ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு மருதம்/ஓரம்போகியார்/10. எருமைப் பத்து

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு[தொகு]

முதலாவது மருதம்[தொகு]

பாடியவர் ஓரம்போகியார்[தொகு]

10. எருமைப் பத்து[தொகு]

91. நெறிமருப்பு எருமை நீலைரும் போத்து

வெறிமலர்ப் பொய்கை ஆம்பல் மயக்கும்

கழனியூரன் மகளிவள்

பழன வெதிரின் கொடிப்பிணை யலளே.

92. கருங்கோட்டு எருமைச் செங்கண் புனிற்றுஆக்

காதற் குழவிக்கு ஊறுமுலை மடுக்கும்

நுந்தை நும்மூர் வருதும்

ஒண்தொடி மடந்தை நின்னையாம் பெறினே.

93. எருமைநல் ஏற்றினம் மேயல் அருந்தெனப்

பசுமோ ரோடமோடு ஆம்பல் ஒல்லா

செய்த இனைய மன்ற பல்பொழில்

தாதுண வெறுக்கைய ஆகி இவள்

போதுஅவிழ் முச்சி யூதும் வண்டே.

94. மள்ளர் அன்ன தடங்கோட்டு எருமை

மகளிர் அன்ன துணையோடு வதியும்

நிழல்முதிர் இலஞ்சிப் பழனத் ததுவே

கழனித் தாமரை மலரும்

கவின்பெறு சுடர்நூதல் தந்தை ஊரே.

95. கருங்கோட்டு எருமை கயிறுபரிந்து அசைஇ

நெடுங்கதிர் நெல்லின் நாள்மேயல் ஆரும்

புனல்முற் றூரன் பகலும்

படர்மலி அருநோய் செய்தனன் எமக்கே.

96. அணிநடை எருமை ஆடிய அள்ளல்

மணிநிற நெய்தல் ஆமபலொடு கலிக்கும்

கழனி ஊரன் மகளிவள்

பழன் ஊரன் பாயல்இன் துணையே.

97. பகன்றை வான்மலர் மிடைந்த கோட்டைக்

கருந்தாள் எருமைக் கன்று வெரூஉம்

பொய்கை ஊரன் மகளிவள்

பொய்கைப் பூவினும் நறுந்தண் ணியளே.

98. தண்புணல் ஆடும் தடங்கோட்டு எருமை

திண்பிணி அம்பியின் தோன்றும் ஊர

ஒண்டொடி மடமகள் இவளினும்

நுந்தையும் யாயும் துடியரோ நின்னே.

99. பழனப் பாகல் முயிறுமூசு குடம்பை

கழனி யெருமை கதிரொடு மயக்கும்

பூக்கஞல் ஊரன் மகளிவள்

நோய்க்குமருந் தாகிய பணைத்தோ ளோளே.

100. புனலாடு மகளிர் இட்ட ஒள்ளிழை

மணலாடு சிமையத்து எருமை கிளைக்கும்

யாணர் ஊரன் மகளிவள்

பாணர் நரம்பினும் இன்கிள வியளே.

ஐங்குறுநூறு மருதம் முற்றும்[தொகு]