ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு நெய்தல்/அம்மூவனார்/19.நெய்தற் பத்து

விக்கிமூலம் இலிருந்து
ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு[தொகு]

இரண்டாவது நூறு நெய்தல்[தொகு]

பாடியவர்: அம்மூவனார்[தொகு]

19.நெய்தற் பத்து[தொகு]

181. நெய்தல் உண்கண் ஏர் இறைப் பணைந்தோள்

பொய்தல் ஆடிய பொய்யா மகளிர்

குப்பை வெண்மணல் குரவை நிறூஉந்

துறைகெழு கொண்கன் நல்கி

உறைவுஇனிது அம்மஇவ் அழுங்கள் ஊரே.

182. நெய்தல் நறுமலர் செருந்தியொடு விரைஇக்

கைபுனை நறுந்தார் கமழும் மார்பன்

அருந்திறல் கடவுள் அல்லன்

பெருந்துறைக் கண்டுஇவள் அணங்கி யோனே.

183. கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன்

குறும்பொறை நாடன் நல்வய லூரன்

தண்கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற்

கடும்பகல் வருதி கையறு மாலை

கொடுங்கழி நெய்தலும் கூம்பக்

காலை வரினும் களைஞரோ இலரே.

184. நெய்தல் இருங்கழி நெய்தல் நீக்கி

மீனுநுண் குருகுஇளங் கானல் அல்கும்

கடல்அணிந் தன்றுஅவர் ஊரே

கடலினும் பெரிதுஎமக்கு அவருடை நட்பே.

185. அலங்கிதழ் நெய்தல் கொற்கை முன்துறை

இலங்குமுத்து உறைக்கும் எயிறுகெழு துவர்வாய்

அரம்போழ் அவ்வளைக் குறுமகள்

நரம்புஆர்த் தன்ன தீங்கிள வியனே.

186. நாரை நல்லினம் கடுப்ப மகளிர்

நீர்வார் கூந்தல் உளரும் துறைவ

பொங்குழி நெய்தல் உறைப்ப இத்துறை

பல்கால் வரூஉம் தேரெனச்

செல்வா தீமோ என்றனள் யாயே.

187. நொதும லாளர் கொள்ளார் இவையே

எம்மொடு வந்து கடலாடு மகளிரும்

நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார்

உடலகம் கொள்வோர் இன்மையின்

தொடலைக் குற்ற சிலபூ வினரே.

188. இருங்கழிச் சேயிறா இனப்புன் ஆரும்

கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை

வைகறை மலரும்நெய்தல் போலத்

தகைபெரி துடை காதலி கண்ணே.

189. புன்னை நுன்தாது உறைத்தரு நெய்தல்

பொன்படு மணியில் பொற்பத் தோன்றும்

மெல்லம் புலம்பன் வந்தென

நல்லன வாயின தோழியென் கண்ணே.

190. தண்ணறு நெய்தல் தளையவிழ் வான்பூ

வெண்ணெல் அரிநர் மாற்றினர் அறுக்கும்

மெல்லம் புலம்பன் மன்றஎம்

பல்லிதழ் உண்கண் பனிசெய் தோனே.