ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு முல்லை/பேயனார்/46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு[தொகு]

ஐந்தாவது நூறு முல்லை[தொகு]

பாடியவர்: பேயனார்[தொகு]

46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து[தொகு]

451. கார்செய் காலையொடு கையற்ப் பிரிந்தோர்

தேர்தரு விருந்தில் தவிர்குதல் யாவது

மாற்றருந் தானை நோக்கி

ஆற்றவும் இருத்தல் வேந்தனது தொழிலே.

452. வற்ந்த ஞாலம் தளிர்ப்ப வீசிக்

கற்ங்குரல் எழிலி கார்செய் தன்றே

பகைவெங் காதலர் திறைதரு முயற்சி

மெல்தோள் ஆய்கவின் மறையப்

பொன்புனை பீரத்து அலர்செய் தன்றே.

453. அவல்தொறும் தேரை தெவிட்ட மிசைதொறும்

வெங்குரல் புள்ளினம் ஒலிப்ப உதுக்காண்

கார்தொடங் கின்றால் காலை அதனால்

நீர்தொடங் கினவால் நெடுங்கணவர்

தேர்தொடங் கின்றால் நம்வயி நானே.

454. தளவின் பைங்கொடி தழீஇப் பையென

நிலவின் அன்ன நேரும்பு பேணிக்

கார்நய்ந்து எய்தும் முல்லை அவர்

தேர்நயந்து உறையும் என் மாமைக் கவினே.

455. அரசுபகை தணிய முரசுபடச் சினை இ

ஆர்குரல் எழிலி கார்தொடங் கின்றே

அளியவோ அளிய தாமேஎ ஒளிபசந்து

மின்னிழை ஞெகிழச் சாஅய்த்

தொன்னலம் இழந்த என் தடமெல் தோளே.

456. உள்ளார் கொல்லோ தோழி வெள்ளிதழ்ப்

பகல்மதி உருவைல் பகன்றை மாமலர்

வெண்கொடி ஈங்கை பைம்புதல் அணியும்

அரும்பனி அளை இய கூதிர்

ஒருங்கிவண் உறைதல் தெளிந்தகன் றோரே.

457. பெய்பன் நலிய உய்தல்செல் லாது

குருகினம் நரலும் பிரிவருங் காலைத்

துறந்தமை கல்லார் காதலர்

மறந்தமை கல்லாது என் மடங்கெழு நெஞ்சே.

458. துணர்க்காய்க் கொன்றைக் குழற்பழம் ஊழ்த்தன்

அதிர்பெர்ய்ர்க்கு எதிரிய சிதர்கொள் தண்மலர்

பாணர் பெருமகன் பிரிந்தென

மாண்நலம் இழந்தஎன் கண்போன் றனவே.

459. மெலிறைப் பணைத்தோள் பசலை தீரப்

புல்லவும் இயைவது கொல்லோ புல்லார்

அரண்க டந்த சீர்கெழு தானை

வெல்போர் வேந்தனொடு சென்றா

நல்வய லூரன் நறுந்தண் மார்பே.

460. பெரு ஞ்சின வென்ந்தனும் பாசறை முனியான்

இருங்கலி வெற்பன் தூதும் தோன்றா

ததை இலை வாழை முழுமுதல் அசைய

இன்னா வாடையும் அலைக்கும்

என்ஆகு வன்கொல் அளியென் யானே.