ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு முல்லை/பேயனார்/45.பாசறைப் பத்து

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு[தொகு]

ஐந்தாவது நூறு முல்லை[தொகு]

பாடியவர்: பேயனார்[தொகு]

45.பாசறைப் பத்து[தொகு]

441. ஐய ஆயின செய்யோள் களவி

கார்நாள் உருமொடு கையறப் பிரிந்தென

நோய் நன்கு செய்தன் எமக்கே

யாம்உறு துயரம் அவள் அறியினோ நன்றே.

442. பெருஞ்சின வேந்தன் அருந்தொழில் தணியின்

விருந்து நனி பெறுதலும் உரியள் மாதோ

இருண்டு தோன்றும் விசும்பினுயர் நிலையுலகத்து

அருந்ததி அனைய கற்பின்

குரும்பை மணிப்பூண் புதல்வன் கற்பின்

443. நனிசேத்து என்னாது நல்தேர் ஏறிச்சென்று

இலங்கு நிலவின் இளம்பிறை போலக்

காண்குவம் தில்அவள் கவின்பெறு சுடர்நுதல்

விண்ணுயர் அரண்பல வெளவிய

மண்ணுறு முரசின் வேந்துதொழில் விடினே.

444. பெருந்தோள் மடவரல் காண்குவெம் தில்ல

நீண்மதில் அரணம் பாய்ந்தெனத் தொடிபிளந்து

வைந்நுதி மழுகிய தடங்கோட்டு யானை

வென்வேல் வேந்தன் பகைதணிந்து

இன்னும் தன்னாட்டு முன்னுதல் பெறினே.

445. புகழ்சால் சிறப்பின் காதலி புலம்பத்

துராந்துவந் தனையே அருந்தொழில் கட்டூர்

நல்லேறு தழீஇ நாகுபெயர் காலை

உள்லூதொறும் கலிழும் நெஞ்சம்

வல்லே எம்மையும் வரவிழைந் தனையே.

446. முல்லை நாறும் கூந்தல் கம்ழ்கொள

நல்ல காண்குவ மாஅ யோயே

பாசறை அருந்தொழில் உதவிநம்

காதல்நன் னாட்டுப் போதரும் பொழுதே.

447. பிணிவீடு பெறுக மன்னவன் தொழிலே

பனிவளர் தளவின் சிரல்வாய்ச் செம்முகை

யாடு சிறைவண்டு அழிப்பப்

பாடல் சான்ற காண்கம்வாள் நுதலே.

448. தழங்குரல் முரசம் காலை இயம்பக்

கடுஞ்சின வேந்தன் தொழில் எதிர்ந் தனனே.

மெல்லவல் மருங்கின் முல்லை பூப்பப்

பொங்குபெயல் கனைதுளி கார் எதிர்ந் தன்றே

அஞ்சில் ஓதியை உள்லுதொறும்

துஞ்சாது அலமரல் நாமெதிர்ந் தனமே.

449. முரம்புகண் உடையத் திரியும் திகிரியொடு

பணைநிலை முனைஇய வயமாப் புணர்ந்து

திண்ணிதின் மாண்டன்று தேரே

ஒள்நுதல் காண்குவம் வேந்துவினை முடினே.

450. முரசுமாறு இரட்டும் அருந்தொழில் பகைதணிந்து

நாடுமுன் னியரோ பீடுகெழ வேந்தன்

வெய்ய உயிர்க்கு நோய்தணியச்

செய்யோள் இலமுஅலைப் படீஇயர்என் கண்ணே.