ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு மருதம்/ஓரம்போகியார்/9. புலவி விராய பத்து

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு[தொகு]

முதலாவது மருதம்[தொகு]

பாடியவர் ஓரம்போகியார்[தொகு]

9. புலவி விராய பத்து[தொகு]

81. குருகு உடைத் தூண்ட வெள் அகட்டு யாமை

அரிப்பறை வினைஞர் அல்குமிசை கூட்டும்

மலரணி வாயில் பொய்கை ஊரநீ

என்னை நயந்தனென் என்றநின்

மனையோள் கேட்கின் வருந்துவள் பெரிதே.

82. வெகுண்டனள் என்ப பாணநின் தலைமகள்

மகிழ்நன் மார்பின் அவிழினர் நறுந்தார்த்

தாதுன் பறவை வந்துஎம்

போதார் கூந்தல் இருந்தன எனவே.

83. மணந்தனை அருளாய் ஆயினும் பையத்

தணந்தனை யாகி உய்ம்மோ நும்மூர்

ஒண்தொடி முன்கை ஆயமும்

தண்துறை யூரன் பண்டெனப் படற்கே.

84. செவியிற் கேட்பினும் சொல்லிறந்து வெகுள்வோள்

கண்ணிற் காணின் எனா குவள்கொல்

நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்

தைஇத் தண்கயம் போலப்

பலர்படிந்து உண்ணுநின் பரத்தை மார்பே.

85. வெண்நுதல் கம்புள் அரிக்குரல் பேடை

தண்நறும் பழனத்துக் கிளையோடு ஆலும்

மறுவில் யானர்மலிகேழ் ஊரநீ

சிறுவரின் இனைய செய்தி

நகாரோ பெருமநின் கண்டிசி ணோரே.

86. வெண்தலைக் குருகின் மென்பறை விளிக்குறல்

நீள்வயல் நண்ணி இமிழும் ஊர

எம் இவன் நல்குதல் அரிது

நும்மனை மடந்தையொடு தலைப்பெய் தீமே.

87. பகன்றைக் கண்ணிப் பல்ஆன் கோவலர்

கரும்பு குணிலா மாங்கனி யுதிர்க்கும்

யாணர் ஊரைநின் மனையோள்

யாரையும் புலக்கும் எம்மைமற் றெவனோ.

88. வண்டுறை நயவரும் வளமலர்ப் பொய்கைத்

தண்துறை யூரனை எவ்வை எம்வயின்

வருதல் வேண்டுதும் என்ப

தொல்லேம் போல்யாம் அதுவேண் டுதுமே.

89. அம்மவாழி பாண எவ்வைக்கு

எவன் பெரி தளிக்கும் என்ப பழனத்து

வண்டு தாதூதும் ஊரன்

பெண்டென விரும்பின்று அவள்தன் பண்பே.

90. மகிழ்நன் மாண்குணம் வண்டுகொண் டனகொல்

வண்டின் மாண்குணம் மகிழ்நன்கொண் டான்கொல்

அன்ன தாகலும் அறியாள்

எம்மொடு புலக்கும்அவன் புதல்வன் தாயே.