ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு குறிஞ்சி/கபிலர்/27.கேழற் பத்து

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு[தொகு]

மூன்றாவது நூறு குறிஞ்சி[தொகு]

பாடியவர்: கபிலர்[தொகு]

27.கேழற் பத்து[தொகு]

261. மெந்தி27.கேழற் பத்து

னை மேய்ந்த தறுகண் பன்றி

வன்கல் அடுக்கத்துத் துஞ்சும் நாடன்

எந்தை அறிதல் அஞ்சிக் கொல்

அதுவே மன்ற வாரா மையே.

262. சிறுதினை மேய்ந்த தறுகண் பன்றி

துறுகல் அடுக்கத்துத் துணையொடு வதியும்

இலங்குமலை நாடன் வரூஉம்

மருந்தும் அறியும்கொல் தோழிஅவன் விருப்பே

263. நன்பொன் அன்ன புனிறுதீர் ஏனல்

கட்டளை அன்ன கேழல் மாந்தும்

குன்றுகெழு நாடன் தானும்

வந்தனன் வந்தன்று தோழிஎன் நலனே.

264. இளம்பிறை யன்ன கோட்ட கேழல்

களங்கனி யன்ன பெண்பாற் புணரும்

அயந்திகழ் சில்மப கண்டிரும்

பயந்தன மாதோநீ நய்ந்தோள் கண்ணே.

265. புலிகொல் பெண்பால் புவரிக் குருளை

வளைவெண் மருப்பின் கேழல் புரக்கும்

குன்றுகெழு நாடன் மறந்தனன்

பொன்போல் புதல்வனோடு என்நீத் தோனே

266. சிறுகண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தலொடு

குறுங்கை இரும்புலி பொரூஉம் நாடன்

நனிநாண் உடைமையம் மன்ற

பனிப்பயந் தனநீ நய்ந்தோள் கண்ணே.

267. சிறுகண் பறிப் பெருஞ்சின ஒருத்தல்

துறுகல் அடுக்கத்து வில்லோர் மாற்றி

ஐவனம் கவரும் குன்ற நாடன்

வண்டுபடு கூந்தலைப் பேணிப்

பண்பில சொல்லும் தேறுதல் செத்தே.

268. தாஅய் இழந்த தழுவரிக் குருளையொடு

வளமலைச் சிறுதினை ய்ணீஇய கானவர்

வரையோங்கு உயர்சிமைக் கேழல் உறங்கும்

நன்மலை நாடன் பிரிதல்

என்பயக்கும் மோநம் விட்டுத் துறந்தே.

269. கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவை

விஅளைந்த செறுவில் தோன்றும் நாடன்

வாராது அவண்உறை நீடின் நேர்வளை

இணை ஈர் ஓதி நீயழத்

துணைநனி இழக்குவென் மடமை யானே.

270. கிழங்ககழ் கேழல் உழுத சிலம்பில்

தலைவிளை கானவர் கொய்தனர் பொய்ரும்

புல்லென் குன்றத்துப் புலம்புகொள் நெடுவரை

காணினும் கலிழுநோய் செத்துத்

தாம்வந் தனர்நம் காத லோரே.