ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு மருதம்/ஓரம்போகியார்/5. புலவிப் பத்து

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு[தொகு]

முதலாவது நூறு மருதம்[தொகு]

பாடியவர் ஓரம்போகியார்[தொகு]

5.புலவிப்பத்து (41-50)[தொகு]

41. தன்பார்ப்புத் தின்னும் அன்புஇல் முதலையொடு

வெண்பூம் பொய்கைத்து அவனூர்என்ப அதனால்

தன்சொல் உணர்ந்தோர் மேனி

பொன்போல் செய்யும் ஊர்கிழ வோனே.

42. மகிழ்மிகச் சிறப்ப மயங்கினள் கொலோ

யாணர் ஊரநின் மானிழை யரிவை

காவிரி மலிர்நிறை யன்னநின்

மார்புநனி விலக்கல் தொடங்கி யோளே.

43. அம்பணத் தன்ன யாமை யேறிச்

செம்பின் அன்ன பார்ப்புப் பலதுஞ்சும்

யாணர் ஊர நின்னினும்

பாணன் பொய்யன் பல்சூ ளினனே.

44. தீம்பெரும் பொய்கை யாமை இளம்பார்ப்புத்

தாய்முகம் நோக்கி வளர்ந்திசின் ஆஅங்கு

அதுவே ஐயநின் மார்பே

அறிந்தனை ஒழுகுமதி அறனுமார் அதுவே.

45. கூதிர் ஆயின் தன்கலிழ் தந்து

வேனில் ஆயின் மணிநிறங் கொள்ளும்

யாறுஅணிந் தன்றுநின் ஊரே

பச்ப்பணிந் தனவால் மகிழ்நஎன் கண்ணே.

46. நினக்கே அன்றுஅஃது எமக்குமார் இனிதே

நின்மார்பு நய்ந்த நன்னுதல் அரிவை

வேண்டிய குறிப்பினை யாகி

ஈண்டுநீ அருளாது ஆண்டுறை தல்லே.

47. முள்ளெயிற்றுப் பாண்மகள் இன்கெடிறு சொரிந்த

அகன்பெரு வட்டி நிறைய மனையோள்

அரிகால் பெரும்பயறு நிறைக்கும் ஊர

மாணிமழை ஆயம் அறியும்நின்

பாணன் போலப் பலபொய்த் தல்லே.

48. வலைவல் பாண்மகன் வாலெயிற்று மடமகள்

வராஅல் அஒரிந்த வட்டியுள் மனையோள்

யாண்டுகழி வெண்ணெல் நிறைக்கும் ஊர

வேண்டேம் பெருமநின் பரத்தை

யாண்டுச் செய்குறியோடு ஈண்டுநீ வரவே.

49. அஞ்சில் ஓதி அசைநடைப் பாண்மகள்

சில்மீன் சொரிந்து பல்நெல் பெறூஉம்

யாணர் ஊரநின் பாண்மகன்

யார்நலம் சிதயப் பொய்க்குமோ இனியே.

50. துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும்

வஞ்சி ஓங்கிய யாணர் ஊர

தஞ்சம் அருளாய் நீயேநின்

நெஞ்சம் பெற்ற இவளுமார் அழுமே.