ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு நெய்தல்/அம்மூவனார்/16.வெள்ளாங்குருகுப் பத்து

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு[தொகு]

இரண்டாவது நூறு நெய்தல்[தொகு]

பாடியவர்: அம்மூவனார்[தொகு]

16.வெள்ளங் குருகுப் பத்து[தொகு]

151. வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்

காணிய சென்ற மடநடை நாரை

மிதிப்ப நக்க கண்போல் நெய்தல்

கள்கமழ்ந்து ஆனாத் துறைவற்கு

நெக்க நெஞ்சம் நேர்கல் லேனே.

152. வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்

காணிய சென்ற மடநடை நாரை

கையறுபு இரற்றும் கானலம் புலம்பம்

துரைவன் வரையும் என்ப

அறவன் போலும் அருளுமார் அதுவே.

153. வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்

காணிய சென்ற மடநடை நாரை

உளர ஒழிந்த தூவி குலவுமணல்

போர்வின் பெறூஉம் துறைவன் கேண்மை

நன்னெடுங் கூந்தல் நாடுமோ மற்றே.

154. வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்

காணிய சென்ற மடநடை நாரை

கானற் சேக்கும் துறைவனோடு

யானெவன் செய்கோ பொய்க்கும் இவ்வூரே.

155. வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்

காணிய சென்ற மடநடை நாரை

பதைப்பத் ததைந்த நெய்தல் கழிய

ஓதமொடுபெயரும் துறைவதற்குப்

பைஞ்சாய்ப் பாவை ஈன்றனென் யானே.

156. வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்

காணிய சென்ற மடநடை நாரை

பதைப்ப ஒழிந்த செம்மறுத் தூவி

தெள்கழிப் பரக்கும் துரைவன்

எனக்கோ காதலன் அனைக்கோ வேறே.

157. வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்

காணிய சென்ற மடநடை நாரை

காலை யிருந்து மாலைச் சேக்கும்

தெண்கடல் சேர்ப்பனொடு வாரான்

தான்வந் தனன்எம் காத லோனே.

158. வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்

காணிய சென்ற மடநடை நாரை

கானலம் பெருந்துறைத் துணையொடு கொட்கும்

தண்ணந் துறைவன் கண்டிக்கும்

அம்மா மேனிஎம் தோழியது துயரே.

159. வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்

காணிய சென்ற மடநடை நாரை

பசிதின அல்கும் பனிநீர்ச் சேர்ப்ப

நின்ஒன்று இரக்குவன் அல்லேன்

தந்தனை சென்மோ கொண்டஇவள் நலனே.

160. வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்

காணிய சென்ற மடநடை நாரை

நொந்ததன் தலையும் நோய்மிகும் துறைவ

பண்டையின் மிகப்பெரிது இனைஇ

முயங்குமதி பெரும மய்ங்கினள் பெரிதே.