ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு பாலை/ஓதலாந்தையார்/32.செலவுப் பத்து

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு[தொகு]

நான்காவது நூறு பாலை[தொகு]

பாடியவர்: ஓதலாந்தையார்[தொகு]

32.செலவுப் பத்து[தொகு]

311. வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும்

ஆரிடைச் செல்வோர் ஆறுநனி வெரூஉம்

காடுஇறந் தனரே காதலர்

நீடுவர் கொல்என நினையும்என் நெஞ்சே.

312. அறஞ்சா லியரோ அறஞ்சா லியரே

வறனுண் டாயினும் அறஞ்சா லியரோ

வாள்வனப் புற்ற அருவிக்

கோள்வல் என்னையை மறிந்த குன்றே.

313. தெறுவது அம்ம நும்மகள் விருப்பே

உறுதுயர் அவலமொடு உயிர்செலச் சாஅய்ப்

பாழ்படு நெஞ்சம் படர் அடக் கலங்க

நாடுஇடை விலங்கிய வைப்பின்

காடுஇறந் தனள்நம் காத லோனே

314. அவிர்தொடி கொட்பக் கழுதுபுகவு அயரக்

கர்ங்கண் காக்கையொடு கழுகுவிசும்பு அகலச்

சிறுகண் யானை ஆள்வீழ்துத் திரித்ரும்

நீளிடை அருஞ்சுரம் என்பநம்

தோளிடை முனிநர் சென்ற ஆறே.

315. பாயல் கொண்ட பனிமலர் நெடுங்கண்

பூசல் கேளார் சேயர் என்ப

விழைநெகிழ் செல்லல் உறீஇக்

கழைமுதிர் சோலைக் காடுஇறந் தோரே.

316. பொன்செய் பாண்டில் பொலங்கலம் நந்தத்

தேரகல் அல்குல் அவ்வரி வாட

இறந்தோர் மன்ற தாமே பிறங்குலைப்

புல்லரை ஓமை நீடிய

புலிவழங்கு அதர கானத் தானே.

317. சூழ்கம் வம்மோ தோழி பாழ்பட்டுப்

பைதற வெந்த பாலை வெங்காட்டு

அருஞ்சுரம் இறந்தோர் தேஎத்துச்

சென்ர நெஞ்சம் நீடிய பொருளே.

318. ஆய்நலம் பசப்ப அரும்படர் நலிய

வேய்மருள் பணைத்தோள் வில்லிலை நெகிழ

நசைநனி கொன்றோர் மன்ற இசைநிமிர்ந்து

ஓடெரி நடந்த வைப்பின்

கோடுயர் பிறங்கல் மலை இறந் தோரே.

319. கண்பொர விளங்கிய கதிர்தெறு வைப்பின்

மண்புரை பெருகிய மரம்முளி கானம்

இறந்தன ரோநம் காதலர்

மறந்தன ரோதில் மறவா நம்மே.

320. முள்ளரை இலவத்து ஒள்ளினர் வான்பூ

முழங்கல் அசைவளி எடுப்ப வானத்து

உருமுப்படு கனலின் இருநிலத்து உறைக்கும்

கவலை அருஞ்சுரம் போயினர்

தவலில் அருநோய் தலைதந் தோரே.