ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு குறிஞ்சி/கபிலர்/23.அம்ம வாழிப் பத்து

விக்கிமூலம் இலிருந்து
ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு[தொகு]

மூன்றாவது நூறு குறிஞ்சி[தொகு]

பாடியவர்: கபிலர்[தொகு]

23.அம்மவாழிப் பத்து[தொகு]

221. அம்ம வாழி தோழி கதலர்

பாவை யன்னஎன் ஆய்கவின் தொலைய

நன்மா மேனி பசப்பச்

செல்வல் என்பதம் மலைகெழு நாடே.

222. அம்ம வாழி தோழி நம்மூர்

நனிந்துவந்து உறையும் நறுந்தண் மார்வன்

இன் இனி வாரா மாறுகொல்

சின்னிரை ஓதிஎன் நுதல்பசப் பதுவே.

223. அம்ம வாழி தோழி நம்மலை

வரையாம் இழியக் கோடல் நீடக்

காதலர்ப் பிரிந்தோர் கையற நலியும்

தண்பனி வடந்தை அச்சிரம்

முந்துவந்த் தனர்நம் காத லோரே.

224. அம்ம வாழி தோழி நம்மலை

மணிநிறங் கொண்ட மாமலை வெற்பில்

துணீநீர் அருவி நம்மோடு ஆடல்

எளிய மன்ஆல் அவர்க்கினி

அரிய ஆகுதல் மருண்டனென் யானே.

225. அம்ம வாழி தோழி பைஞ்சுனைப்

பாசடை நிவந்த பனிமலர்க் குவளை

உள்ளகங் கமழும் கூந்தல் மெல்லியல்

ஏர்திகழ் ஒண்ணுதல் பசத்தல்

ஓரார் கொல்நம் காத லோரே.

226. அம்ம வாழி தோழி நம்மலை

நறுந்தண் சிலம்பின் நாறுகுலைக் காந்தன்

கொங்குஉன் வண்டின் பெயர்ந்துபுற மாறிநின்

வன்புடை விறற்கவின் கொண்ட

வன்பி லாளன் வந்தனன் இனியே.

227. அம்ம வாழி தோழி நாளும்

நன்னுதல் பசப்பவௌம் நறுந்தோள் நெகிழவும்

ஆற்றலம் யாம் என மதிப்பக் கூறி

நப்பிரிந்து உறைதோர் மன்றநீ

விட்டனை யோஅவர் உற்ற சூளே.

228. அம்ம வாழி தோழி நம்மூர்

நிரந்திலங்கு அருவிய நெடுமலை நாடன்

இரந்துகுறை யுறாஅன் பெயரின்

என்ஆ வதுகொல்நம் இன்னுயிர் நிலையே.

229. அம்ம வாழி தோழி நாம்அழப்

பன்னாள் பிரிந்த அறனி லாளன்

வந்தன னோமற்று இரவில்

பொன்போல் விறல்கவின் கொள்ளுநின் நுதலே.

230. அம்ம வாழி தோழி நம்மொடு

சிறுதினைக் காவல் நாகிப் பெரிதுநின்

மெல்தோள் நெகிழவும் திருநுதல் பசப்பவும்

பொன்போல் விறற்கவின் தொலைத்த

குன்ற நாடற்கு அயர்வர்நன் மணனே.