ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு பாலை/ஓதலாந்தையார்/34.தலைவி இரங்கு பத்து

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு[தொகு]

நான்காவது நூறு பாலை[தொகு]

பாடியவர்: ஓதலாந்தையார்[தொகு]

34.தலைவி இரங்கு பத்து[தொகு]

331. அம்ம வாழி தோழி அவிழிணர்க்

கருங்கால் மராஅத்து வைகிசினை வான்பூ

அருஞ்சுரம் செல்லுநர் ஒழிந்தோர் உள்ள

இனிய கம்ழும் வெற்பின்

இன்னா என்பஅவர் சென்ற ஆறே.

332. அம்ம வாழி தோழி என்னதூஉம்

அறநில மன்ற தாமே விறன்மிசைக்

குன்றுகெழு கானத்ஹ்ட பண்பின் மாக்கணம்

கொடிதே காதலிப் பிரிதல்

செல்லல் ஐய என்னா தவ்வே.

333. அம்ம வாழி தோழி யாவதும்

வல்லா கொல்லோ தாமே அவண

கல்லுடை நன்னாட்டுப் புள்ளீனப் பெர்ந்தோடு

யாஅம் துணைபுணர்ந்து உறைதும்

யாங்குப் பிந்துறைதி என்னா தவ்வே.

334. அம்ம வாழி தோழி சிறியிலை

நெல்லி நீடிய கல்வாய் கடத்திடைப்

பேதை நெஞ்சம் பின்செலச் சென்றோர்

கல்லினும் வலியர் மன்ற

ப்ல்லிதல் உண்கண் அழப்பிர்ந் தோரே.

335. அம்ம வாழி தோழி நம்வயின்

நெய்தோ ரன்ன வெவிய எருவை

கற்புடை மருங்கில் கடுமுடை யார்க்கும்

கடுநனி கடிய என்ப

நீடி இவன் வருநர் சென்ற ஆறே.

336. அம்ம வாழி தோழி நம்வயின்

பிரியலர் போலப் புணர்ந்தோர் மன்ற

நின்றதில் பொருட்பிணி முற்றிய

என்றூழ் நீடிய சுரன்இறந் தோரே.

337. அம்ம வாழி தோழி நம் வயின்

மெய்யுற விரும்பிய கைகவர் முயக்கினும்

இனிய மன்ற தாமே

பனியிரும் குன்றம் சென்றோர்க்குப் பொருளே.

338. அம்ம வாழி தோழி சாரல்

இலையில வலர்ந்த ஓங்குநிலை இலவம்

மலையுறு தீயில் சுரமுதல் தோன்றும்

பிரிவருங் காலையும் பிரிதல்

அரிதுவல் லுநர்நம் காத லோரே.

339. அம்ம வாழி தொழி சிறியிலைக்

குறுஞ்சினை வேம்பின் நறும்பழம் உணீஇய

வாவல் உகக்கும் மாலையும்

இன்றுகொல் காதலவர் சென்ற நாடே.

340. அம்ம வாழி தொழி காதலர்

உள்ளார் கொல்நாம் மருள்உற் றனம்கொல்

விட்டுச் சென்றனர் நம்மே

தட்டைத் சென்றனர் நம்மே

தட்டைத் தீயின் ஊரலர் எழவே.