்பை 10
- பெரிதால் அம்ம இவட்கே: அதனால்
- மாலை வருதல் வேண்டும் - சோலை
- முளைமேய் பெருங்களிறு வழங்கும்
- மலைமுதல் அடுக்கத்த சிறுகல் ஆறே. 14
பாடல் 149 (சிறுபுன்முதலை)
[தொகு]- சிறுபுன் சிதலை சேண்முயன்று எடுத்த;
- நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்கிரை முனையின்,
- புல்லரை இருப்பைத் தொள்ளை வான்பூப்,
- பெருங்கை எண்கின் இருங்கிளை கவரும்
- அத்த நீள்இடைப் போகி, நன்றும் 5
- அரிதுசெய் விழுப்பொருள் எளிதினிற் பெறினும்
- வாரேன்- வாழி, என் நெஞ்சே!- சேரலர்
- சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க,
- யவனர் தந்த வினைமாண் நன்கலம்
- பொன்னொடு வந்து கறியொடு பெயரும் 10
- வளம்கெழு முசிறி ஆர்ப்பெழ வளஇ,
- அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய
- நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
- கொடிநுடங்கு மறுகின் கூடற் குடாஅது,
- பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய, 15
- ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து,
- வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து
- எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள்
- அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே. 19
பாடல் 150 (பின்னுவிட)
[தொகு]- பின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென
- ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்புவிடக்
- கண்ணுருத்து எழுதரு முலையும் நோக்கி,
- 'எல்லினை பெரிது' எனப் பன்மாண் கூறிப்
- பெருந்தோள் அடைய முயங்கி, நீடு நினைந்து, 5
- அருங்கடிப் படுத்தனள் யாயே; கடுஞ்செலல்
- வாட்சுறா வழங்கும் வளைமேய் பெருந்துறைக்,
- கனைத்த நெய்தற் கண்போன் மாமலர்
- நனைத்த செருந்திப் போதுவாய் அவிழ,
- மாலை மணியிதழ் கூம்பக் காலைக் 10
- கள்நாறு காவியொடு தண்ணென் மலருங்
- கழியுங், கானலுங் காண்தொறும் பலபுலந்து;
- வாரார் கொல்? எனப் பருவரும்-
- தார் ஆர் மார்ப! நீ தணந்த ஞான்றே! 14