ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு மருதம்/ஓரம்போகியார்/2. வேழப் பத்து

விக்கிமூலம் இலிருந்து
ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு[தொகு]

முதலாவது நூறு மருதம்[தொகு]

பாடியவர் ஓரம்போகியார்[தொகு]

2.வேழப் பத்து (11-20)[தொகு]

11. மனைநடு வயலை வேழஞ் சுற்றும்

துறைகேழ் ஊரன் கொடுமை நாணி

நல்லன் என்றும் யாமே

அல்லன் என்னுமென் தடமென் தோளே.

12. கரைசேர் வேழம் கரும்பிற் பூக்கும்

துறைகேழ் ஊரன் கொடுமை நன்றும்

ஆற்றுக தில்ல யாமே

தோற்கதில்லஎன் தடமென் தோளே.

13. பரியுடை நன்மான் பொங்குளை யன்ன

வடகரை வேழம் வெண்பூப் பகரும்

தண்துறை யூரண் பெண்டிர்

துஞ்சூர் யாமத்துந் துயலறி யலரே

14. கொடிப்பூ வேழம் தீண்டி அயல

வடுக்கொண் மாஅத்து வண்தளிர் நுடங்கும்

மணித்துறை வீரன் மார்பே

பனித்துயில் செய்யும் இன்சா யற்றே.

15. மண்லாடு மலிர்நிறை விரும்பிய ஒண்தழைப்

புனலாடு மகளிர்க்குப் புணர்துணை உதவும்

வேழ மூதூர் ஊரன்

ஊரன் ஆயினும் ஊரனல் லன்னே.

16. ஓங்குபூ வேழத்துத் தூம்புடைத் திரள்கால்

சிறுதொழு மகளிர் அஞ்சனம் பெய்யும்

பூக்கஞல் ஊரனை யுள்ளிப்

பூப்போல் உண்கண் பொன்போர்த் தனவே.

17. புதன்மிசை நுடங்கும் வேழ வெண்பூ

விசும்பாடு குருகின் தன்றும் ஊரன்

புதுவோர் மேவலன் ஆகலின்

வறிதா கின்றுஎன் மடங்கெழு நெஞ்சே.

18. இருஞ்சா யன்ன செருந்தியொடு வேழம்

கரும்பின் அலம்ரும் கழனி ஊரன்

பொருந்து மல ரன்னஎன் கண்ணழப்

பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே.

19. எக்கர் மாஅத்துப் புதுப்பூம் பெருஞ்சினை

புணர்ந்தோர் மெய்ம்மணங்க் கமழும் தண்பொழில்

வேழவெண்பூ வெள்ளுகை சீக்கும்

ஊரன் ஆகலின் கலங்கி

மாரி மலரின் கண்பனி யுகுமே.

20. அறுசில் கால அஞ்சிறைத் தும்பி

நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும்

காம்புகண் டன்ன தூம்புடை வேழத்துத்

துறைநணி யூரனை உள்ளியென்

இறையேர் எல்வளை நெகிழ்புஓ டும்மே.