ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு மருதம்/ஓரம்போகியார்/8. புனலாட்டுப் பத்து

விக்கிமூலம் இலிருந்து
ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு[தொகு]

முதலாவது மருதம்[தொகு]

பாடியவர் ஓரம்போகியார்[தொகு]

8. புனலாட்டுப் பத்து[தொகு]

71. சூதார் குறுந்தொடிச் சூரமை நுடக்கத்து

நின்வெங் காதலி தழீஇ நெருநை

ஆடினை என்ப புனலே அலரே

மறைத்தல் ஒல்லுமோ மகிழ்ந

புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே.

72. வயல்மலர் ஆம்பல் கயில்அமை நுடங்குதலைத்

திதலை அல்குல் துயல்வரும் கூந்தல்

குவளை உண்கன் ஏஎர் மெல்லியல்

மலரார் மலிர்நிறை வந்தெனப்

புனலாடு புணர்துனை ஆயினள் எமக்கே.

73. வண்ண ஒந்தழை நுடங்க வாலிழை

ஒண்ணுதல் அரிவை பண்ணை பாய்ந்தெனக்

கள்நறுங் குவளை நாறித்

தண்ணென் றிசினே பெருந்துறைப் புனவே.

74. விசும்பிழி தோகைச் சீர்போன் றிசினே

பசும்பொன் அவிரிழை பைய நிழற்றக்

கரைசேர் மருதம் ஏறிப்

பண்ணை பாய்வோள் தண்ணறுங் கதுப்பே.

75. பலர் இவண் ஒவ்வாய் மகிழ்ந அதனால்

அலர்தொடங் கின்றால் ஊரே மலர

தொன்னிலை மருதத்துப் பெருந்துறை

நின்னோடு ஆடினள் தண்புனல் அதுவே.

76. பஞ்சாய்க் கூந்தல் பசுமலர்ச் சுணங்கின்

தண்புணல் ஆடித்தல் நல்ம்மேம் பட்டனள்

ஒள்தொடி மடவரால் நின்னோடு

அந்தர மகளிர்க்குத் தெய்வமும் போன்றே.

77. அம்ம வாழியோ மகிழ்நநின் மொழிவல்

பேரூர் அலர்எழ நீரலைக் கலங்கி

நின்னொடு தண்புணல் ஆடுதும்

எம்மோடு சென்மோ செல்லல்நின் மனையே.

78. கதிரிலை நெடுவேல் கடுமான் கிள்ளி

மதில்கொல் யானையின் கதழ்புநெறி வந்த

சிறையழி புதுப்புனல் ஆடுகம்

எம்மொடு கொண்மோஎம் தோள்புரை புனையே.

79. புதுப்புனல் ஆடி அமர்த்த கண்ணள்

யார்மகள் இவளெனப் பற்றிய மகிழ்ந

யார்மகள் ஆயினும் அறியா

நீயார் மகனைஎம் பற்றியோயே.

80. புலக்குவேம் அல்லேம் பொய்யாது உரைமோ

நலத்தகு மகளிர்க்குத் தோள்துணை யாகித்

தலைப்பெயல் செம்புனல் ஆடித்

தவநனி சிவந்தன மகிழ்நநின் கண்ணே.