ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு முல்லை/பேயனார்/50.வரவுச்சிறப்புரைத்த பத்து

விக்கிமூலம் இலிருந்து
ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு[தொகு]

ஐந்தாவது நூறு முல்லை[தொகு]

பாடியவர்: பேயனார்[தொகு]

50.வரவுச் சிறப்புரைத்த பத்து[தொகு]

491. காரெதிர் காலையாம் ஓவின்று நலிய

஦நொந்துநொந்து உயவும் உள்ளமொடு

வம்தனெம் மடந்தைநின் ஏர்தர விரைந்தே.

492. நின்னே போலும் மஞ்ஞை ஆலநின்

நன்னுதல் நாறும் முல்லை மலர

நின்னே போல மாமருண்டு நோக்க

நின்னே உள்ளி வந்தனென்

ந்ன்னுதல் அரிவை காரினும் விரைந்தே.

493. ஏறுமுதண் சிறப்ப ஏறெதிர் இரங்க

மாதர் மான்பிணை மறியொடு மறுகக்

கார்தொடங் கின்றே காலை

நேரிறை முன்கைநின் உள்ளியாம் வரவே.

494. வண்டுதாது ஊதத் தேரை தெவிட்டத்

தண்கமழ் புறவின் முல்லிஅ மலர

இன்புறுத் தன்று பொழுதே

நின்குறை வாய்த்தனம் திர்கினிப் படரே.

495. செந்ந்நில மருங்கின் பல்மலர் தாஅய்ப்

புலம்தீர்ந்து இனிய வாயின புறவே

பின்னிருங் கூந்தல் நன்னலம் புனைய

உள்ளுதொறும் கவிழும் நெஞ்சமொடு

முளெயிற்று அரிவையாம் வந்த ஆறே.

496. மாபுதல் சேர வரகு இணர் சிறப்ப

மாமலி புலம்பக் கார்கலித்து அலைப்பப்

பேரமர்க்கண்ணி நின்பிரிந்து உறைநர்

தோள்துணை யாக வந்தனர்

போதுஅவிழ் கூந்தலும் பூவிரும் புகவே.

497. குறும்பல் கோதை கொன்றை மலர

நெடுஞ்செம் புற்றம் ஈயல் பகர

மாபசி மறுப்பக் கார்தொடங் கின்றே

பேரியல் அரிவைநின் உள்ளிப்

போர்வெம் குருசில் வந்த மாறே.

498. தோள்கவின் எய்தின தொடிநிலை நின்றன

நீள்வரி நெடுங்கண் வாள்வனப்பு உற்றன

வேந்துகோட்டு யானை வேந்துதொழில் விட்டென

விரைசெலல் நெடுந்தேர் கடைஇ

வரையக நாடன் வந்த மாறே.

499. பிடவம் மலரத் தளவம் நனையக்

கார்கவின் கொண்ட கானம் காணின்

வருந்துவள் பெரிதென அரும்தொழிற்கு அகலாது

வந்தனர் ஆல்நம் காதலர்

அம்தீம் கிளவிநின் ஆய்நலம் கொண்டே.

500. கொன்றைப் பூவின் பசந்த உண்கண்

குன்றக நெடுஞ்சுனைக் குவளை போலத்

தொல்கவின் பெற்றன இவட்கே வெல்போர்

வியன்நெடும் பாசறை நீடிய

வயமான் தோன்றல்நீ வந்த மாறே.

ஐங்குறுநூறு முல்லை முற்றும்[தொகு]

எட்டுத்தொகையுள் ஒன்றான ஐங்குறு நூறு முற்றிற்று[தொகு]