ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு பாலை/ஓதலாந்தையார்/35.இளவேனி்ற் பத்து

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு[தொகு]

நான்காவது நூறு பாலை[தொகு]

பாடியவர்: ஓதலாந்தையார்[தொகு]

35.இளவேனிற் பத்து[தொகு]

341. அவரோ வாரார் தான்வந் தன்றே

குயிற்பெடை இன்குரல் அகவ

அயிர்க்கேழ் நுண்ணறல் நுடங்கும் பொழுதே.

342. அவரோ வாரார் தான்வந் தன்றே

சுரும்புகளித்து ஆலும் இருஞ்சினைக்

கருங்கால் நுணவம் கமழும் பொழுதே.

343. அவரோ வாரார் தான்வந் தன்றே

திணிநிலைக் கோங்கம் பயந்த

அணிமிகு கொழுமுகை உடையும் பொழுதே.

344. அவரோ வாரார் தான்வந் தன்றே

எழில்தகை இஅள்முலை பொலியப்

பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே.

345. அவரோ வாரார் தான்வந் தன்றே

வலஞ்சுரி மராஅம் வேய்ந்துநம்

மணங்கமழ் தண்பொழில் மலரும் பொழுதே.

346. அவரோ வாரார் தான்வந் தன்றே

அஞ்சினைப் பாதிரி அலர்ந்தெனச்

செங்கண இருங்குயில் அறையும் பொழுதே.

347. அவரோ வாரார் தான்வந் தன்றே

எழில்தகை இளமுலை பொலியப்

பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே.

348. அவரோ வாரார் தான்வந் தன்றே

வலஞ்சுரி மராஅம் வேய்ந்துநம்

மண்ங்கமழ் தண்பொழில் மலரும் பொழுதே.

349. அவரோ வாரார் தான்வந் தன்றே

பொரிகால் மாஞ்சினை புதைய

எரிகால் இளந்தளிர் ஈனும் பொழுதே.

350. அவரோ வாரார் தான்வந் தன்றே

வேம்பின் ஒண்பூ உறப்பத்

தேம்படு கிளவியவர்த் தெளீக்கும் போதே.