ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு முல்லை/பேயனார்/44.புறவணிப் பத்து

விக்கிமூலம் இலிருந்து
ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு[தொகு]

ஐந்தாவது நூறு முல்லை[தொகு]

பாடியவர்: பேயனார்[தொகு]

44.புறவணிப் பத்து[தொகு]

431. நன்றே காதலர் சென்ற ஆறே

அணிநிற இரும்பொறை மீமிசை

மணிநிற உருவின தோகையும் உடைத்தே.

432. நன்றே காதலர் சென்ற ஆறே

சுடுபொன் அன்ன கொன்றை சூடிக்

கடிபுகு வனர்போல் மள்ளரும் உடைத்தே

433. நன்றே காதலர் சென்ற ஆறே

நீர்ப்பட எழிலி வீசும்

கார்ப்பெயற்கு எதிரிய கானமும் உடைத்தே.

434. நன்றே காதலர் சென்ற ஆறே

மறியுடை மாண்பிணை உகளத்

தண்பெயல் பொழிந்த இன்பமும் உடைத்தே.

435. நன்றே காதலர் சென்ற ஆறே

நிலன் அணி நெய்தல் மலரப்

பொலன்அணி கொன்றையும் பிடவமும் உடைத்தே.

436. நன்றே காதலர் சென்ற ஆறே

நன்பொன் அன்ன சுடரிணர்க்

கொன்றையொடு மலர்ந்த குருந்துமா ருடைத்தே.

437. நன்றே காதலர் சென்ற ஆறே

ஆலித் தண்மழை தலைஇய

வாலிய மலர்ந்த முல்லையும் உடைத்தே.

438. நன்றே காதலர் சென்ற ஆறே

பைம்புதல் பம்பூ மலர

இன்புறத் தருந பண்புமார் உடைத்தே.

439. நன்றே காதலர் சென்ற ஆறே

குருந்தக் கண்ணிக் கோவலர்

பெருந்தண் நிலைய பாக்கமும் உடைத்தே.

440. நன்றே காதலர் சென்ற ஆறே

தன்பெயல் அளித்த பொழுதின்

ஒண்சுடர்த் தோன்றியும் தளவமும் உடைத்தே.