ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு நெய்தல்/அம்மூவனார்/17.சிறுவெண்காக்கைப் பத்து

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு[தொகு]

இரண்டாவது நூறு நெய்தல்[தொகு]

பாடியவர்: அம்மூவனார்[தொகு]

17.சிறுவெண் காக்கைப் பத்து[தொகு]

161. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை

கருங்கோட்டுப் புன்னைத் தங்கும் துறைவற்குப்

பயந்தநுதல் அழியச் சாஅய்

நயந்த நெஞ்சம் நோய்ப்பா ல்ஃதே.

162. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை

நீத்துநீர் இருங்கழி இரைதேர்ந்து உண்டு

பூக்கமழ் பொதும்பர்ச் சேக்கும்

துறைவன் சொல்லோ பிறவா யினவே.

163. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை

இருங்கழித் துவலை ஒலியில் துஞ்சும்

துறைவன் துறந்தெனத் துறந்துஎன்

இறையேர் முன்கை நீக்கிய வளையே.

164. இருங்கடற் கரையது சிறுவெண் காக்கை

இருங்கழி மருங்கின் அயிரை ஆரும்

தண்ணந் துறைவன் தகுதி

நம்மோடு அமையாது அலர்பயந் தன்றே.

165. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை

ஆருகழிச் சிறுமீன் ஆர மாந்தும்

துறைவன் சொல்லிய சொல்என்

இறையோர் எல்வளை கொண்டுநின் றதுவே.

166. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை

வரிவெண் தாலி வலைசெத்து வெரூஉம்

மெல்லம் புலம்பன் தேறி

நல்ல வாயின நல்லோள் கண்ணே.

167. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை

இருங்கழி இனக்கெடிறு ஆரும் துறைவன்

நல்குவன் போலக் கூறி

நல்கான் ஆயினும் தொல்கே என்னே.

168. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை

துறைபடி யம்பி அகமனை ஈனும்

தண்ணந் தூறைவன் நல்கி

ஒள்நுதல் அரிவை பாலா ரும்மே.

169. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை

பொன்னிணார் ஞாழல் முனையில் பொதியவிழ்

புன்னையம் பூஞ்சினைச் சேக்கும் துறைவன்

நெஞ்சத்து உண்மை யறிந்தும்

என்செயப் பசக்கும் தோழியென் கண்ணே.

170. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை

இருங்கழி நெய்தல் சிதைக்குந் துறைவன்

நல்லன் என்றி யாயின்

பல்லிதழ் உண்கண் பசத்தல்மற் றெவனோ.