ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு முல்லை/பேயனார்/49.தேர் வியங்கொண்ட பத்து

விக்கிமூலம் இலிருந்து
ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு[தொகு]

ஐந்தாவது நூறு முல்லை[தொகு]

பாடியவர்: பேயனார்[தொகு]

49.தேர் வியங்கொண்ட பத்து[தொகு]

481. சாய்இறைப் பணைத்தோள் அவ்வரி அல்குல்

சேயிழை மாதரை உள்ளி நோய்விட

முள் இட்டு ஊர்மதி வலவநின்

புன்இயல் கலிமாப் பூண்ட தேரே.

482. தெரியிழை அரிவைக்குப் பெருவிருந் தாக

வல்விரைத்து கடவுமதி பாகவெள்வேல்

வென்றடு தானை வேந்தனொடு

நாளிடைச் சேப்பின் ஊழியின் நெடிதே.

483. ஆறுவனப்பு எய்த அலர்தா யினவே

வேந்துவிட் டனனே மாவிரைந் தனவே

முன்னுறக் கடவுமதி பாக

நன்னுதல் அரிவை தன்னலம் பெறவே.

484. வேனில் நீங்கக் கார்மழை தலைஇக்

காடுகவின் கொண்டன்று பொழுது பாடுசிறந்து

கடியக் கடவுமதி பாக

நெடிய நீடினம் நேரிழை மறந்தே.

485. அரும்படர் அவலம் அவளும் தீரப்

பெருந்தோள் நலம்வர யாமும் முயங்க

ஏமதி வலவ தேரே

மாருண்டு உகளும் மலரணிப் புறவே.

486. பெரும்புன் மாலை ஆனது நினைஇ

அரும்படர் உழைத்தல் யாவது என்றும்

புல்லி ஆற்றாப் புரையோள் காண

வன்புதெரிந்து ஊர்மதி வலவநின்

புள்ளியல் கலைமாப் பூண்டதேரே.

487. இதுமன் பிரிந்தோர் உள்ளும் பொழுதே

செறிதொடி உள்ளம் உவப்ப

மதியுடை வலவ ஏமதி தேரே.

488. கருவி வானம் பெயல் தொடங்கின்றே

பெருவிறல் காதலி கருதும் பொழுதே

விரிஉளை நன்மாப் பூட்டிப்

பருவரல் தீரக் கடவுமதி தேரெ.

489. அம்சிரை வண்டின் அரியினம் மொய்ப்ப

மெண்புல முல்லை மலரும்மாலைப்

பையுள் நெஞ்சின் தையல் உவப்ப

நுண்புரி வண்கயிறு இயக்கிநின்

வண்பரி நெடுந்தேர் கடவுமதி விரைந்தே.

490. அம்தீம் கிளவி தான்தர எம்வயின்

வந்தன்று மாதோ காரே ஆவயின்

ஆய்த்தொடி அரும்படர் தீர

ஆய்மணி நெடுந்தேர் கடவுமதி விரைந்தே.